Page Loader
சுவாதி மாலிவால் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இருந்து பிபவ் குமார் கைது 

சுவாதி மாலிவால் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இருந்து பிபவ் குமார் கைது 

எழுதியவர் Sindhuja SM
May 18, 2024
03:02 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்குள் ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார், தன்னை பலமுறை அறைந்ததாகவும், வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் எட்டி உதைத்ததாகவும் எம்பி சுவாதி மாலிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி போலீசார் குமார் மீது ஐபிசியின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லி முதல்வரின் வீட்டில் இருந்து குமார் கைது செய்யப்பட்டார். ஸ்வாதி மாலிவால் பாஜகவின் உத்தரவின் பேரில் அரவிந்த் கெஜ்ரிவாலை குறிவைத்து இந்த நாடகத்தை நடத்துவதாக கூறி ஆம் ஆத்மி கட்சி பிபவ் குமாருக்கு உறுதியாக ஆதரவு தெரிவித்து வருகிறது.

டெல்லி 

ஆம் ஆத்மி கட்சியை பாஜக சாடியுள்ளது

பழைய ஏசிபி வழக்கைப் பயன்படுத்தி ஸ்வாதி மாலிவாலை பாஜக எஃப்ஐஆர் பதிவு செய்ய வைத்ததாக சனிக்கிழமையன்று, டெல்லி அமைச்சர் அதிஷி கூறி இருந்தார். பிபவ் குமார், ஸ்வாதி மாலிவால் தன்னைத் தாக்கும் நோக்கத்துடன் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி ஸ்வாதி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். பிபவ் குமார் விசாரணை நடத்தும் காவல்துறைக்கு ஒத்துழைப்பார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஆம் ஆத்மி கட்சியை பாஜக சாடியுள்ளது.