NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரஷ்ய-உக்ரைன் போரை பொருட்படுத்தாமல் உக்ரைனுக்கு திரும்பியுள்ள இந்திய மாணவர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்ய-உக்ரைன் போரை பொருட்படுத்தாமல் உக்ரைனுக்கு திரும்பியுள்ள  இந்திய மாணவர்கள்
    18,000 மாணவர்கள் உட்பட, உக்ரைனில் சிக்கித் தவித்த 23,000 இந்தியர்களை இந்தியா வெளியேற்றியது.

    ரஷ்ய-உக்ரைன் போரை பொருட்படுத்தாமல் உக்ரைனுக்கு திரும்பியுள்ள இந்திய மாணவர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 17, 2023
    12:21 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்ய- உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கும் போது, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கிட்டத்தட்ட 1,100 இந்திய மாணவர்கள் உக்ரைனில் உயர் கல்வி பயின்று வருகின்றனர்.

    உக்ரைன் போர் தொடங்கிய போது, ​​18,000 மாணவர்கள் உட்பட, உக்ரைனில் சிக்கித் தவித்த 23,000 இந்தியர்களை இந்தியா வெளியேற்றியது.

    ஆனால், உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த நிறைய மருத்துவ மாணவர்கள் படிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் உக்ரைன் திரும்பியுள்ளனர்.

    பெரும்பாலானவர்கள் ரஷ்ய தாக்குதல்கள் நடக்கும் லிவிவ், உஸ்கோரோட் மற்றும் டெர்னோபில் போன்ற நகரங்களில் கல்வி கற்று வருகின்றனர்.

    இந்தியர்கள் மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கர்கள் போன்ற பிற நாட்டவர்களும் உக்ரைனுக்கு திரும்பியுள்ளனர்.

    மருத்துவ படிப்புகளை முடிப்பவர்கள் நாடு திரும்புவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின்(NMC) அனுமதி பெற வேண்டும்.

    இந்தியா

    இந்திய கல்லூரிகளில் அனுமதி வழங்கப்படவில்லை

    போர் ஆரம்பித்த போது, உக்ரைனில் கல்வி பயின்று வந்த மாணவர்களை மருத்துவர்களாக்க அரசாங்கம் "முடிந்த அனைத்தையும் செய்யும்" என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் கூறினார்.

    உக்ரைனில் இருந்து திரும்பியவர்களுக்கு இந்திய மருத்துவ கல்லூரிகளில் இடம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், சுகாதார அமைச்சகம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. வெளிநாட்டில் பயின்ற மாணவர்களுக்கு இந்திய கல்லூரிகளில் இடமளிக்க எந்த விதிகளும் இல்லை என்று சுகாதார அமைச்சகம் கூறியது.

    இதனால், உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய 18,000 மாணவர்களின் நிலை கேள்வி குறியாகி இருக்கிறது.

    இந்திய கல்லூரிகளில் இடம் கிடைப்பது மற்றும் அதற்கு ஆகும் செலவை சமாளிப்பது மிகவும் கடினம் என்பதால் நாடு திரும்பிய மாணவர்களும் அதற்கு முயற்சிக்காமல் இருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உக்ரைன்
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உக்ரைன்

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் அமெரிக்கா
    உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா ரஷ்யா

    இந்தியா

    கவாஸாகி நிறுவனத்தின் புதிய மாடல் வெளியீடு! விலை என்ன? பைக் நிறுவனங்கள்
    சத்தமில்லாமல் மகனின் நிச்சயதார்த்தை முடித்த கெளதம் அதானி! தொழில்நுட்பம்
    2வது கட்டம் ஆரம்பம் - மெட்டாவில் மேலும் 10 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்! மெட்டா
    H3N2: குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு, இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி; ICMR நிபுணர் பரிந்துரைப்பு நோய்கள்

    உலகம்

    பெண்கள் தின பேரணியை தடை செய்த பாகிஸ்தான் பாகிஸ்தான்
    Dissociative Identity Disorder தினம்: இந்த நோயை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கிய தகவல்கள் ஆரோக்கியம்
    சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது: இங்கிலாந்து யுகே
    வாழ்வாதாரம் வேண்டி நிற்கும் காடுகள் உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025