Page Loader
பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது  சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி
சிறுவனின் பெற்றோர் கடந்த ஆண்டு மே மாதம் மிசிசிப்பியில் உயிரிழந்தனர்.

பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி

எழுதியவர் Sindhuja SM
Mar 29, 2023
05:30 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் பெற்றோரின் மரணத்தால் அனாதையான இரண்டு வயது சிறுவனை வீட்டிற்கு அழைத்து வர, மத்திய அரசின் சட்ட மற்றும் தூதரக உதவி உட்பட அனைத்து ஆதரவும் கோரப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் இந்தப் பிரச்னையை முன்வைக்க வேண்டும் என்றும், தற்போது பக்கத்து வீட்டுக்காரரின் பராமரிப்பில் இருக்கும் சிறுவனை விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் இன்று(மார் 29) தெரிவித்தார். சிறுவனின் பெற்றோர் கடந்த ஆண்டு மே மாதம் மிசிசிப்பியில் உயிரிழந்தனர். அதன் பின்னர், சிறுவனின் அத்தை, தாத்தா மற்றும் பாட்டி அவனை மீட்க போராடி வருகின்றனர்.

இந்தியா

பிறப்பால் அமெரிக்கக் குடிமகனான சிறுவனை மீட்பது எப்படி

சிறுவனின் அத்தை, சட்டபூர்வ கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து, மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் குடியுரிமை பெறாத தமிழர் நலனுக்கான அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், மதுரையைச் சேர்ந்த குடும்பத்திற்கு ஆதரவு கரம் நீட்ட நடவடிக்கை எடுக்குமாறு குடியிருப்போர் அல்லாத தமிழர் நல வாரியத்திற்கு அறிவுறுத்தினார். அதன்படி, அடுத்து என்ன செய்வது என்பதை குறித்து விவாதிக்க, வடஅமெரிக்காவின் டென்னிசியில் உள்ள, வடஅமெரிக்க தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகளுடன், வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, ஆலோசனை நடத்தினார். "சிறுவன் பிறப்பால் அமெரிக்கக் குடிமகன் என்பதால், இந்தப் பிரச்சினையை சட்டப்பூர்வமாக எப்படி அணுகுவது என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது," என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.