மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள்
மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக 7432 சார்ஜிங் நிலையங்களை அமைக்க மத்திய அரசு ரூ. 800 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார். இந்த சார்ஜிங் நிலையங்கள் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தூஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் மூலம் அமைக்க உள்ளனர். ஏற்கனவே நாடு முழுவதும் 6,586 சார்ஜிங் நிலையங்கள் உள்ளது. மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக பேம் இந்தியா-வின் இரண்டாம் கட்டத்திட்டத்தின் கீழ் இந்த நிதி அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.560 கோடி முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் எனக்கூறப்படுகிறது. மினிபஸ்கள் மின்சார வாகனமும் இதில் சார்ஜ் செய்துகொள்ள முடியும்.