NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% வரை உயருகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% வரை உயருகிறது
    இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% வரை உயருகிறது

    இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% வரை உயருகிறது

    எழுதியவர் Nivetha P
    Mar 28, 2023
    06:16 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மொத்த விலை பணவீக்கத்திற்கு ஏற்ப மருந்துகளின் விலையினை மாற்றியமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

    அதன்படி 27 சிகிச்சைகளுக்காக 384 மூலக்கூறுகள் கொண்ட 900 மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 12% அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதன்படி வலி நிவாரணிகள், ஆன்டிபயோட்டிக் மருந்துகள், இதய நோய் மருந்துகள் ஆகியன விலைகளில் உயர்வு ஏற்படும்.

    மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்திக்கான செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் விலையுயர்வடைகிறது என்று கூறப்படுகிறது.

    இந்த விலை உயர்வு கோரிக்கையினை கடந்த சில மாதங்களாகவே மருந்து உற்பத்தி நிறுவனங்கள் வைத்து வருகிறது என்பது குறிப்பிடவேண்டியவை.

    விலைவாசி உயர்வு

    மருந்துகளின் விலையுயர்வு பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியலில் பாராசிட்டமால், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், ரத்த சோகை எதிர்ப்பு மருந்துகள், வைட்டமின் மற்றும் தாதுக்கள் கொண்ட மருந்துகள் அடங்கும்.

    ஏற்கனேவே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது,

    தற்போது உயிர் காக்கும் மருந்துகளின் விலையும் உயரும் செய்தி பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் ஏழை, எளிய, மூத்த குடிமக்கள் தங்கள் மாத பட்ஜெட்டில் மருந்துக்கான செலவு கூடுதலாகும் என்பதை நினைத்து வேதனை அடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    இந்தியா

    தொடர்ந்து ஏற்றத்துக்குபின் சரிந்த தங்கம் விலை! இன்றைய விபரம் தங்கம் வெள்ளி விலை
    SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க... வங்கிக் கணக்கு
    பஜாஜ் பல்சர் 220F Vs TVS அப்பாச்சி RTR 200 4V - சிறந்த பைக் எது? பைக் நிறுவனங்கள்
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025