இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது
செய்தி முன்னோட்டம்
இண்டர்போலின் 'ரெட் நோட்டீஸ்' கண்காணிப்புப் பட்டியலில் இருந்த சீக்கிய தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேர், பிலிப்பைன்ஸ் அரசு நிறுவனங்களின் கூட்டு நடவடிக்கையின் போது இந்த மாதம் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
பிலிப்பைன்ஸ் குடியேற்றப் பணியகம், சைபர் கிரைம் விசாரணை & ஒருங்கிணைப்பு மையம்(CICC) மற்றும் ராணுவப் புலனாய்வுக் குழு ஆகியவற்றின் அதிகாரிகள் சீக்கிய தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் 20 வயதுக்கு உட்பட்ட இந்திய குடிமகன்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிலிப்பைன்ஸ் நகரமான இலாய்லோவில் திங்களன்று நடந்த ஒரு கூட்டு நடவடிக்கையின் போது, CICC நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டர் ராமோஸ் இந்த தகவலை கூறினார்.
இந்தியா
தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் புலிப் படையை(KTF) சேர்ந்த மூவர்
மார்ச் 7 அன்று விடியற்காலையில் நகரத்தின் ஒரு பிரத்யேக உட்பிரிவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு ஆயுதம் ஏந்திய துருப்புக்களுடன் சென்ற அதிகாரிகள், தீவிரவாதிகளை பிடித்ததாக ராமோஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள், மன்பிரீத் சிங்(23), அம்ரித்பால் சிங்(24), மற்றும் அர்ஷ்தீப் சிங்(26) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மூவரும் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் புலிப் படையை (KTF) சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்டர்போல் 'ரெட் நோட்டீஸ்' கண்காணிப்புப் பட்டியலில் இருந்த இந்த சந்தேக நபர்கள் போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் நுழைந்தனர்.
அவர்கள் மீது கொலை, வெடி பொருட்கள் சட்டம் 2001 மற்றும் இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967 ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.