இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக உருவெடுத்தது சீனா
செய்தி முன்னோட்டம்
2024ஆம் நிதியாண்டில் 100 பில்லியன் டாலர்களுக்கு மேலான இந்திய பொருட்களை இறக்குமதி செய்து இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக மாறியுள்ளது சீனா.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு சீனா அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.
2021ஆம் நிதியாண்டில் சீனா, இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்காளியாக இருந்தது. அதன் பிறகு, 2022 மற்றும் 2023ஆம் நிதியாண்டில் சீனா, தனது முதலிடத்தை அமெரிக்காவிடம் பறிகொடுத்தது.
இந்நிலையில், சீனா மீண்டும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக உருவெடுத்துள்ளது.
2024ஆம் நிதியாண்டில் சீனாவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 118.4 பில்லியன் டாலராக இருந்தது.
மேலும், இறக்குமதி 3.24 சதவீதம் அதிகரித்து 101.7 பில்லியன் டாலராக இருந்தது.
சீனா
118.3 பில்லியன் டாலராக இருக்கும் இந்திய-அமெரிக்க வர்த்தகம்
2023ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2024ஆம் நிதியாண்டில் ஏற்றுமதி 8.7 சதவீதம் அதிகரித்து 16.67 பில்லியன் டாலராக இருந்தது.
2019 மற்றும் 2024ஆம் நிதியாண்டுக்கு இடையில், சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதிகள் 0.6 சதவீதம் குறைந்து ஏற்றுமதியில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டது. இது $16.75 பில்லியனில் இருந்து $16.66 பில்லியனாகக் குறைந்துள்ளது.
அதே சமயம் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு செய்யப்படும் இறக்குமதி 44.7 சதவீதம் உயர்ந்து $70.32 பில்லியனில் இருந்து $101.75 பில்லியனாக உயர்ந்துள்ளது.
இதற்கு நேர்மாறாக, முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது ஏற்றுமதி 1.32 சதவீதம் குறைந்து 77.5 பில்லியன் டாலராக உள்ளது.
இந்திய-அமெரிக்க இருவழி வர்த்தகம் 2024ஆம் நிதியாண்டில் 118.3 பில்லியன் டாலராக இருந்தது.