NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்திய இருமல் மருந்துகளுக்கு தடை: உலக சுகாதார நிறுவனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய இருமல் மருந்துகளுக்கு தடை: உலக சுகாதார நிறுவனம்
    அம்ப்ரோனால் சிரப், DOK-1 மேக்ஸ் சிரப் ஆகிய இரண்டு தயாரிப்புகளுக்கான எச்சரிக்கை

    இந்திய இருமல் மருந்துகளுக்கு தடை: உலக சுகாதார நிறுவனம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 12, 2023
    02:41 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய இருமல் மருந்துகளைக் குடித்ததால் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த 19 குழந்தைகள் உயிரிழந்ததாக சமீபத்தில் அந்நாடு இந்தியாவின் மீது குற்றம் சாட்டி இருந்தது.

    உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் இயங்கி வரும் மேரியான் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த மருந்துகளாலேயே இந்த சர்ச்சை எழுந்தது.

    இந்த குழந்தைகள் உயிரிழப்பு குறித்து உஸ்பெகிஸ்தான் வெளியிட்டிருந்த அறிக்கையில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Doc-1 Max என்னும் மருந்தை குடித்ததால் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

    இந்த மருந்தை ஆய்வு செய்த போது, இதில் எத்திலின் க்ளைக்கால் என்ற நச்சுப் பொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது." என்று கூறி இருந்தது.

    இதனையடுத்து, இந்த நிறுவனத்தின் நொய்டா கிளையில் அனைத்து தயாரிப்பு பணிகளும் இந்திய அரசால் நிறுத்தப்பட்டது.

    இருமல் மருந்து

    உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

    அம்ப்ரோனால் சிரப் மற்றும் DOK-1 மேக்ஸ் சிரப் ஆகிய இரண்டு தயாரிப்புகளின் உற்பத்தியாளர் மேரியான் பயோடெக் (உத்தர பிரதேசம், இந்தியா) என்ற நிறுவனமாகும். இன்றுவரை, இந்த உற்பத்தியாளர் குறிப்பிட்ட மருந்து தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து WHOக்கு உத்தரவாதத்தை வழங்கவில்லை.

    இந்த இரண்டு தயாரிப்புகளிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் / அல்லது எத்திலீன் கிளைகோல் ஆகிய நச்சு பொருட்கள் கலந்திருப்பதை உஸ்பெகிஸ்தான் கண்டறிந்தது.

    இந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தரமற்ற தயாரிப்புகள் பாதுகாப்பற்றவை மற்றும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை.

    போதிய ஆவணங்களை வழங்காததால் மேரியான் பயோடெக் நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை நிறுத்திவிட்டோம்.

    அதனால், சந்தைகளில் இந்த மருந்துகள் கிடைத்தாலும் அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! இந்தியா
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! பயனர் பாதுகாப்பு
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்

    இந்தியா

    ஹல்த்வானியின் 4,000 குடும்பங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி! இந்தியா
    இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி வங்கிக் கணக்கு
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் காவல்துறை
    கொரோனாவால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா? கொரோனா

    உலகம்

    விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படுகிறோம் - ஆப்கான் பெண்கள் வேதனை இந்தியா
    ஜப்பானில் ஒரே நாளில் 371 பேர் மரணம்-சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு கொரோனா
    உலகின் சிறந்த 50 உணவுகள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய உணவு தான்! உலக செய்திகள்
    போர் விமானங்களை தைவான் நோக்கி பறக்கவிடும் சீனா! சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025