NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஈரான் துறைமுகத்தை இயக்க இந்தியா ஒப்பந்தம்: பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரான் துறைமுகத்தை இயக்க இந்தியா ஒப்பந்தம்: பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை

    ஈரான் துறைமுகத்தை இயக்க இந்தியா ஒப்பந்தம்: பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    May 14, 2024
    10:28 am

    செய்தி முன்னோட்டம்

    10 ஆண்டுகளுக்கு ஈரானில் சபஹர் துறைமுகத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இது குறித்து பேசிய அமெரிக்கா, "ஈரானுடனான வணிக ஒப்பந்தங்களைக் கருத்தில் கொள்ளும் எவரும் பொருளாதாரத் தடைகளின் அபாயத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.

    இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய பிறகு, ஈரானின் ஆளில்லா வான்வழி வாகன உற்பத்தியை குறிவைத்து ஈரான் மீது புதிய தடைகளை அமெரிக்கா அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    இந்தியா மற்றும் ஈரான் இடையேயான ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் அமெரிக்கா சார்பாக கருத்து தெரிவித்தார்.

    அமெரிக்கா 

    'பொருளாதாரத் தடைகளின் சாத்தியமான ஆபத்து இருக்கிறது': அமெரிக்கா 

    "ஈரானும் இந்தியாவும் சபஹர் துறைமுகம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக வந்த தகவல்கள் எங்களுக்குத் தெரியும். சபஹர் துறைமுகம் மற்றும் அதன் சொந்த இருதரப்பு உறவுகள் தொடர்பாக இந்திய அரசே முடிவு செய்யட்டும். இது அமெரிக்காவுடன் தொடர்புடையது என்பதால் ஈரான் மீதான அமெரிக்கத் தடைகள் நடைமுறையில் உள்ளன. அவற்றை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம்" என்று வேதாந்த் படேல் கூறியுள்ளார்.

    மேலும், இந்திய நிறுவனங்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர், "ஈரானுடன் வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் எந்தவொரு நிறுவனமும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பல நிகழ்வுகளில் நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். பொருளாதாரத் தடைகளின் சாத்தியமான ஆபத்து இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    அமெரிக்கா
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    ஈரான்

    செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: அமெரிக்க ராணுவம் హౌతీ రెబెల్స్
    ஈரானிய ஜெனரல் சுலைமானியின் நினைவிடத்தில் இரட்டை குண்டுவெடிப்பு: 95 பேர் கொல்லப்பட்டதாக தகவல் குண்டுவெடிப்பு
    ஈரானில் இரட்டை குண்டுவெடிப்புகளால் தாக்கப்பட்ட காசிம் சுலைமானி கல்லறை- யார் அவர்? அமெரிக்கா
    அமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள் அமெரிக்கா

    அமெரிக்கா

    'Incognito' வழக்கைத் தீர்க்க, பில்லியன் கணக்கான தரவுப் பதிவுகளை அழிக்க கூகுள் ஒப்புக்கொண்டது கூகுள்
    இப்போதே செயல்படுங்கள் அல்லது....: காசா போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா எச்சரிக்கை காசா
    இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்; அமெரிக்காவை தலையிட வேண்டாம் எனவும் வலியுறுத்தல் இஸ்ரேல்
    240 ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நிலநடுக்கம் நிலநடுக்கம்

    இந்தியா

    2,500 ஐபிஎல் ரன்களை எடுத்து MI கேப்டன் ஹர்திக் பாண்டியா சாதனை  ஹர்திக் பாண்டியா
    கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக டெல்லி காங்கிரஸ் மாநில தலைவர் ராஜினாமா டெல்லி
    'இந்து மதத்தை சேர்ந்த அரசகர்களை மட்டுமே காங்கிரஸ் விமர்சிக்கிறது': பிரதமர் மோடி காட்டம்  பிரதமர் மோடி
    செல்லப்பிராணியை இழந்ததால் தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி: ஹரியானாவில் பரிதாபம்  ஹரியானா

    உலகம்

    வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய மோசடி வழக்கு: அந்நாட்டு கோடீஸ்வரருக்கு மரண தண்டனை அறிவிப்பு  வியட்நாம்
    ஈரானுக்கான விமானங்களை ரத்து செய்தது லுஃப்தான்சா ஏர்லைன்ஸ்  ஈரான்
    கனேடிய தேர்தலில் சீனா தலையிட முயன்றது ஆனால் முடிவுகளை அதன் தலையீட்டால் மாற்ற முடியவில்லை: ட்ரூடோ கனடா
    பிற தாக்குதல்களுக்கு தயாராவதாக இஸ்ரேல் அறிவிப்பு: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்  இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025