Page Loader
100க்கும் மேற்பட்ட தனது குழந்தைகளுக்கு $17 பில்லியன் சொத்தை உயில் எழுதி வைத்த டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்
100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு $17 பில்லியன் சொத்தை உயில் எழுதிய டெலிகிராம் நிறுவனர்

100க்கும் மேற்பட்ட தனது குழந்தைகளுக்கு $17 பில்லியன் சொத்தை உயில் எழுதி வைத்த டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 20, 2025
02:39 pm

செய்தி முன்னோட்டம்

டெலிகிராமின் பில்லியனர் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பாவெல் துரோவ், தனது 17 பில்லியன் டாலர் சொத்து முழுவதையும் தன்னை தந்தையாகக் கொண்ட 106 குழந்தைகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

பிரான்சின் லெ பாயிண்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், பாவெல் துரோவ் அதிகாரப்பூர்வமாக மூன்று துணைகள் மூலம் பிறந்த ஆறு குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்தாலும், 12 நாடுகளில் விந்தணு தானம் மூலம் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாக உள்ளதை உறுதிப்படுத்தினார்.

தனது இணைகள் மூலம் பிறந்த மற்றும் தானம் பெற்ற குழந்தைகளுக்கு இடையில் எந்த வேறுபாட்டையும் காணவில்லை என்றும், அனைவருக்கும் சம உரிமைகளை உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

சொத்துக்கள்

சொத்துக்கள் பயன்படுத்துவதற்கு நிபந்தனை

வாழ்க்கையில் தான் எதிர்கொண்டு வரும் நிச்சயமற்ற தன்மை காரணமாக தனது விருப்பதை உயிலாக ஏற்கனவே தயாரித்துவிட்டதாக பாவெல் துரோவ் அதில் கூறியுள்ளார்.

மேலும் தனது அனைத்து குழந்தைகளும் சொத்துக்களில் பயனாளிகளாக இருந்தாலும், குறைந்தது 30 ஆண்டுகளுக்கு அவர்கள் பரம்பரைச் சொத்தில் எந்தப் பகுதியையும் பெற மாட்டார்கள் என்றும் தெளிவுபடுத்தினார்.

அவர்கள் சொந்தமாக வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்றும், பரம்பரைச் செல்வத்தை மட்டுமே நம்பியிருக்கக்கூடாது என்றும் அவர் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

வழக்கத்திற்கு மாறான வாழ்க்கை முறை மற்றும் வலுவான தனிப்பட்ட ஒழுக்கத்திற்காக அறியப்பட்ட 40 வயதான பாவெல் துரோவ், தினசரி 300 புஷ்-அப்கள் மற்றும் 300 ஸ்குவாட்கள் செய்யும் உடற்பயிற்சி வழக்கத்தை பராமரிக்கிறார். மேலும் மது, தேநீர் மற்றும் காபியைத் தவிர்க்கிறார்.