NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நேரடி சூரிய வெளிச்சத்தில் வைக்கப்பட்ட பிறந்த குழந்தை பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நேரடி சூரிய வெளிச்சத்தில் வைக்கப்பட்ட பிறந்த குழந்தை பலி

    மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நேரடி சூரிய வெளிச்சத்தில் வைக்கப்பட்ட பிறந்த குழந்தை பலி

    எழுதியவர் Sindhuja SM
    May 18, 2024
    06:45 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை 30 நிமிடங்களுக்கு நேரடி சூரிய ஒளியில் வைக்கப்பட்டதால் உயிரிழந்தது.

    மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அந்த குழந்தை நேரடி சூரிய ஒளியில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த நகரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மெயின்புரியின் தலைமை மருத்துவ அதிகாரி (சிஎம்ஓ) டாக்டர் ஆர்சி குப்தாவின் கூற்றுப்படி, இந்த சம்பவம் அந்த நகரின் ராதா ராமன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் மருத்துவமனையில் நிகழ்ந்தது.

    மெயின்புரியின் புகாய் கிராமத்தில் வசிக்கும் ரீட்டா தேவி, ஸ்ரீ சாய் மருத்துவமனையில் 5 நாட்களுக்கு முன்பு சி-செக்ஷன் மூலம் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

    உத்தரப்பிரதேசம் 

    மஞ்சள் காமாலையைத் தடுக்க சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குழந்தை

    புதன்கிழமை, மே 15 அன்று, பிறந்த அந்த குழந்தை சில உடல்நலப் பிரச்சினைகளை வெளிப்படுத்தியது.

    இதனையடுத்து, அந்த மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவர் அந்த குழந்தையை நேரடியாக சூரிய ஒளியில் அரை மணி நேரம் வைத்திருக்குமாறு குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினார்.

    மருத்துவரின் அறிவுரையை பின்பற்றி, குழந்தையின் குடும்பத்தினர் காலை 11.10 மணியளவில் மருத்துவமனையின் கூரையில் அந்த குழந்தையை வைத்தனர்.

    30 நிமிடங்களுக்குப் பிறகு அந்த குழந்தையை குடும்பத்தினர் கீழே கொண்டு சென்றனர். எனினும் சிறிது நேரத்தில் அந்த குழந்தை உயிரிழந்தது.

    மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, பிறந்த குழந்தைகளில் மஞ்சள் காமாலையைத் தடுக்க சூரிய ஒளியில் குழந்தையை வைத்திருப்பது மிக சாதாரணமான நடைமுறையாகும். ஆனால், இது எச்சரிக்கையுடன் செய்யப்பட வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உத்தரப்பிரதேசம்

    மத்திய அரசின் வரி பகிர்வு - தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது தமிழ்நாடு
    வீடியோ: 12 மணி நேரமாக உத்தரப்பிரதேசத்திற்குள் சுற்றி திரிந்த புலி  இந்தியா
    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க இருக்கிறார் மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி
    ஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி ராகுல் காந்தி

    இந்தியா

    இந்தியாவில் குறையும் வாக்குப்பதிவு சதவீதம்; காரணம் என்ன? வாக்கு
    காலிஸ்தான் தீவிரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கனடாவில் கைது கனடா
    அயல்நாட்டு வெறுப்பு மிக்க நாடு இந்தியா என்று ஜோ பைடன் கூறியதற்கு ஜெய்சங்கர் பதில்  ஜோ பைடன்
    3 இந்தியர்களை கனடா கைது செய்ததற்கு எஸ் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார் கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025