NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி
    இந்தியா

    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி

    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி
    எழுதியவர் Sindhuja SM
    Mar 29, 2023, 05:30 pm 0 நிமிட வாசிப்பு
    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது  சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி
    சிறுவனின் பெற்றோர் கடந்த ஆண்டு மே மாதம் மிசிசிப்பியில் உயிரிழந்தனர்.

    அமெரிக்காவில் பெற்றோரின் மரணத்தால் அனாதையான இரண்டு வயது சிறுவனை வீட்டிற்கு அழைத்து வர, மத்திய அரசின் சட்ட மற்றும் தூதரக உதவி உட்பட அனைத்து ஆதரவும் கோரப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் இந்தப் பிரச்னையை முன்வைக்க வேண்டும் என்றும், தற்போது பக்கத்து வீட்டுக்காரரின் பராமரிப்பில் இருக்கும் சிறுவனை விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் இன்று(மார் 29) தெரிவித்தார். சிறுவனின் பெற்றோர் கடந்த ஆண்டு மே மாதம் மிசிசிப்பியில் உயிரிழந்தனர். அதன் பின்னர், சிறுவனின் அத்தை, தாத்தா மற்றும் பாட்டி அவனை மீட்க போராடி வருகின்றனர்.

    பிறப்பால் அமெரிக்கக் குடிமகனான சிறுவனை மீட்பது எப்படி

    சிறுவனின் அத்தை, சட்டபூர்வ கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து, மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் குடியுரிமை பெறாத தமிழர் நலனுக்கான அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், மதுரையைச் சேர்ந்த குடும்பத்திற்கு ஆதரவு கரம் நீட்ட நடவடிக்கை எடுக்குமாறு குடியிருப்போர் அல்லாத தமிழர் நல வாரியத்திற்கு அறிவுறுத்தினார். அதன்படி, அடுத்து என்ன செய்வது என்பதை குறித்து விவாதிக்க, வடஅமெரிக்காவின் டென்னிசியில் உள்ள, வடஅமெரிக்க தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகளுடன், வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, ஆலோசனை நடத்தினார். "சிறுவன் பிறப்பால் அமெரிக்கக் குடிமகன் என்பதால், இந்தப் பிரச்சினையை சட்டப்பூர்வமாக எப்படி அணுகுவது என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது," என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    தமிழ்நாடு
    அமெரிக்கா

    இந்தியா

    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் தமிழ்நாடு
    UPI கட்டணம்: ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு ஆபத்து? தொழில்நுட்பம்
    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி
    இந்திய ஏற்றுமதியில் வளர்ச்சி - 25% கைப்பற்றிய ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம்

    தமிழ்நாடு

    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை
    தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த காரணத்தை கூறிய பெண்; அதிர்ச்சி அடைந்த போலீசார் தமிழக காவல்துறை

    அமெரிக்கா

    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை இந்தியா
    சியாட்டல்: சாதிய பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டம் அமலுக்கு வந்தது உலகம்
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    சிலிக்கான் வங்கியின் வைப்புகளும் கடன்களும் முதல் குடிமக்கள் வங்கிக்கு விறக்கப்பட்டது உலகம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023