NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டிசம்பர் 1 முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 3 சதவீதம் வரை குறைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிசம்பர் 1 முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 3 சதவீதம் வரை குறைப்பு
    டிசம்பர் 1 முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 3 சதவீதம் வரை குறைப்பு

    டிசம்பர் 1 முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 3 சதவீதம் வரை குறைப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 24, 2023
    12:10 pm

    செய்தி முன்னோட்டம்

    டிசம்பர் 1 முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 3 சதவீதம் வரை குறைப்பு தமிழகத்தில் அடுக்குமாடி கட்டடங்களின் முத்திரை தீர்வை கட்டணங்கள், வரும் டிசம்பர் 1 முதல் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனுடன் மேலும் சில மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, "தமிழகத்தில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த ஆவணங்கள் பதிவில் 2 ஆவணங்களாக பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது".

    "அடிநிலம் பொறுத்து பிரிக்கப்படாத பாகத்துக்கு கிரையமாக ஓர் ஆவணமாகவும் கட்டிடப் பகுதியை பொறுத்து கட்டுமான உடன்படிக்கையாக ஓர் ஆவணமாகவும் பதியப்படுகிறது".

    "குடியிருப்புகள் விற்பனையின்போது அடிநிலம், கட்டிடம் சார்ந்த பகுதிக்கு ஒரே விலையே நிர்ணயிக்கப்படுகிறது".

    card 2

    குறைக்கப்படும் பதிவுக்கட்டணம் 

    அந்த அறிக்கையில், "கட்டிடங்களை விற்பனை ஆவணமாக பதிவு செய்யாமல், கட்டுமான உடன்படிக்கை ஆவணமாக பதியும் வழக்கமும் உள்ளது. இந்த பரிவர்த்தனையில், விற்பனை ஆவணத்துக்கு 7 சதவீத முத்திரைத் தீர்வை, 2 சதவீத பதிவுக்கட்டணமும், கட்டுமான உடன்படிக்கைக்கு 1 சதவீத முத்திரைத் தீர்வை, 3 சதவீதம் பதிவுக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது".

    "தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் அடுக்குமாடி குடியிருப்பு பதிவில், கட்டிடம், அடிநிலம் சேர்த்த கூட்டு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு, இம்மதிப்பு மொத்த கட்டிட பரப்பை பொறுத்து கணக்கிடப்பட்டு, அதன்படி விற்பனை ஆவணமாகவே பதியப்படுகிறது. மற்ற மாநிலங்களில் உள்ள இம்முறையை தமிழகத்திலும் பின்பற்ற முடிவெடுக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    card 3

    பதிவுத்துறை தலைவரின் பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு 

    இதுதொடர்பாக, பதிவுத்துறை தலைவர் அனுப்பிய முன்மொழிவை பரிசீலித்த தமிழக அரசு,அடுக்குமாடி குடியிருப்புகளை பதியும்போது இனி பிரிபடாத பாகநிலம், கட்டிடம் என இரு ஆவணங்கள் பதியப்படுவதை மாற்றி, கட்டிடம் மற்றும் அடிநிலம் சேர்ந்த கூட்டு மதிப்பு அடிப்படையில் ஒரே விற்பனை ஆவணமாக பதியும் நடைமுறையை நடைமுறைப்படுத்தவும், புதிய குடியிருப்புகள் பதிவுக்கான முத்திரைத் தீர்வையை குறைக்கவும் முடிவெடுத்துள்ளது.

    அதன்படி, மதிப்பு ரூ.50லட்சம் வரையுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை 7% இருந்து 4%வும், ரூ.50லட்சம் முதல் ரூ.3கோடி வரையிலான குடியிருப்புக்கு முத்திரைத்தீர்வையை 7% இருந்து 5%வும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனால், ரூ.50 லட்சம் வரையிலான குடியிருப்பு வாங்குவோர் முத்திரைத் தீர்வை 4%, பதிவுக் கட்டணம் 2% என, 6 சதவீதம் செலுத்தினால் போதும்.

    card 4

    மறுவிற்பனைக்கு பொருந்தாது எனவும் அறிவிப்பு 

    அதேபோல், ரூ.50 லட்சம் முதல்ரூ.3 கோடி வரை மதிப்புள்ள குடியிருப்பு வாங்குவோர் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக்கட்டணம் என 7 சதவீதம் செலுத்தினால் போதும்.

    இந்த சலுகை, பிரிக்கப்படாத பாக மனையுடன் பதியப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டும் பொருந்தும்.

    மேலும், குடியிருப்புகளின் முதல் விற்பனைக்கு மட்டுமே இது பொருந்தும். மறு விற்பனைக்கு பொருந்தாது.

    கூட்டுமதிப்பில் முத்திரைத்தீர்வை சலுகையுடன் பதியும் புதிய நடைமுறை டிச.1 முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கெனவே கட்டுமான ஒப்பந்த ஆவணமாக பதியப்பட்டுள்ள குடியிருப்புகளை மறு விற்பனை செய்வது தற்போதுபதிவுத்துறையால் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த அனுமதி டிசம்பர் 1-க்கு பிறகு, பதியப்படும் கட்டுமான ஒப்பந்த ஆவணங்களை பொறுத்து விலக்கிக் கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    தமிழக முதல்வர்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழக அரசு

    இனி தமிழக நியாயவிலை கடைகளில் பணமில்லா பணப்பரிவர்த்தனை - தமிழக அரசு இந்தியா
    தமிழகத்தில் உயர்த்தப்பட்டது மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரி.. உயர்கின்றன வாகன விலைகள்! வாகனம்
    'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கு விதிக்கப்பட்ட புது கட்டுப்பாடுகள்  லியோ
    தமிழக முதல்வரை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் மு.க ஸ்டாலின்

    தமிழக முதல்வர்

    முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர் தமிழ்நாடு
    பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தலையாய கடமை - மு.க.ஸ்டாலின் அறிவுரை  தமிழக காவல்துறை
    மதுரையில் கலைஞர் நூலகம் - 15ம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்
    மகளிர் உரிமை தொகை: 91 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகம்  கருணாநிதி

    தமிழ்நாடு

    அதிக காட்சிகளை திரையிட்டதற்காக திருப்பூர் சுப்பிரமணியம் திரையரங்குக்கு நோட்டீஸ் திரைப்படம்
    சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யா காலமானார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
    தமிழகம் முழுவதும் தயார் நிலையிலுள்ள 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்பு குழு  வானிலை ஆய்வு மையம்
    கூர்நோக்கு இல்லங்கள் - மனநல ஆலோசகரை நியமிக்க முதல்வரிடம் பரிந்துரைத்த நீதிபதி சந்துரு குழு  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025