NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வங்கக்கடலில் நாளை மறுதினம் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வங்கக்கடலில் நாளை மறுதினம் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை 
    நாளை மறுதினம் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை

    வங்கக்கடலில் நாளை மறுதினம் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை 

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 25, 2023
    10:07 am

    செய்தி முன்னோட்டம்

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாளை உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நாளை மறுதினம் வாக்கில் உருவாகக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

    card 2

    கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை

    இந்த நிலையில், இன்று கனமழை பெய்யும் என சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

    இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    நேற்று இரவு முதல் இம்மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த இடியுடன் மழை பெய்தது. சென்னையில், கிண்டி, வேளச்சேரி, ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், கோட்டூர்புரம், தி.நகர், மயிலாப்பூர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    மேலும், இம்மழை காலை 10 மணி வரை நீடிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து, சென்னையிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, டெல்டா மாவட்டங்களிலும் இன்று மழை பொழியும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனமழை
    காற்றழுத்த தாழ்வு நிலை
    வானிலை ஆய்வு மையம்
    தமிழகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கனமழை

    14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    அக்டோபர் 11ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    16 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    15 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு

    காற்றழுத்த தாழ்வு நிலை

    வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும் கனமழை
    வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை! தமிழ்நாடு
    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது பள்ளிகளுக்கு விடுமுறை

    வானிலை ஆய்வு மையம்

     மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்  இந்தியா
    அரபிக் கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்  பருவமழை
    தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை: தேஜ் புயல் வலுப்பெற்றது: இன்றைய வானிலை நிலவரம்  தமிழகம்
    அரபிக்கடலில் 'தேஜ்', வங்காள விரிகுடாவில் 'ஹமூன்': இரட்டை புயல்களை எதிர்கொள்ள இருக்கும் இந்தியா வானிலை எச்சரிக்கை

    தமிழகம்

    பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்
    தமிழகத்தில் மீண்டும் ஒரு NEET மரணம்; மகன் இறந்த சில மணிநேரத்திலேயே தந்தையும் உயிரிழந்த சோகம் நீட் தேர்வு
    55 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு மு.க.ஸ்டாலின்
    மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், வீடு திரும்பினார்  தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025