இந்தியா: செய்தி

விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய சுற்றுலாப் பயணி தேசிய கொடியை ஏந்தி பரவசம் 

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஏற்பாடு செய்த ப்ளூ ஆரிஜினின் நியூ ஷெப்பர்ட்-25 சுற்றுலா பயணத்தில் கலந்துகொண்ட, ​​தொழிலதிபரும் விமானியுமான கோபிசந்த் தோட்டகுரா விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய சுற்றுலாப் பயணி என்ற வரலாற்றைப் படைத்தார்.

வட இந்தியாவுக்கு ரெட் அலர்ட்: அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி வரை உயரக்கூடும்

ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உட்பட வட இந்தியாவில் பல மாநிலங்களில் வரவிருக்கும் கடுமையான வெப்ப அலைகள் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்னோவா ஹைக்ராஸ் ZX வகைகளுக்கான முன்பதிவுகளை மீண்டும் நிறுத்தியது டொயோட்டா இந்தியா

டொயோட்டா, இந்தியாவில் அதன் இன்னோவா ஹைக்ராஸ் எம்பிவியின் டாப்-எண்ட் ZX மற்றும் ZX (O) வகைகளுக்கான முன்பதிவுகளை மீண்டும் நிறுத்தி வைத்துள்ளது.

ஜார்ஜியாவில் கார் கவிழ்ந்ததால் 3 இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலி

ஜார்ஜியாவின் அல்பரெட்டாவில் வேகமாகச் சென்ற கார் கவிழ்ந்ததால் மூன்று இந்திய-அமெரிக்க மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.

21 May 2024

மும்பை

மும்பை: எமிரேட்ஸ் விமானம் மீது மோதியதால் 36 ஃபிளமிங்கோக்கள் பலி

மும்பை-துபாய் எமிரேட்ஸ் விமானம் 310 பயணிகளுடன் நேற்று இரவு மோதியதால் குறைந்தது 36 ஃபிளமிங்கோக்கள் மும்பையின் காட்கோபரில் உள்ள பந்த்நகர் லக்ஷ்மி நகர் பகுதியில் இறந்தன.

வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்தது பெங்களூரு விமான நிலையம்  

தனியார் மற்றும் வர்த்தக வாகனங்கள் விமான நிலைய வளாகத்திற்குள் செல்ல ஒரு தொகையை செலுத்த வேண்டும் என்ற புதிய கட்டண முறையை பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

டெல்லியில் 47.4 டிகிரி வெப்பம், கேரளாவுக்கு ரெட் அலெர்ட்: இன்றைய வானிலை நிலவரம் 

வட இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், தேசிய தலைநகரின் அதிகபட்ச வெப்பநிலை நேற்று 47.4 டிகிரி செல்சியஸை எட்டியது.

20 May 2024

ஈரான்

ஈரான் அதிபரின் உயிரிழப்பை அடுத்து நாளை துக்க நாளாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது இந்தியா

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், நாளை இந்தியாவில் துக்க நாள் அனுசரிக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்தது.

சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா அருகே பிக்-அப் வாகனம் கவிழ்ந்ததால் 18 பேர் பலி

சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் பிக் அப் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 14 பெண்கள் உட்பட 18 பேர் இறந்தனர். மேலும், நான்கு பேர் காயமடைந்தனர் என்று இன்று காவல்துறை தெரிவித்துள்ளது.

20 May 2024

குஜராத்

இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது 

அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) கைது செய்துள்ளது.

ராஜஸ்தானில் மைனர் சிறுமியை பலாத்காரம் செய்து அவளை உயிருடன் எரித்த 2 சகோதரர்களுக்கு மரண தண்டனை 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவளை நிலக்கரி உலையில் உயிருடன் எரித்து கொலை செய்த இருவருக்கு ராஜஸ்தானின் பில்வாராவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

20 May 2024

கேரளா

சர்வதேச அளவில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட கேரள நபர் கைது 

கேரளாவில் உள்ள எர்ணாகுளம் ஊரக காவல்துறையினர், உடல் உறுப்பு விற்பனைக்காக சர்வதேச அளவில் ஆள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சபித் நாசர் என்ற நபரை கைது செய்துள்ளனர்.

