NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இனி எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் வயர்லெஸ் சார்ஜிங்; புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    இனி எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் வயர்லெஸ் சார்ஜிங்; புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியது இந்தியா
    எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்கியது இந்தியா

    இனி எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் வயர்லெஸ் சார்ஜிங்; புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியது இந்தியா

    எழுதியவர் Sekar Chinnappan
    May 08, 2025
    07:03 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மின்சார வாகன ஈக்கோசிஸ்டத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) மற்றும் VNIT நாக்பூர் இணைந்து உருவாக்கிய உள்நாட்டு வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    இந்த முயற்சி மின்சார வாகனங்கள் மக்கள் பயன்பாட்டில் அதிகரிப்பதற்கான ஒரு பெரிய உந்துதலின் ஒரு பகுதியாக வருகிறது.

    ஏற்கனவே நாடு முழுவதும் 45 லட்சத்திற்கும் அதிகமான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    புதிதாக உருவாக்கப்பட்ட இந்த 1.5kW வயர்லெஸ் சார்ஜர் நிலையான 230V, 50Hz AC சிங்கிள் பேஸ் விநியோகத்தில் இயங்குகிறது மற்றும் தோராயமாக மூன்று மணி நேரத்தில் 90% வரை பேட்டரி திறனை அடைகிறது.

    பாதுகாப்பு அம்சங்கள்

    வயர்லெஸ் சார்ஜரில் பாதுகாப்பு அம்சங்கள்

    ஷார்ட்-சர்க்யூட் மற்றும் ஓபன்-சர்க்யூட் பாதுகாப்பு போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் பொருத்தப்பட்ட இந்த சார்ஜர், 88kHz இல் இயங்கும் உயர்-திறன் சிலிக்கான் கார்பைடு அடிப்படையிலான MOSFETகளையும் கொண்டுள்ளது.

    இந்த தொழில்நுட்பத்தின் வணிக பரிமாற்றத்தை அறிவித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் எஸ்.கிருஷ்ணன், அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா முயற்சிக்கு ஏற்ப, இந்த கண்டுபிடிப்பு ஒரு இந்திய நிறுவனத்தால் மேலும் மேம்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.

    கூடுதலாக, நிதி அமைச்சகம் மின்சார வாகனங்களுக்கான பொருட்கள் மற்றும் சேவை வரியை 12%இலிருந்து 5%ஆகக் குறைத்துள்ளது.

    இது எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்கிறது. இந்த முன்னேற்றங்கள் இந்தியாவில் சுயசார்பு மற்றும் நிலையான போக்குவரத்து கட்டமைப்பை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க பாய்ச்சலைக் குறிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலக்ட்ரிக் வாகனங்கள்
    மின்சார வாகனம்
    இந்தியா
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    இனி எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் வயர்லெஸ் சார்ஜிங்; புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியது இந்தியா எலக்ட்ரிக் வாகனங்கள்
    பாகிஸ்தான் நிறுத்தாதவரை பதிலடி தாக்குதல் தொடரும்; மத்திய அரசு உறுதி இந்தியா
    PSL போட்டிக்கு சில மணி நேரத்திற்கு முன்பு ராவல்பிண்டி மைதானத்தில் ட்ரோன் தாக்குதல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    அமெரிக்காவில் முதல்முறையாக இரண்டாம் உலகப்போர் வெற்றி தின கொண்டாட்டம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு அமெரிக்கா

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    24 கேரட் தங்க உபகரணங்களுடன் புதிய எஸ்1 ப்ரோ சோனா மாடலை வெளியிட்டது ஓலா எலக்ட்ரிக் ஓலா
    எம்ஜியின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் வெளியானது; விவரங்கள் எம்ஜி மோட்டார்
    இந்தியாவில் களமிறங்குவதாக டெஸ்லாவின் போட்டி நிறுவனம்  இந்தியா
    ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் இரண்டு டாப் அதிகாரிகள் ராஜினாமா ஓலா

    மின்சார வாகனம்

    2024இல் உலகின் மிகப்பெரிய சொகுசு கார் விற்பனையாளர் என்ற பட்டத்தை தக்கவைத்தது பிஎம்டபிள்யூ நிறுவனம் பிஎம்டபிள்யூ
    போல்ஸ்டார் 7 பிரீமியம் காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவியாக இருக்கும்; நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எஸ்யூவி
    முதலீட்டுக்கு ஏற்ற இடமாக இந்தியா; பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரை நரேந்திர மோடி
    தூத்துக்குடியை உலகளாவிய எலக்ட்ரிக் வாகன ஏற்றுமதி மையமாக மாற்ற வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டம் எலக்ட்ரிக் வாகனங்கள்

    இந்தியா

    முகமது முய்சு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்; காரணம் என்ன? மாலத்தீவு
    IMF-இல் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணி நீக்கம்; காரணம் என்ன? மத்திய அரசு
    அணுகுண்டு போட்டுவிடுவார்களாம்; ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் இந்தியாவிற்கு மிரட்டல் பாகிஸ்தான்
    இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் ஐரோப்பாவின் பாசாங்குத்தனம்; விளாசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    தொழில்நுட்பம்

    அமெரிக்க நிறுவனம் AMD உடன் இணைந்து இந்தியாவில் சர்வர்களை தயாரிக்க பாரத் ஃபோர்ஜ் திட்டம் தொழில்நுட்பம்
    இந்திய தொழில்நுட்பத்துறையின் வருவாய் 2026 நிதியாண்டில் $300 பில்லியனைத் தாண்டும்: நாஸ்காம் தொழில்நுட்பம்
    நிதி சேவைகளை மேம்படுத்த ஏஐ ஸ்டார்ட்அப் பெர்ப்ளெக்ஸிட்டியுடன் கூட்டு சேர்ந்தது பேடிஎம் பேடிஎம்
    அருகருகே வந்த ஏழு கோள்கள்; அரிய வானியல் நிகழ்வை படம் வானியல் பிடித்த புகைப்படக் கலைஞர் வானியல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025