NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மயிலாடுதுறை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மயிலாடுதுறை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு
    மயிலாடுதுறை பட்டாசு ஆலை விபத்து

    மயிலாடுதுறை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 25, 2024
    02:32 pm

    செய்தி முன்னோட்டம்

    மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார்.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாலங்காடு மாதா கோயில் மெயின் ரோடு ஆற்றங்கரை பகுதியில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது.

    இங்கு நாட்டு வெடிகள், திருமணம், கோயில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு தேவையான வானவெடிகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன.

    மேலும், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் குறுகிய காலமே உள்ளதால், அதற்காக வாணவெடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்துள்ளது.

    இங்கு நான்கு தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது.

    இழப்பீடு

    முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

    இந்த விபத்தில் சிக்கி திருவாவடுதுறையைச் சேர்ந்த கர்ணன் என்பவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். கலியபெருமாள், லட்சுமணன் மற்றும் குமார் ஆகிய மூன்று பேரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில், லட்சுமணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கர்ணன் மற்றும் லட்சுமணன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், கலியபெருமாள் மற்றும் குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சமும் இழப்பீடாக அறிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மயிலாடுதுறை
    விபத்து
    மு.க.ஸ்டாலின்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் மண் பானை தயாரிக்கும் இன்ஜினியர்  தமிழ்நாடு
    மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை

    விபத்து

    சத்தீஸ்கர் மாநிலம் பெமேதராவில் சரக்கு வாகனம் லாரி மீது மோதியதால் 8 பேர் பலி, 23 பேர் காயம் சத்தீஸ்கர்
    காரியாபட்டி தனியார் கல்குவாரியில் வெடி விபத்து: 4 பேர் உடல் சிதறி பலி விருதுநகர்
    மும்பை விளம்பர பதாகை விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு மும்பை
    ஹரியானா மாநிலம் நூஹில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்து: 9 பேர் பலி, 13 பேர் காயம் ஹரியானா

    மு.க.ஸ்டாலின்

    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு தமிழ்நாடு
    தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ் பாமக
    ஆளுநர்களுக்கு வாய் மட்டுமே உள்ளது காதுகள் இல்லை - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு
    தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்! தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025