மயிலாடுதுறை: செய்தி
பவர் கட் அலர்ட்: நாளை (ஜூன் 18) தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின்தடை
தமிழகத்தில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மாதாந்திர மற்றும் அவசரகால மின் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் 62 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு; கட்டுக்கட்டாகச் சிக்கிய லஞ்சப் பணம்
தமிழ்நாட்டில் சுப முகூர்த்த நாள்களை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் நிலவும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் பெரிய அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள 62 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (DVAC) நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி; எந்தெந்த ஊர்களில் மழை பெய்யும்?
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மயிலாடுதுறை விவசாயி மகள் பரணிகா தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை!
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எளிய விவசாயியின் மகள், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் (National Athletics Championship) தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
டெல்லியில் நடைப்பயிற்சி சென்ற தமிழக எம்பி சுதாவிடம் நகை பறிப்பு!
டெல்லியில் தனது அலுவலக இல்லம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி., சுதாவிடம் 4 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
தமிழகத்தில் கோவில் கட்டும் இன்போசிஸ் சுதா மூர்த்தி; எங்கே தெரியுமா?
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐவநல்லூர் கிராமத்தில், பழமையான சிலைகளை வைத்து வழிபாடு நடத்தும் கிராமத்தினருக்கு புதிய கோவிலை கட்டுவதாக ராஜ்யசபா எம்.பி., இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி முடிவெடுத்துள்ளார்.
மயிலாடுதுறை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்மங்குளம் அருகே நேற்று இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் மண் பானை தயாரிக்கும் இன்ஜினியர்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் மண்பாண்ட தொழில்தான் அதிகம் நடைபெறும்.