"இந்தியா ஈரானுக்கு துணையாக நிற்கிறது": அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஈரானின் இந்த துயர நேரத்தில் இந்தியா துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.

இந்திய தேர்தல் பிரச்சாரங்களுக்கு மத்தியில் டீசல் விற்பனை சரிந்தது 

இந்தியாவில் தேர்தல் பிரச்சாரம் உச்சம் அடைந்திருக்கும் நிலையிலும், மே 2024 இல் பெட்ரோல் மற்றும் டீசலின் விற்பனை மந்தமாகவே இருந்தது.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நேரடி சூரிய வெளிச்சத்தில் வைக்கப்பட்ட பிறந்த குழந்தை பலி

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை 30 நிமிடங்களுக்கு நேரடி சூரிய ஒளியில் வைக்கப்பட்டதால் உயிரிழந்தது.

18 May 2024

டெல்லி

சுவாதி மாலிவால் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இருந்து பிபவ் குமார் கைது 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்குள் ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

18 May 2024

டெல்லி

எம்பி ஸ்வாதி மாலிவாலின் சிசிடிவி வீடியோவை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில், ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) புதிய சிசிடிவி வீடியோவை வெளியிட்டுள்ளது.

18 May 2024

ஹரியானா

ஹரியானா மாநிலம் நூஹில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்து: 9 பேர் பலி, 13 பேர் காயம்

ஹரியானாவின் குண்டலி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) விரைவுச் சாலையில் நேற்று இரவு பயணித்த பேருந்து தீப்பிடித்ததில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு டஜன் பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கிர்கிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் எச்சரிக்கை 

கிர்கிஸ்தானின் தலைநகரில் சர்வதேச மாணவர்களை குறிவைத்து கூட்டு வன்முறை வெடித்துள்ளதால், பிஷ்கெக்கில் உள்ள மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று அறிவுறுத்தின.

இந்தியாவில் அதிகரித்து வரும் லம்போர்கினியின் டிமாண்ட்: 200 ஆர்டர்கள் வைட்டிங்கில் உள்ளது

இத்தாலிய சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி, இந்தியாவில் அதன் வாகனங்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 200 ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன.

இந்தியாவில் மஹிந்திரா XUV 3XOக்கான முன்பதிவு தொடங்கியது 

உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்திய XUV 3XO மாடலுக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக ஏற்கத் தொடங்கியுள்ளது.

15 May 2024

பாஜக

குடியுரிமை சட்டத்திற்கு கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டது

குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது.

15 May 2024

லண்டன்

லண்டனில் இந்திய பெண் கத்தியால் குத்தி கொலை: ஒருவர் மீது வழக்கு பதிவு 

வடமேற்கு லண்டனில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் 66 வயது இந்திய வம்சாவளி பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பதிலளித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் 

10 ஆண்டுகளுக்கு ஈரானில் சபஹர் துறைமுகத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டது.

14 May 2024

இஸ்ரேல்

ரஃபாவில் கொல்லப்பட்டார் இந்தியாவை சேர்ந்த ஐநா ஊழியர்: இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை இல்லை என்கிறது அமெரிக்கா 

காசாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் அவர் பயணித்த வாகனம் தாக்கப்பட்டதால் கொல்லப்பட்டார்.

14 May 2024

வாரணாசி

வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கங்கை நதியில் பிரதமர் மோடி பிரார்த்தனை 

2024 மக்களவைத் தேர்தலுக்கு வாரணாசி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

14 May 2024

ஈரான்

ஈரான் துறைமுகத்தை இயக்க இந்தியா ஒப்பந்தம்: பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை

10 ஆண்டுகளுக்கு ஈரானில் சபஹர் துறைமுகத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இது குறித்து பேசிய அமெரிக்கா, "ஈரானுடனான வணிக ஒப்பந்தங்களைக் கருத்தில் கொள்ளும் எவரும் பொருளாதாரத் தடைகளின் அபாயத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.

