NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை வீல் ஸ்ட்ரெச்சர்கள் கொண்டு மீட்க திட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை வீல் ஸ்ட்ரெச்சர்கள் கொண்டு மீட்க திட்டம் 
    சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை வீல் ஸ்ட்ரெச்சர்கள் கொண்டு மீட்க திட்டம்

    சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை வீல் ஸ்ட்ரெச்சர்கள் கொண்டு மீட்க திட்டம் 

    எழுதியவர் Nivetha P
    Nov 23, 2023
    09:11 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் சாலை திட்டத்தின் ஓர் பகுதியாக உத்தர்காசி-யமுனோத்ரி தாம் நகர் இடையே சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதில் சில்க்யாரா-தண்டல்கான் பகுதியினை இணைக்க சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளது.

    அதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த 12ம் தேதி அதிகாலை 4 மணியளவில் 60மீ.,சுரங்கப்பாதை பணியில் மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

    ஆனால் அதிர்ஷ்டவசமாக யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை.

    இந்நிலையில் அவர்களுக்கு மாற்று பாதை அமைக்கப்பட்டு வெளியே கொண்டுவரும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில் தற்போது 95% பணிகள் முடிந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    சுரங்கம் 

    தேசிய பேரிடர் மீட்புப்பணி ஜெனரல் அதுல் கர்வால் தகவல் 

    இதனை தொடர்ந்து, அவர்கள் எந்த விதத்தில் வெளியே கொண்டுவரப்படவுள்ளார்கள் என்னும் விவரத்தினை தேசிய பேரிடர் மீட்புப்பணி ஜெனரல் அதுல் கர்வால் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, 'விபத்து நேர்ந்த சுரங்கப்பாதைக்குள் குழாய்கள் மூலம் மீட்பு படையினர் உள்ளே செல்லவுள்ளனர். அவர்கள் தொழிலாளர்கள் இருக்கும் இடத்தினை அடையும் பட்சத்தில், தாங்கள் எடுத்து சென்ற பொருட்கள் கொண்டு தொழிலாளர்களை ஒருவர் ஒருவராக வெளியே அனுப்புவர்" என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து, 'உயரம் குறைவான தொழிலாளர்கள், வீல் ஸ்ட்ரெச்சர்களில் படுக்க வைத்து, என்டிஆர்எஃப் வீரர்கள் கொண்டு கயறு கட்டி வெளியே இழுக்கப்படவுள்ளார்கள்' என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

    இந்த முறை செயல்படுத்துவதற்கு முன்னர், அந்த 800மி.மீ.,விட்டம் கொண்ட குழாயினை ஸ்ட்ரெச்சர்களை உள்ளே எடுத்து செல்லும்போது எவ்வித தடையும் ஏற்படதவாறு சுத்தம் செய்யப்படவுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    விபத்து

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    விபத்து

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு: மா.சுப்பிரமணியம்  மருத்துவக் கல்லூரி
    மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி  மும்பை
    வங்கதேசத்தில் பயங்கர ரயில் விபத்து: 20 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்  பங்களாதேஷ்
    திருவண்ணாமலையில் அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து: 7 பேர் பலி  திருவண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025