NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரான் அதிபரின் உயிரிழப்பை அடுத்து நாளை துக்க நாளாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரான் அதிபரின் உயிரிழப்பை அடுத்து நாளை துக்க நாளாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது இந்தியா

    ஈரான் அதிபரின் உயிரிழப்பை அடுத்து நாளை துக்க நாளாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது இந்தியா

    எழுதியவர் Sindhuja SM
    May 20, 2024
    06:10 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், நாளை இந்தியாவில் துக்க நாள் அனுசரிக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்தது.

    எனவே, நாளை, இந்தியா முழுவதும் அனைத்து கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மேலும் நாளைய தினம் அதிகாரப்பூர்வ பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது.

    இது குறித்து ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட உள்துறை அமைச்சகம், "ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைவர் டாக்டர் செயத் இப்ராஹிம் ரைசி மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவு அமைச்சர் ஹெச்.இ. ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார்கள்." என்று கூறியுள்ளது.

    ஈரான் 

    நாடு முழுவதும் ஒரு நாள் அரசு துக்கம் அறிவிப்பு 

    "இறந்த ஆன்மாக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்திய அரசு மே 21, 2024 அன்று(செவ்வாய்கிழமை) நாடு முழுவதும் ஒரு நாள் அரசு துக்கத்தை அறிவித்துள்ளது." என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    "துக்க நாளில், தேசியக் கொடி தவறாமல் பறக்கவிடப்படும். எனினும், அனைத்து கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மேலும் அன்றைய தினம் உத்தியோகபூர்வ பொழுதுபோக்கு நிகழிச்சி எதுவும் இருக்காது" என்று உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

    நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் நடந்த நிலையில், ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் எரிந்த சிதைவுகள் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டன.

    நேற்று மாலை அப்பகுதியில் பெய்த கனமழை மற்றும் பனிமூட்டம் காரணமாக மீட்புக் குழுவினரால் விபத்து நடந்த இடத்தை அடைய முடியவில்லை

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    இந்தியாவின் பக்கம் தான் நியாயம் இருக்கு; பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா ஆபரேஷன் சிந்தூர்
    ஐபிஎல் 2025: பிளேஆஃப் சுற்றில் 11 ஆண்டு கால சாதனையை கூட்டாக முறியடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் 2025
    தமிழ் திரைப்படங்கள் மீதான உள்ளூர் பொழுதுபோக்கு வரி 4% ஆகக் குறைப்பு; தமிழக அரசு உத்தரவு கோலிவுட்
    புவி வெப்பமடைவதால் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் புற்றுநோய்

    ஈரான்

    ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான்
    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? பாகிஸ்தான்
    பாகிஸ்தான்-ஈரான் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முன்வந்தது பாகிஸ்தான்  பாகிஸ்தான்
    சிரியா, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்களின் 85 இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்  அமெரிக்கா

    இந்தியா

    இந்தியாவை மிரட்டும் வெப்ப அலை: தெலுங்கானா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு  ஒடிசா
    மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் கச்சா வெடிகுண்டு வெடித்ததில் ஒரு சிறுவன் பலி மேற்கு வங்காளம்
    வீடியோ: அதிகாலை 1 மணிக்கு ஒரு குடும்பத்தைக் காரில் துரத்தி சென்று அடித்த BMW கும்பல்  டெல்லி
    14 புதிய அம்சங்களுடன் புதிய கிரிஸ்டா GX+ மாறுபாட்டை அறிமுகப்படுத்தியது டொயோட்டா இந்தியா டொயோட்டா

    உலகம்

    இஸ்ரேல் ஈரானை தாக்கப்போவது அமெரிக்காவுக்கு முன்பே தெரியும்  இஸ்ரேல்
    வெடிபொருட்களுடன் நடமாடிய சந்தேக நபர் கைது: பாரிஸில் உள்ள ஈரான் தூதரகம் முற்றுகை பாரிஸ்
    இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா: இஸ்ரேல் பிரதமர் கண்டனம்  இஸ்ரேல்
    தீவிரமடைந்தது பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: அமெரிக்க பல்கலைக்கழகங்கள் முழுவதும் ஏராளமானோர் கைது அமெரிக்கா

    உலக செய்திகள்

    கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் கைது  கனடா
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸின் இறுதிச் சடங்கு திட்டங்கள் அவசரமாக புதுப்பிக்கப்பட்டன இங்கிலாந்து
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கு காரணம் என்ன? ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி பஹ்ரைன் நாட்டில் உள்ள பிணவறையில் சடலமாக மீட்பு தாய்லாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025