NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டீப்ஃபேக்குகளுக்கு எதிராக நான்கு அம்ச உத்தியை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டீப்ஃபேக்குகளுக்கு எதிராக நான்கு அம்ச உத்தியை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்
    டீப்ஃபேக்குகள் விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்து, அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மும்முரம் காட்டி வருகிறது.

    டீப்ஃபேக்குகளுக்கு எதிராக நான்கு அம்ச உத்தியை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்

    எழுதியவர் Srinath r
    Nov 23, 2023
    03:37 pm

    செய்தி முன்னோட்டம்

    அதிகரித்து வரும் டீப்ஃபேக் தொழில்நுட்பத்திற்கு எதிர்வினை ஆற்றும் வகையில், மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், சமூக வலைதள நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இணைய பாதுகாப்பு வல்லுனர்களுடன் ஆலோசனை நடந்தது.

    இது குறித்து பேசிய அமைச்சர், "சட்டம், ஒழுங்குமுறை அல்லது தொழில்நுட்ப ரீதியாக, சில அவசர முடிவுகளை எடுக்க வேண்டும்,"

    "எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இன்று அனைத்து சமூக ஊடக தளங்களுடனும் விரிவான சந்திப்பை நடத்தினோம்."

    "இந்த அச்சுறுத்தலின் தீவிரத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். டீப்ஃபேக் இன்று மிகப்பெரிய சமூக அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. நாங்கள் நீண்ட மற்றும் மிகவும் நேர்மையான விவாதங்களை நடத்தினோம்" என்ன தெரிவித்தார்.

    2nd crd

    அமைச்சர் வெளியிட்ட 4 அம்ச உத்தி

    அவசரமாக நடந்த உயர்மட்ட அதிகாரிகள் தலைமையிலான சந்திப்பில், டீப்ஃபேக்குகளை கட்டுப்படுத்துவதற்கான விரிவான செயல் திட்டம் வகுப்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

    "நாம் நான்கு அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்- கண்டறிதல், தடுப்பு, டீப்ஃபேக்கள் பற்றி புகாரளிக்கும் வழிமுறை மற்றும் விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும்."

    "புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு, வரும் வாரங்களில், விதிமுறைகள் வரைவை முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்," என அமைச்சர் தெரிவித்தார்.

    மேலும், இது தொடர்பான அடுத்த கூட்டம், டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறுகிறது.

    3rd card

    பத்து நாளில் தயாராகும் டீப்ஃபேக்குக்கு எதிரான செயல் திட்டம்

    "நாங்கள் அனைவரும் அடுத்த பத்து நாளில் தெளிவான, செயல்படுத்தக்கூடிய திட்டத்தை உருவாக்க ஒப்புக் கொண்டுள்ளோம்."

    "அனைத்து நிறுவனங்களும், அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் ஒட்டுமொத்த துறையே இது பேச்சு சுதந்திரம் அல்ல என்பதை ஒப்புக் கொண்டனர்" என அமைச்சர் தெரிவித்தார்.

    மேலும் இது சமுதாயத்திற்கு எதிரானது என அவர்கள் புரிந்து கொண்டதாக தெரிவித்த அமைச்சர், இது தொடர்பான கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டதாக கூறினார்.

    இது தொடர்பான சட்ட விதிமுறைகள் இன்று முதல் வகுக்கப்படுகிறது. குறைந்த இடைவெளியில் டீப்ஃபேக்குளுக்கு எதிராக புதிய சட்டம் உருவாக்கப்படும்.அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, டீப்ஃபேக்கள் பிரச்சனையின் தீவிரத்தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சமூக வலைத்தளம்
    சமூக ஊடகம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஆப்பிள் உற்பத்தியை இந்தியாவில் விரிவுப்படுத்த வேண்டாம் : டிம் குக்கிடம் அறிவுறுத்திய டிரம்ப் ஆப்பிள்
    ஐபிஎல் 2025இல் தற்காலிக மாற்று வீரர்களை சேர்த்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி... ஆனால் ஒரு கண்டிஷன் ஐபிஎல் 2025
    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்

    சமூக வலைத்தளம்

    எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் புதிய மாற்றங்கள் என்னென்ன? ட்விட்டர்
    இனி ஒரே சாதனத்தில் பல வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்தலாம், வாட்ஸ்அப்பின் புதிய வசதி வாட்ஸ்அப்
    அரசு ஆவணத்தைக் கொண்டு கணக்கை சரிபார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் எக்ஸ் எக்ஸ்
    எக்ஸை முழுமையான கட்டண சமூக வலைத்தளமாக்குகிறாரா எலான் மஸ்க்? எக்ஸ்

    சமூக ஊடகம்

    மாணவர்களிடம் மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தும் அதீத ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு ஸ்மார்ட்போன்
    மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்களை பரப்பத்தடை -மாநில அரசு உத்தரவு மணிப்பூர்
    ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராதயாவின் பள்ளி கட்டணம் எவ்வளவு தெரியுமா? பாலிவுட்
    பாலியல் புகார்: பிக்பாஸ் விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விசிக

    மத்திய அரசு

    100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன? தமிழ்நாடு
    '26 வார கருவை கொல்ல முடியாது': உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து  உச்ச நீதிமன்றம்
    'ஆபரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு வெளியுறவுத்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025