NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்
    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்
    இந்தியா

    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்

    எழுதியவர் Sindhuja SM
    March 28, 2023 | 06:34 pm 1 நிமிட வாசிப்பு
    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்
    இறந்தவர்களில் பெரும்பாலோர்(33) ஐஐடிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(IITs), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIMs), தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (NITs) போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 61 மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர்(33) IITகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதை தொடர்ந்து, NITகளில் 24 பேரும், IIMகளில் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். 2018ஆம் ஆண்டு- 11 பேர், 2019ஆம் ஆண்டு- 16 பேர், 2020ஆம் ஆண்டு- 5 பேர், 2021ஆம் ஆண்டு- 9 பேர் தற்கொலை செய்து கொண்டதாக கல்வித் துறை இணையமைச்சர் சுபாஸ் சர்க்கார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

    உயர் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் பயிலரங்குகள்

    காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரத்யுத் போர்டோலோய், கௌரவ் கோகோய், பென்னி பெஹனன், கே முரளீதரன், ராஜ்மோகன் உன்னிதன், டிஎன் பிரதாபன் மற்றும் டீன் குரியகோஸ் ஆகியோர் தற்கொலைக்கான காரணங்களை அரசாங்கம் கண்டறிந்துள்ளதா என்றும் அவற்றைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றும் கேட்டதை அடுத்து சுபாஸ் சர்க்கார் பதிலளித்தார். "கல்வியால் ஏற்பட்ட மன அழுத்தம், குடும்ப காரணங்கள், தனிப்பட்ட காரணங்கள், மனநலப் பிரச்சினைகள் போன்றவை இதுபோன்ற பிரச்சினைகளுக்குப் பின்னால் இருக்கும் அடையாளம் காணப்பட்ட காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளது." என்று சர்க்கார் நாடாளுமன்றத்தில் கூறினார். மாணவர்களை மன அழுத்ததில் இருந்து வெளி கொணர உயர் கல்வி நிறுவனங்களில் பயிலரங்குகள்/கருத்தரங்குகள் நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    நாடாளுமன்றம்

    இந்தியா

    இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% வரை உயருகிறது இந்தியா
    இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது பிலிப்பைன்ஸ்
    ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைக்க கால அவகாசத்தை நீட்டித்த மத்திய அரசு ஆதார் புதுப்பிப்பு
    ஸ்மார்ட் கீ வசதியுடன் ஹோண்டாவின் புதிய ஆக்டிவா 125 அறிமுகம்! ஹோண்டா

    நாடாளுமன்றம்

    எம்பி பங்களாவை காலி செய்ய இருக்கும் ராகுல் காந்தி: வெளியேற்ற நோட்டீசுக்கு பதில் காங்கிரஸ்
    ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்: அடுத்து என்ன நடக்கும் இந்தியா
    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம் உச்ச நீதிமன்றம்
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க பிரச்சனை: டெல்லியில் காங்கிரஸின் மாபெரும் போராட்டம் ராகுல் காந்தி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023