NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்திய இருமல் மருந்தால் 18 குழந்தைகள் பலி - உஸ்பெகிஸ்தான் அறிக்கை
    உலகம்

    இந்திய இருமல் மருந்தால் 18 குழந்தைகள் பலி - உஸ்பெகிஸ்தான் அறிக்கை

    இந்திய இருமல் மருந்தால் 18 குழந்தைகள் பலி - உஸ்பெகிஸ்தான் அறிக்கை
    எழுதியவர் Sindhuja SM
    Dec 29, 2022, 12:10 pm 1 நிமிட வாசிப்பு
    இந்திய இருமல் மருந்தால் 18 குழந்தைகள் பலி - உஸ்பெகிஸ்தான் அறிக்கை
    மேரியான் பயோடெக் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Doc-1 Max இருமல் மருந்து(படம்: India Today)

    இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்தால் தங்கள் நாட்டில் 18 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக உஸ்பெகிஸ்தான் அரசு இந்தியாவின் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. உ.பி. மாநிலம் நொய்டாவில் இயங்கி வரும் மேரியான் பயோடெக் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Doc-1 Max இருமல் மருந்தால் உஸ்பெகிஸ்தான் நாட்டில் பெரும் பரபரப்பு ஏறட்டுள்ளது. இது குறித்து உஸ்பெகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Doc-1 Max என்னும் மருந்தை குடித்ததால் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த மருந்தை ஆய்வு செய்த போது, இதில் எத்திலின் க்ளைக்கால் என்ற நச்சுப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, புழக்கத்தில் இருந்த Doc-1 Max மருந்தை அரசு முடங்கியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த குற்றசாட்டை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு கூட்டமைப் விசாரித்து வருகிறது.

    காம்பியாவில் 66 குழந்தைகள் பலியான சம்பவம்:

    இதே போன்ற சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா என்னும் நாட்டிலும் நடந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளால் 66 குழந்தைகள் உயிரிழந்ததாக அப்போது காம்பியா அரசு குற்றம்சாட்டியது. மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனம், கெட்டுப்போன 4 இருமல் மருந்துகளை காம்பியாவிற்கு அனுப்பி இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய விசாரணையில், மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் நிறுவனம் கெட்டுப்போன மருந்துகளை ஏற்றுமதி செய்திருப்பது உறுதியானது. இது போன்ற மாசுபட்ட இந்திய மருந்துகள் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம் என்பதால் உலக சுகாதார நிறுவனம் இது குறித்து ஒரு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், அதேபோன்ற ஒரு நிகழ்வு உஸ்பெகிஸ்தான் நாட்டிலும் நடந்திருப்பதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    ஆரோக்கியம்
    உடல் நலம்
    உலகம்
    இந்தியா

    சமீபத்திய

    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இளையராஜா
    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு இந்தியா
    சமந்தாவின் மாஜி கணவர், பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலா? வைரலாகும் புகைப்படங்கள் சமந்தா ரூத் பிரபு

    ஆரோக்கியம்

    விமான பயணத்திற்கு முன்னர், நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பயண குறிப்புகள்
    பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகள் ஈஸியாக கற்றுக்கொள்ளும் கெட்ட பழக்கங்கள் குழந்தை பராமரிப்பு
    மென்ஸ்சுரல் கப் என்றால் என்ன? அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் பெண்கள் ஆரோக்கியம்
    உங்கள் உடல்நலப் பிரச்சினைகளை பற்றி வெளிப்படுத்தும் உங்கள் தலைமுடி! முடி பராமரிப்பு

    உடல் நலம்

    டிஜிட்டல் திரை ஒளி, உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது எனத்தெரியுமா? உடல் ஆரோக்கியம்
    அரிசி vs கோதுமை: எடை இழப்பிற்கு சிறந்த உணவு எது உடல் பருமன்
    நாள்பட்ட சோர்வு நோய்க்குறியின் அறிகுறிகளும், அதன் காரணங்களும் உடல் ஆரோக்கியம்
    சுற்றுலாவின் போது நீங்கள் நோய்வாய்ப்படுவதை எவ்வாறு தவிர்க்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள் சுற்றுலா

    உலகம்

    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி பிலிப்பைன்ஸ்
    சியாட்டல்: சாதிய பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டம் அமலுக்கு வந்தது அமெரிக்கா
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்

    இந்தியா

    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்
    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் நாடாளுமன்றம்
    இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% வரை உயருகிறது இந்தியா

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023