NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது
    கைது செய்யப்பட்ட மூன்று பேரும் 20 வயதுக்கு உட்பட்ட இந்தியா குடிமகன்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Mar 28, 2023
    05:59 pm

    செய்தி முன்னோட்டம்

    இண்டர்போலின் 'ரெட் நோட்டீஸ்' கண்காணிப்புப் பட்டியலில் இருந்த சீக்கிய தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேர், பிலிப்பைன்ஸ் அரசு நிறுவனங்களின் கூட்டு நடவடிக்கையின் போது இந்த மாதம் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

    பிலிப்பைன்ஸ் குடியேற்றப் பணியகம், சைபர் கிரைம் விசாரணை & ஒருங்கிணைப்பு மையம்(CICC) மற்றும் ராணுவப் புலனாய்வுக் குழு ஆகியவற்றின் அதிகாரிகள் சீக்கிய தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மூன்று பேரும் 20 வயதுக்கு உட்பட்ட இந்திய குடிமகன்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய பிலிப்பைன்ஸ் நகரமான இலாய்லோவில் திங்களன்று நடந்த ஒரு கூட்டு நடவடிக்கையின் போது, ​​CICC நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டர் ராமோஸ் இந்த தகவலை கூறினார்.

    இந்தியா

    தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் புலிப் படையை(KTF) சேர்ந்த மூவர்

    மார்ச் 7 அன்று விடியற்காலையில் நகரத்தின் ஒரு பிரத்யேக உட்பிரிவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு ஆயுதம் ஏந்திய துருப்புக்களுடன் சென்ற அதிகாரிகள், தீவிரவாதிகளை பிடித்ததாக ராமோஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சந்தேக நபர்கள், மன்பிரீத் சிங்(23), அம்ரித்பால் சிங்(24), மற்றும் அர்ஷ்தீப் சிங்(26) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    இந்த மூவரும் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் புலிப் படையை (KTF) சேர்ந்தவர்கள் ஆவர்.

    இன்டர்போல் 'ரெட் நோட்டீஸ்' கண்காணிப்புப் பட்டியலில் இருந்த இந்த சந்தேக நபர்கள் போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் நுழைந்தனர்.

    அவர்கள் மீது கொலை, வெடி பொருட்கள் சட்டம் 2001 மற்றும் இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967 ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிலிப்பைன்ஸ்
    உலகம்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    இந்தியா

    மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பிரிசில்லாவுக்கு 3வது குழந்தை பிறப்பு! மெட்டா
    தொடர்ந்து ஏற்றத்துக்குபின் சரிந்த தங்கம் விலை! இன்றைய விபரம் தங்கம் வெள்ளி விலை
    SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க... வங்கிக் கணக்கு
    பஜாஜ் பல்சர் 220F Vs TVS அப்பாச்சி RTR 200 4V - சிறந்த பைக் எது? பைக் நிறுவனங்கள்

    பிலிப்பைன்ஸ்

    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி உலகம்

    உலகம்

    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக் உலக செய்திகள்
    இதென்ன ஆச்சரியம்! கொண்டாடும் நாட்களில் கூட ஒரு உணவுச்சங்கிலி இணைப்பு வருகிறதே! வைரல் செய்தி
    சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியா
    இன்று சர்வதேச வனங்கள் தினம் 2023 : வனங்களின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025