14 May 2024

மும்பை

மும்பை விளம்பர பதாகை விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

மும்பையில் நேற்று மாலை வீசிய கடுமையான புயலின் போது ஒரு பெரிய விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் இறந்தனர் மற்றும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

'மாலத்தீவில் உள்ள விமானிகளுக்கு இந்திய விமானங்களை ஓட்ட தெரியவில்லை': மாலத்தீவின் அமைச்சர் 

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவின் உத்தரவின் பேரில் 76 இந்திய பாதுகாப்பு வீரர்கள் மாலத்தீவை விட்டு வெளியேற்றப்பட்டனர். அது நடந்து சில நாட்களே ஆகும் நிலையில், இந்தியா வழங்கிய மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு இராணுவத்திடம் இன்னும் இல்லை என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காசன் மௌமூன் ஒப்புக்கொண்டுள்ளார்.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: 87.98% மாணவர்கள் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் தேர்ச்சி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

13 May 2024

சீனா

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக உருவெடுத்தது சீனா 

2024ஆம் நிதியாண்டில் 100 பில்லியன் டாலர்களுக்கு மேலான இந்திய பொருட்களை இறக்குமதி செய்து இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக மாறியுள்ளது சீனா.

12 May 2024

டெல்லி

இலவச மின்சாரம், சீனாவிடமிருந்து நிலத்தை மீட்பது உட்பட அரவிந்த் கெஜ்ரிவாலின் 10 தேர்தல் வாக்குறுதிகள் 

ஆம் ஆத்மி கட்சிக்காக(ஏஏபி) இன்று பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 10 உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார் .

இந்தியாவில் ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த மின்சார கார்கள் 

தற்போது சுற்றுச்சூழலுக்கு அதிகம் முன்னுரிமை அளிக்கப்படுவதால், அதிகமான நகரவாசிகள் சுற்றுசூழலுக்கு ஏற்ற போக்குவரத்து மாற்றுகளை நாடி வருகின்றனர்.

11 May 2024

பாஜக

'மோடிக்கு 75 வயது ஆனாலும் அவர் தான் பிரதமராக வருவார்': அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதில்

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

09 May 2024

தேர்தல்

லோக்சபா தேர்தலை குறிவைத்து இந்தியாவை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்யா

மத சுதந்திர உரிமைகளை இந்தியா மீறுவதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் பொதுத் தேர்தலின் போது நாட்டை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவை என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு ஏர் இந்தியா நிறுவனத்திடம் காரணத்தை கேட்டது விமான போக்குவரத்து அமைச்சகம்

நேற்று இரவு முதல் ஏறக்குறைய 90 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் இருந்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் விரிவான அறிக்கையை கோரியுள்ளது.

"தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல் இருக்கிறார்கள்" என்று கூறிய காங்கிரஸ் தலைவருக்கு பிரதமர் மோடி கண்டனம் 

காங்கிரஸின் மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவின் புதிய கருத்து குறித்து இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தோலின் நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதை நாடு பொறுத்துக்கொள்ளாது" என்று தெரிவித்ததோடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

08 May 2024

மும்பை

பாலஸ்தீன ஆதரவு பதிவை லைக் செய்ததால் மும்பை பள்ளி முதல்வர் பதவிநீக்கம்

மும்பையில் உள்ள சோமையா பள்ளியின் முதல்வர் பர்வீன் ஷேக், சமூக வலைதளங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பதிவை லைக் செய்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாளை இந்தியா வருகிறார் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் 

மாலத்தீவின் சீன-சார்பு அதிபர் முகமது முய்சு ஆறு மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஒரு உயர்மட்ட தலைவர் நாளை இந்தியா வர உள்ளார். மாலத்தீவின் வெளியுறவு மந்திரி மூசா ஜமீர் மே 9 அன்று இந்தியா வருகிறார்.

ஹைதராபாத்: கனமழைக்கு இடையே சுவர் இடிந்து விழுந்ததில் 1 குழந்தை உட்பட 7 பேர் பலி 

ஹைதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் நேற்று மாலை இடைவிடாது பெய்த மழைக்கு மத்தியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வடனது ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.