NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு ஏர் இந்தியா நிறுவனத்திடம் காரணத்தை கேட்டது விமான போக்குவரத்து அமைச்சகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு ஏர் இந்தியா நிறுவனத்திடம் காரணத்தை கேட்டது விமான போக்குவரத்து அமைச்சகம்

    விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு ஏர் இந்தியா நிறுவனத்திடம் காரணத்தை கேட்டது விமான போக்குவரத்து அமைச்சகம்

    எழுதியவர் Sindhuja SM
    May 08, 2024
    05:17 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று இரவு முதல் ஏறக்குறைய 90 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் இருந்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் விரிவான அறிக்கையை கோரியுள்ளது.

    கடைசி நிமிடத்தில் கேபின் குழுவினரின் ஒரு பிரிவினர் திடீரென்று மொத்தமாக "சிக் லீவ்" எடுத்ததால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின்(டிஜிசிஏ) தரநிலைகளின்படி, சிக்கல்களை உடனடியாகச் சரிசெய்து, பயணிகள் சேவைகளை வழங்குமாறு ஏர் இந்தியா விமான நிறுவனங்களுக்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு விதிமுறைகள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய பணியாளர்கள் இந்த நூதன போராட்டத்தை செய்வதாக நம்பப்படுகிறது.

    இந்தியா 

    சம்பளம் மற்றும் சலுகை பிரச்சனைகளால் ஊழியர்கள் போராட்டம் செய்கிறார்களா?

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உடன் AIX கனெக்ட்(முன்னர் ஏர் ஏசியா இந்தியா) என்ற நிறுவனத்தை இணைத்ததற்கு பிறகு ஏற்பட்ட சம்பளம் மற்றும் சலுகை பிரச்சனைகளுடன் இதற்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த நெருக்கடிக்கு மத்தியில், "எங்கள் கேபின் குழுவில் ஒரு பகுதியினர் கடைசி நிமிடத்தில் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் நேற்றிரவு தொடங்கி, விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன." என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    விமானம் ரத்து செய்யப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு பணத்தைத் திரும்பத் தர ஒப்புக்கொண்டது. அப்படி இல்லையென்றால், பயணிகள் தங்கள் பயணத்தை மற்றொரு தேதிக்கு எந்த கட்டணமும் இல்லாமல் மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஏர் இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    ரூ.1.2 கோடி விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது BMW i5 எலக்ட்ரிக் செடான் பிஎம்டபிள்யூ
    ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் சாலை அமைக்கும் சீனா; செயற்கைகோள் புகைப்படம் வெளியானது சீனா
    'என்கிரிப்ஷனை உடைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம்': உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் வாதம் வாட்ஸ்அப்
    EVMகளில் பதிவான வாக்குகளை 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய மனுக்களை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    பெண்ணின் இருக்கை மீது சிறுநீர் கழித்த பேருந்து பயணி இந்தியா
    திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிப்பு கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025