NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
    சில்சாரிலிருந்து அகர்தலா செல்லும் ரயிலின் பெட்டிகள் அனைத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 29, 2023
    11:34 am

    செய்தி முன்னோட்டம்

    திரிபுராவின் உனகோட்டி மாவட்டத்தில், சில்சாரில் இருந்து அகர்தலா நோக்கிச் சென்ற ரயிலில் இருந்து 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள 221.96 கிராம் போதை பொருளை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) செவ்வாய்கிழமை கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால், பயணிகளின் கூட்டத்தைப் பயன்படுத்தி சந்தேக நபர் நழுவிவிட்டார் என்று BSF தெரிவித்துள்ளது.

    போதை பொருள் இருப்பது குறித்த தகவல் கிடைத்ததும், செவ்வாய்க்கிழமை பிற்பகல் குமார் காட் ரயில் நிலையத்தில் BSF குழுவினரால் ஒரு சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. அப்போது, சில்சாரிலிருந்து அகர்தலா சென்று கொண்டிருந்த ரயிலின் பெட்டிகள் அனைத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்தியா

    திரிபுராவை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற பாடுபடும் BSF

    "தேடலின் போது, ​​சந்தேகத்திற்கிடமான ஒரு வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் இருந்து சுமார் 221.96 கிராம் பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தேக நபர், பயணிகளின் கூட்டத்தைப் சாதகமாக பயன்படுத்தி கொண்டு நழுவினார்," என்று BSF தெரிவித்துள்ளது.

    மேலும், கைப்பற்றப்பட்ட பிரவுன் சுகரின் தோராயமான மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் ரூ.1,10,98,000 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    எல்லைப் பாதுகாப்புப் படையானது திரிபுராவில் இருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கவும், "திரிபுராவை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக" உருவாக்கவும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக BSF தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரிபுரா
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    திரிபுரா

    திரிபுரா வாக்கெடுப்பு: தெரிந்துகொள்ள வேண்டியவை இந்தியா
    இந்தியாவின் வடமாநிலங்களான நாகலாந்து, திரிபுராவிலும் பாஜக கூட்டணி முன்னிலை பாஜக
    வடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி பாஜக

    இந்தியா

    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு தொழில்நுட்பம்
    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' தெலுங்கானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025