NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்
    இந்தியாவின் எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்

    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 12, 2025
    10:22 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க அறிக்கையில், நாட்டின் எல்லைகள் மற்றும் கடற்கரையை கண்காணிக்க குறைந்தபட்சம் 10 இந்திய செயற்கைக்கோள்கள் தற்போது 24 மணி நேரமும் இயங்கி வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.

    மணிப்பூரின் இம்பாலில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் 5வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசியபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

    நாட்டின் 7,000 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை மற்றும் வடக்கு எல்லைகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த செயற்கைக்கோள்களின் மூலோபாய முக்கியத்துவத்தை நாராயணன் குறிப்பிட்டார்.

    "நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமானால், நமது செயற்கைக்கோள்கள் மூலம் சேவை செய்ய வேண்டும்." என்று அவர் கூறி, தடையற்ற கண்காணிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.

    தொழில்நுட்பங்கள்

    தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் தொழில்நுட்பத்தின் பங்கு

    தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, குறிப்பாக நடந்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களை எதிர்கொள்ள, செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்கள் இன்றியமையாதவை என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் மேலும் சுட்டிக்காட்டினார்.

    அண்டை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை அவர் குறிப்பிட்டு, இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பிற்கு வலுவான விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு திறன்கள் அவசியம் என்று வலியுறுத்தினார்.

    இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் முன்னேற்றங்களுக்கு பங்களிக்க இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் ஒரு தளமாகவும் அவரது பட்டமளிப்பு உரை அமைந்தது.

    நாராயணனின் கருத்துக்கள் இஸ்ரோவின் விண்வெளி முயற்சிகளை வெறும் விண்வெளி ஆய்வு மட்டும் இல்லாமல், தேசிய பாதுகாப்பிற்கான மூலோபாய இலக்குகள் உள்ளிட்ட பரந்த நோக்கத்துடன் இணைக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    செயற்கைகோள்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ
    இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இந்தியா
    குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த விசா விதிகளை மாற்றும் இங்கிலாந்து இங்கிலாந்து
    ஆப் சிந்தூரில், கராச்சியைத் தாக்க இந்திய கடற்படை தயாராக இருந்தது: துணை அட்மிரல் ஆபரேஷன் சிந்தூர்

    இஸ்ரோ

    விண்வெளியில் முதல் இலைகளை துளிர்த்த இஸ்ரோவின் தாவரங்கள்! விண்வெளி
    இஸ்ரோவின் புதிய தலைவராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த  டாக்டர் வி.நாராயணன் நியமனம்! தமிழ்நாடு
    இஸ்ரோவின் புதிய தலைவர் வி. நாராயணன்: இந்தியாவின் நிலவு பயணத்தை சாத்தியமாக்கிய கன்னியாகுமரியின் மைந்தன் கன்னியாகுமரி
    இஸ்ரோவின் SpaDeX செயற்கைக்கோள்கள் நாளை இணைக்கப்படுகின்றன: நிகழ்வை எப்போது, ​​எப்படி பார்ப்பது செயற்கைகோள்

    செயற்கைகோள்

    'ஸ்டார்லிங்க் மினி': பேக் பேக் அளவிலான ஸ்பேஸ்எக்ஸ் மினி செயற்கைக்கோள் இணைய ரௌட்டர் அறிமுகம் எலான் மஸ்க்
    செயற்கைக்கோள் உடைந்ததால், ஸ்டார்லைனரில் தங்கவைக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் குழு சர்வதேச விண்வெளி நிலையம்
    இஸ்ரோவின் பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள்: இந்த தேதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது  இஸ்ரோ
    புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவியது இஸ்ரோ; SSLV-D3 ராக்கெட்டின் இறுதிக்கட்ட சோதனையும் வெற்றி  இஸ்ரோ

    தொழில்நுட்பம்

    நிதி சேவைகளை மேம்படுத்த ஏஐ ஸ்டார்ட்அப் பெர்ப்ளெக்ஸிட்டியுடன் கூட்டு சேர்ந்தது பேடிஎம் பேடிஎம்
    அருகருகே வந்த ஏழு கோள்கள்; அரிய வானியல் நிகழ்வை படம் வானியல் பிடித்த புகைப்படக் கலைஞர் வானியல்
    இஸ்ரோவின் மென்பொருள்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்படுவதாக முன்னாள் தலைவர் சோமநாத் தகவல் இஸ்ரோ
    இந்திய ஏஐ ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்க டுகெதர் ஏஐ ஸ்டுடியோவை தொடங்கும் ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம் செயற்கை நுண்ணறிவு

    தொழில்நுட்பம்

    பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் ஐந்து புதிய அப்டேட்கள்; அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    கன்டென்ட் விதி மீறலுக்காக 9.5 மில்லியன் வீடியோக்களை நீக்கியது யூடியூப்; இந்தியாவில் மட்டும் 3 மில்லியன் யூடியூப்
    வாட்ஸ்அப் குரூப்களின் ப்ரொஃபைல் படத்தை இனி ஏஐ மூலம் உருவாக்கலாம்; புதிய அப்டேட் வெளியீடு வாட்ஸ்அப்
    ஸ்பேம் மெசேஜ்களை கட்டுப்படுத்த புதிய அப்டேட்களை வெளியிட்டது டெலிகிராம் டெலிகிராம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025