NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு
    உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு அரசு வழங்கியுள்ள வாய்ப்பு

    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 29, 2023
    10:49 am

    செய்தி முன்னோட்டம்

    உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள், தற்போதுள்ள எந்த மருத்துவக் கல்லூரிகளிலும் சேராமல், MBBS இறுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற ஒரே ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு நேற்று(மார்-28) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    "எந்த இந்திய மருத்துவக் கல்லூரியிலும் சேராமல், தற்போதுள்ள NMC பாடத்திட்டம் மற்றும் வழிகாட்டுதல்களின்படி, பகுதி-1 மற்றும் பகுதி-2 தேர்வுகள்(தியரி மற்றும் பிராக்டிகல்) எழுதி MBBS இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் ஒரு வருட காலத்திற்குள் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். பகுதி-1 முடிந்து ஒரு வருடத்திற்கு பின் பகுதி-2 நடத்தப்படும். பகுதி-1இல் தேர்ச்சி பெற்றிந்தால் மட்டுமே பகுதி-2இல் கலந்துகொள்ள முடியும்." என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    இந்தியா

    மாணவர்கள் கட்டாய இன்டெர்ன்ஷிப்பை முடிக்க வேண்டும்

    மத்திய அரசு சார்பில் ஆஜரான ஏஎஸ்ஜி ஐஸ்வர்யா பாடி, நீதிபதிகள் பி ஆர் கவாய் மற்றும் விக்ரம் நாத் அமர்வுக்கு இந்த தகவலை தெரிவித்தார்.

    மேலும், இந்த இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற பிறகு, மாணவர்கள் இரண்டு வருட கட்டாய சுழற்சி இன்டெர்ன்ஷிப்பை முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    NMC முடிவு செய்தபடி, இந்த இன்டெர்ன்ஷிப்பின் முதல் ஆண்டு இலவசமாகவும், இரண்டாவது ஆண்டு பணம் கட்டி வேலை செய்வது போலவும் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உக்ரைன்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு தொழில்நுட்பம்

    உக்ரைன்

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் அமெரிக்கா
    உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025