NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய கிழக்கில் ஜிபிஎஸ் சிக்னலை இழக்கும் விமானங்கள்- விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய கிழக்கில் ஜிபிஎஸ் சிக்னலை இழக்கும் விமானங்கள்- விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ எச்சரிக்கை
    மத்திய கிழக்கு பகுதியில் பறக்கும் சில விமானங்கள், சமீப நாட்களில் ஜிபிஎஸ் சிக்னலை விமானங்கள் இழந்து வருகின்றது.

    மத்திய கிழக்கில் ஜிபிஎஸ் சிக்னலை இழக்கும் விமானங்கள்- விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ எச்சரிக்கை

    எழுதியவர் Srinath r
    Nov 24, 2023
    06:50 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய கிழக்கின் சில பகுதிகளில் பறக்கும் பயணிகள் விமானங்கள், ஜிபிஎஸ் சிக்னலை இழப்பதாக வரும் தகவல்களை அடுத்து, விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ அறிவுரைகளை வழங்கியுள்ளது.

    அப்பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்கும் போது, விமானங்களின் வழிசெலுத்தல்(நேவிகேஷன்) அமைப்புகள் ஏமாற்றப்படுவதாக சமீபத்திய நாட்களில் பல செய்திகள் வந்துள்ளன.

    இது பெரிய பாதுகாப்பு அபாயமாக வேகமாக உருவாகி வருவதால், அச்சுறுத்தலின் தன்மை மற்றும் அதற்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றுவது என்பது குறித்து, விமான நிறுவனங்களை எச்சரிக்கும் நோக்கோடு, டிஜிசிஏ ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

    "ஜிஎன்எஸ்எஸ் (குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம்) ஜம்மிங் மற்றும் ஸ்பூஃபிங் பற்றிய புதிய அச்சுறுத்தல்கள் மற்றும் அறிக்கைகள் காரணமாக,

    விமானப் போக்குவரத்துத் துறை நிச்சயமற்ற நிலையில் உள்ளது" என்று சுற்றறிக்கை டிஜிசிஏ கூறுகிறது.

    3rd card

    ஸ்பூஃபிங்(விமானங்களை ஏமாற்றுதல்) எப்படி வேலை செய்கிறது?

    மத்திய கிழக்கின் சில பகுதிகளில் பறக்கும் விமானங்கள் ஆரம்பத்தில் ஸ்பூஃபிங் ஜிபிஎஸ் சிக்னலைப் பெறுகின்றன.

    இந்த சமிக்ஞை விமானத்தின் உட்கட்டமைப்பு அமைப்பை ஏமாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.

    சிக்னல் பெரும்பாலும் விமானத்தின் அமைப்பின் ஒருமைப்பாட்டை சமரசம் செய்யும் அளவுக்கு வலுவாக இருக்கும்.

    இது ஒரு சில நிமிடங்களில், இன்நாஸியால் ரெஃபரன்ஸ் சிஸ்டத்தை (IRS) நிலையற்ற தாக்குவதால், பல சமயங்களில், விமானம் அனைத்து நேவிகேஷன் திறனையும் இழக்கிறது.

    இன்நாஸியால் ரெஃபரன்ஸ் சிஸ்டம் என்பது, கைரோஸ்கோப்புகள், முடுக்கமானிகள் மற்றும் உயரத்தை அளக்கும் எலக்ட்ரானிக்ஸ், வேகம் மற்றும் நேவிகேஷன் தகவல்களை வழங்குவதின் மூலம், ஒரு விமானம் வான்வெளியில் எவ்வாறு நகர்கிறது என்பதை தீர்மானிக்க முடியும்.

    4th card

    எந்தெந்த பகுதியில் இப்படி நடக்கிறது?

    வடக்கு ஈராக் மற்றும் அஜர்பைஜான் வான் பரப்புகள் இந்த விவகாரத்தில் முக்கியமான கவலைக்குரிய இடமாக இருக்கின்றன.

    செப்டம்பரில், 12ல் இருவேறு தனித்தனி சம்பவங்கள் பதிவாகியுள்ளன, சமீபத்தில் நவம்பர் 20 அன்று துருக்கியின் அங்காராவுக்கு அருகில் இது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

    இவ்வாறு நடப்பதற்கு எது காரணம்?

    இவ்வாறு நடப்பதற்கு இதுவரை காரணங்கள் கண்டறியப்படவில்லை என்றாலும்,

    மத்திய கிழக்கு பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும், இராணுவ மின்னணு போர் அமைப்புகள் ஜம்மிங் மற்றும் ஸ்பூஃபிங் நடவடிக்கைகளுக்கு காரணமாக கூறப்படுகிறது.

    5th card

    டிஜிசிஏ வெளியிட்டுள்ள வழிகாட்டு நடைமுறைகள் என்ன?

    சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) சுற்றறிக்கை, சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் இந்த விஷயத்தில் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) வழிகாட்டுதலைக் கருத்தில் கொண்டு,

    வளர்ந்து வரும் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது.

    இது விமான ஆபரேட்டர்கள், விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கான விரிவான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல் திட்டங்களை அந்த அறிக்கையில் டிஜிசிஏ வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்
    விமான சேவைகள்
    ஈராக்
    துருக்கி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    விமானம்

    வேலூரில் வானில் தோன்றிய வெண்புகை வட்டம் - வியப்புடன் பார்வையிட்ட மக்கள்  தமிழ்நாடு
    மே 15 வரை 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது இந்தியா
    ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்: 3 பேர் பலி  இந்தியா
    இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தால் பரபரப்பு இந்தியா

    விமான சேவைகள்

    ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: நிவாரணத்தை அனுப்புகிறது இந்திய அரசாங்கம்  இந்தியா
    ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகள் ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்கா சென்றனர் ரஷ்யா
    உயரும் விமானக் கட்டணம்.. ஆய்வு செய்த சர்வதேச கூட்டமைப்பு! இந்தியா
    பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் கட்டுப்பட்டு வரும் 'கார்டன் பெவிலியன்கள்' பெங்களூர்

    ஈராக்

    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்  இஸ்ரேல்
    ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது? இஸ்ரேல்

    துருக்கி

    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் சிரியா
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் சிரியா
    துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன துருக்கி-சிரியா நிலநடுக்கம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025