NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: இறுதிக்கட்டத்தை நெருங்கிய மீட்டுப்பணி, தயார் நிலையில் ஆம்புலன்ஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: இறுதிக்கட்டத்தை நெருங்கிய மீட்டுப்பணி, தயார் நிலையில் ஆம்புலன்ஸ்
    இறுதிக்கட்டத்தை நெருங்கிய மீட்டுப்பணி, தயார் நிலையில் ஆம்புலன்ஸ்

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: இறுதிக்கட்டத்தை நெருங்கிய மீட்டுப்பணி, தயார் நிலையில் ஆம்புலன்ஸ்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 23, 2023
    11:22 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 12 நாட்களாக உத்திரகாசி சுரங்க பாதையின் இடிபாடுகளை நடுவே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    அவர்கள் இன்னும் சில மணித்துளிகளில் மீட்கப்பட உள்ளனர்.

    இந்த மீட்புப்பணிகளை மேற்பார்வையிட உத்தரகண்ட் முதல்வரும், மீட்புப்பணி நடக்கும் இடத்திற்கு ஹெலிகாப்டரில் விரைந்துள்ளார்.

    உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி ஆகிய வழிபாடுதலங்களை இணைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வந்தது.

    இந்த கட்டுமான பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    கடந்த நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, இந்த சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது.

    அதில் அந்த 41 தொழிலாளர்களும் இடிபாடுகளுக்கிடையே, வெளிவர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

    card 2

    மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசும், உத்தரகண்ட் மாநில அரசும் 

    இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

    இவர்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு 12 நாளாக ஈடுபட்டு வருகிறது.

    இவர்களுடன் வெளிநாடுகளில் இருந்தும் நிபுணர்களும், உபகரணங்களும் வரவழைக்கப்பட்டு, பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், நேற்று இரவே, தொழிலாளர்கள் மீட்கப்பட்டுவிடுவார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில், இடிபாடுகளை அகற்றும் போது, ஒரு இரும்பு கம்பி குறிக்கிட்டதாகவும், அதை மெஷின் கொண்டு அகற்றமுடியாமல் போகவே, NRDF மற்றும் நிபுணர்கள் அதை வெட்டி எடுக்கவேண்டி இருந்தது.

    அதனால் மீட்பு பணிகள் சற்று தாமதம் ஆனதாக கூறப்பட்டது.

    card 3

    தயார் நிலையில் மருத்துவ குழு

    இந்த நிலையில், மொத்தம் உள்ள 57 மீட்டரில் 45 மீட்டர் தொலைவுக்கு துளையிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொழிலாளர்கள் வெளியே வர வசதியாக, அந்த இடம் வரை கனமான குழாய்கள் இடிபாடுகளுக்கு இடையே இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுள்ளது.

    துளையிடும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உத்தர்காசியில் 41 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

    மேலும் உயிர்காக்கும் மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் இன்று காலை மீட்பு இடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    விபத்து

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    விபத்து

    பெங்களூரு பிரபல கேஃபேவில் தீ விபத்து; உயிர் சேதம் இல்லை எனத்தகவல்  பெங்களூர்
    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு: மா.சுப்பிரமணியம்  மருத்துவக் கல்லூரி
    மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி  மும்பை
    வங்கதேசத்தில் பயங்கர ரயில் விபத்து: 20 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்  பங்களாதேஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025