NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் மண் பானை தயாரிக்கும் இன்ஜினியர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் மண் பானை தயாரிக்கும் இன்ஜினியர் 
    மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் மண் பானை தயாரிக்கும் இன்ஜினியர்

    மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் மண் பானை தயாரிக்கும் இன்ஜினியர் 

    எழுதியவர் Nivetha P
    Dec 29, 2023
    02:59 pm

    செய்தி முன்னோட்டம்

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் மண்பாண்ட தொழில்தான் அதிகம் நடைபெறும்.

    ஆனால் உலோகப்பாத்திரங்களின் பயன்பாடு அதிமாகி வரும் நிலையில் மண் பாண்டங்களின் பயன்பாடு பெருமளவில் குறைந்துள்ளது.

    இதனால் மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலில் வெகு சிலரே தற்போது ஈடுபட்டுள்ளனர்.

    எனினும், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது மட்டும் மண்பாண்டங்களில் பொங்கல் வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    இந்நிலையில், மயிலாடுதுறை கொள்ளிடம் அருகேயுள்ள திருமயிலாடி, வேட்டங்குடி, மாதானம், மாதிரவேளூர், போன்ற இடங்களில் பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்வோர் மட்டுமே இத்தொழிலை தொடர்ந்து செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

    மண் 

    குலத்தொழிலை தொடரும் குடும்பம் 

    அப்படி தனது குடும்ப குலத்தொழிலை கைவிடாமல் நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் மாரிமுத்து என்பவர் விடுமுறை தினங்கள் மற்றும் தனது ஓய்வு நேரங்களில் மண் பானைகளை செய்து வருகிறார்.

    இவருக்கு ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் முடித்த அவரது மகன் துளசேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உதவியாக உள்ளனர் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

    இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் ஏரோநாட்டிக்கல் பட்டதாரியாக இருந்தும் தனது குடும்ப தொழிலை கற்றுக்கொண்டு துளசேந்திரன் மண்பானைகளை தயார் செய்து வருகிறார்.

    பட்டதாரி 

    மண்பானை செய்யும் நோக்கம் குறித்து பேசிய பட்டதாரி 

    இதுகுறித்து துளசேந்திரனிடம் கேட்கையில், "நான் ஏரோநாட்டிக்கல் பட்டதாரி. ஆனால் இது எனது குலத்தொழில் என்பதால் எனது தந்தையிடம் இந்த செய்முறையினை கற்றுக்கொண்டு மண்பானை, மண்சட்டி, மண்சிலைகள், மண்ணடுப்பு உள்ளிட்ட பொருட்களை செய்து வருகிறேன்" என்று கூறினார்.

    மேலும் இத்தொழில் தற்போது அழியும் தருவாயில் உள்ளது என்றும்,

    அதனை காப்பாற்ற வேண்டும் என்னும் தான் இத்தொழிலை கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

    மண் பாண்டங்களில் சமைத்து சாப்பிட்ட நமது மூதாதையர்கள் பல ஆண்டுகள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர் என்று குறிப்பிட்ட பேசிய இவர், சில கோரிக்கைகளையும் எடுத்துரைத்தார்.

    கோரிக்கை 

    தமிழக அரசுக்கு வைக்கப்பட்ட கோரிக்கைகள் 

    அதன்படி, இயற்கையுடன் பிணைந்துள்ள மண்பாண்டங்களை தயாரிக்கும் தொழிலை தற்போதைய இளைஞர்கள் கற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

    ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் மண்பானை, மண்ணடுப்பு உள்ளிட்டவை சேர்த்து வழங்கப்படவேண்டும்.

    மண்பாண்ட தொழிலாளர்களுக்கு விநியோகிக்கும் மழைக்கால நிவாரணத்தொகையினை ரூ.10,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

    மேலும், டெல்டா மாவட்டங்களில் தற்போது பெய்யும் மழை காரணமாக மண்பாண்ட தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது என்று வருத்தம் தெரிவித்தார்.

    வேண்டுகோள் 

    தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் 

    கனமழை காரணமாக பொங்கல் பண்டிகைக்கு மண்பாண்டங்கள் செய்யும் பணிகள் கடினமாக பாதிக்கப்பட்ட நிலையில், மண்பாண்ட உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.

    இதனையடுத்து அவர், 'தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மண்பாண்ட தொழிலையும், தொழிலாளர்களையும் காக்க விடுபட்ட நபர்களுக்கு மழைக்கால நிவாரண தொகையினை உடனடியாக கணக்கீடு செய்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்றும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு
    நெடுஞ்சாலைத்துறை

    சமீபத்திய

    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்

    தமிழ்நாடு

    அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை இந்தியா
    4 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் டி20 கிரிக்கெட்
    கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை

    தமிழக அரசு

    துணை வேந்தருக்கான பணி நியமன கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி
    பி.ஹெச்.டி. படிக்கும் பழங்குடியின, ஆதிதிராவிட மாணவர்கள் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் சென்னை
    டிசம்பர் 1 முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 3 சதவீதம் வரை குறைப்பு தமிழக முதல்வர்
    சட்டம் பேசுவோம்: அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர்களுக்கு என்ன அதிகாரத்தை வழங்குகிறது? தமிழகம்

    நெடுஞ்சாலைத்துறை

    அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக தொடரும் ரெய்டு தமிழ்நாடு
    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் U-வடிவ மேம்பாலம் திறப்பு தமிழ்நாடு
    மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்  சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025