இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை
2008ஆம் ஆண்டு பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து டெல்லி சாகேத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
'சென்னை பஸ்' செயலியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்
தமிழகத்தின் தலைநகரான சென்னை நகரவாசிகள், MTC மாநகரப் பேருந்துகளின் விபரங்களைத் தெரிந்து கொள்வதற்காக 'சென்னை பஸ்' (Chennai Bus) என்ற செயலியை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்.
தேஜஸ் போர் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்
பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூருவில் இந்தியாவின் புதிய போர் விமானமான தேஜசில் சிறுபயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்த அனுபவம் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அவர்.
சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தம், ஏன்?
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில், சில்க்யாரா சுரங்கப்பாதை இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியானது 14வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிகிச்சை செலவை 100 மடங்கு வரை குறைக்கும் நான்கு புதிய இந்திய மருந்துகள் கண்டுபிடிப்பு
மிகவும் அரிதான மற்றும் சிக்கலான சில மரபியல் நோய்களுக்கு குறைந்த விலையில் சிகிச்சை வழங்கும் வகையிலான மருத்துகளைக் கண்டறிந்திருக்கின்றன இந்திய மருந்து நிறுவனங்கள்.
உத்தரப் பிரதேசத்தில், நவம்பர் 25 'அசைவமில்லா நாள்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது; அதற்கான காரணம்?
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலானஅரசு, சாது டி.எல்.வாஸ்வானியின் பிறந்தநாளான நவம்பர் 25ஆம் தேதியை "அசைமில்லாத நாள்" என்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.
வங்கக்கடலில் நாளை மறுதினம் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாளை உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நாளை மறுதினம் வாக்கில் உருவாகக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் இன்று சட்டசபை தேர்தல்; ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தானின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சனிக்கிழமை காலை 7:00 மணிக்குத் தொடங்கியது.
மத்திய கிழக்கில் ஜிபிஎஸ் சிக்னலை இழக்கும் விமானங்கள்- விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ எச்சரிக்கை
மத்திய கிழக்கின் சில பகுதிகளில் பறக்கும் பயணிகள் விமானங்கள், ஜிபிஎஸ் சிக்னலை இழப்பதாக வரும் தகவல்களை அடுத்து, விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ அறிவுரைகளை வழங்கியுள்ளது.
சீனாவில் பரவிவரும் வினோத நிமோனியா காய்ச்சல்; இந்தியாவை பாதிக்குமா?
சீனாவில் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவி வரும் புதிய வகை நிமோனியாவால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
உத்தர்காசி சுரங்கப்பாதை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அர்னால்ட் டிக்ஸ்; யார் அவர்?
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிலத்தடி நிபுணரான பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ், உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
கனமழை காரணமாக நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழ்நாட்டில் பருவமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு நிலவி வருகிறது.
தூதரக பதிவு எண்ணில் போலி கார்- டெல்லி காவல்துறையினர் மற்றும் வெளியுறவுத் துறையை எச்சரித்த சிங்கப்பூர் தூதர்
சிங்கப்பூர் நாட்டின் போலி தூதரக பதிவு எண்ணுடன் டெல்லியில் வலம் வரும் கார் குறித்து, டெல்லி காவல்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு, அந்நாட்டின் தூதர் சைமன் வோங் எச்சரித்துள்ளார்.
கடும் மழையால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்திற்கு தடை
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
வரத்து குறைந்த சின்ன வெங்காயம்; கிலோ 110க்கு விற்பனை
தற்போது தமிழகத்தில் பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இனி 12ம் வகுப்பில் அறிவியல் பாடங்களை படிக்கவில்லை என்றாலும் மருத்துவப் படிப்பில் சேரலாம்!
பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விதிமுறைகளில் புதிய மாற்றங்களை அமல்படுத்தியிருக்கிறது தேசிய மருத்துவ ஆணையம்.
டிசம்பர் 1 முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 3 சதவீதம் வரை குறைப்பு
டிசம்பர் 1 முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 3 சதவீதம் வரை குறைப்பு தமிழகத்தில் அடுக்குமாடி கட்டடங்களின் முத்திரை தீர்வை கட்டணங்கள், வரும் டிசம்பர் 1 முதல் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கடற்படை வீரர்களின் மரண தண்டனைக்கு எதிரான இந்தியாவின் மேல்முறையீட்டை கத்தார் ஏற்றது
உளவு பார்த்த குற்றத்திற்காக 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான, இந்தியாவின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் நீதிமன்றம் ஏற்றது.
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்புப்பணி உபகரண கோளாறால் சற்று தோய்வு
உத்தரகாண்ட் சுரங்கபாதையில் 12 நாட்களுக்கும் மேலாக சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி நேற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று காலையே அவர்கள் மீட்கப்படுவார்கள் என நாடே எதிர்பார்த்திருந்த நேரத்தில், இடிபாடுகளில் இருந்த இரும்பு கம்பி ஒன்று, மாற்று பாதை அமைக்கும் போது குறுக்கே இருந்ததால், அதனை வெட்டி எடுக்க தாமதமானது.
இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு
புது டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை வீல் ஸ்ட்ரெச்சர்கள் கொண்டு மீட்க திட்டம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் சாலை திட்டத்தின் ஓர் பகுதியாக உத்தர்காசி-யமுனோத்ரி தாம் நகர் இடையே சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல்
மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவண்ணாமலை தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் காயம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று(நவ.,23) மகா ரதம் என்று கூறப்படும் அண்ணாமலையார் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
₹100 கோடி பொன்சி மோசடி வழக்கில், நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்
பொன்சி திட்டத்தில் நடந்த ₹100 கோடி மோசடியில், நகைக்கடை வியாபாரிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் வழக்கில், நடிகர் பிரகாஷ் ராஜ் விசாரணைக்கு ஆஜராக அமலாக்க இயக்குநரகத்தால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ராணுவ தளங்கள் மற்றும் இரண்டு முக்கிய நகரங்கள் மீது நடத்தப்பட இருந்த IS தாக்குதல் முறியடிப்பு
இரண்டு குஜராத் நகரங்கள்-அகமதாபாத் மற்றும் காந்திநகர்- மற்றும் மும்பையில் உள்ள நாரிமன் ஹவுஸ் (Nariman House) மற்றும் கேட்வே ஆஃப் இந்தியா(Gateway of India) ஆகியவற்றுக்கு எதிரான பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாக NDTV குறிப்பிட்டுள்ளது.
டெல்லியில், ₹350க்காக 18 வயது வாலிபர், சிறுவனால் 60 முறை குத்திக்கொலை
வடகிழக்கு டெல்லியின் வெல்கம் ஏரியா பகுதியில், 18 வயது வாலிபரை, கத்தியால் குத்தி கொலை செய்த 16 வயது சிறுவன், அந்த உடலின் அருகில் நடனம் ஆடும் கொடூரமான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கோத்தகிரி சாலைகளில் சீரமைப்பு பணிகள் நிறைவுற்று, போக்குவரத்து துவங்கியது
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பொழிந்து வருகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் U-வடிவ மேம்பாலம் திறப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் புதியப்பாலங்கள், சாலைகளை அமைத்தல், அதனை பராமரித்தல், கிராமப்புறங்களில் இணைப்பு சாலைகளை அமைத்தல் போன்ற முக்கியமான பணிகளை நெடுஞ்சாலைத்துறை செய்து வருகிறது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகள் இம்மாதம் நடைபெற்ற நிலையில், இதன் முடிவுகள் டிசம்பரில் வெளியாகவுள்ளது.
ரஜோரி மோதல்- வெடிகுண்டு நிபுணர் உட்பட இரண்டு தீவிரவாதிகள் கொலை, 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்
பாகிஸ்தானைச் சேர்ந்த பயிற்சி பெற்ற வெடிகுண்டு வல்லுநர் உள்ளிட்ட இரண்டு தீவிரவாதிகள், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டனர்.
சிக்கிம் ஜனநாயக முன்னணியில் இணைந்தார் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியா
இந்திய கால்பந்து அணியிலிருந்து கடந்த 2014ம்.,ஆண்டு ஓய்வுபெற்றார் பைச்சுங் பூட்டியா.
டீப்ஃபேக்குகளுக்கு எதிராக நான்கு அம்ச உத்தியை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்
அதிகரித்து வரும் டீப்ஃபேக் தொழில்நுட்பத்திற்கு எதிர்வினை ஆற்றும் வகையில், மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், சமூக வலைதள நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இணைய பாதுகாப்பு வல்லுனர்களுடன் ஆலோசனை நடந்தது.
'குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்' - எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ்
சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஓர் பேட்டியில் பேசியது தற்போது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம்-உதகை சாலைகளில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.
வரும் 26ம்-தேதி அந்தமான் கடல் பகுதியில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில் வழக்கத்தை விட குறைவாகவே பதிவாகியுள்ளது என்று புள்ளி விவரங்கள் வெளியானது.
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: இறுதிக்கட்டத்தை நெருங்கிய மீட்டுப்பணி, தயார் நிலையில் ஆம்புலன்ஸ்
கடந்த 12 நாட்களாக உத்திரகாசி சுரங்க பாதையின் இடிபாடுகளை நடுவே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
₹100 கோடி மோசடியில் ஈடுபட்ட திருச்சி நகைக்கடை-அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்
திருச்சியை தலைமையிடமாக கொண்டு, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மற்றும் புதுச்சேரியில் இயங்கி வரும் நகை நிறுவனம், ₹100 கோடி மதிப்பிலான "பொன்சி திட்டம்" நடத்தியதற்காக அமலாக்கத்துறையின் சோதனையில் அம்பலமாக உள்ளது.
பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்துடன் மதுரை அழகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
மதுரையில் பிரசித்தி பெற்ற மதுரை அழகர் கோவிலின் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
தமிழகத்தின் 36 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழ்நாட்டில் சற்றே தாமதமாக தொடங்கிய பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.