NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் U-வடிவ மேம்பாலம் திறப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் U-வடிவ மேம்பாலம் திறப்பு
    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் U-வடிவ மேம்பாலம் திறப்பு

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் U-வடிவ மேம்பாலம் திறப்பு

    எழுதியவர் Nivetha P
    Nov 23, 2023
    06:25 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் புதியப்பாலங்கள், சாலைகளை அமைத்தல், அதனை பராமரித்தல், கிராமப்புறங்களில் இணைப்பு சாலைகளை அமைத்தல் போன்ற முக்கியமான பணிகளை நெடுஞ்சாலைத்துறை செய்து வருகிறது.

    இந்த துறை மூலமே தமிழக அரசு தரமான, பாதுகாப்பான சாலை கட்டமைப்புகளை உருவாக்கி பராமரித்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை ஓ.எம்.ஆர்.சாலையில் இந்திரா நகர் சந்திப்பு மற்றும் டைடல்-பார்க் சந்திப்பு என்னும் இவ்இரண்டு போக்குவரத்து சமிக்ஞைகளில் வாகனங்கள் சுமார் 20-30நிமிடங்கள் காத்திருந்து செல்லவேண்டிய சூழல் நிலவுகிறது.

    இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இப்பகுதிகளில் U-வடிவ மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது.

    மேலும் இந்த இரண்டு சந்திப்புகளில் U-வடிவ மேம்பாலங்கள் அமைத்தலோடு ஒருங்கிணைந்த போக்குவரத்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்கு ரூ.108.13 கோடி மதிப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது குறிப்பிடவேண்டியவை.

    முதல்வர் 

    முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் 

    அந்த அறிவிப்பின் படி தற்போது ரூ.18.15 கோடி மதிப்பில் இந்திரா நகரில் முதல் U-வடிவ மேம்பாலப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(நவ.,23)இந்த மேம்பாலத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்.

    237மீ நீளமுள்ள இப்பாலம் 12.5மீ.,நீளம் கொண்ட 19 கண்களை கொண்டுள்ளது.

    ராஜீவ் காந்தி சாலையின் வலதுபக்கம் இப்பாலத்தின் ஏறு சாய்தளமானது 120மீ நீளத்துக்கும், இடதுப்பக்கம் இறங்கு சாய்தளம் 120மீ.,நீளத்துக்கும் அமைக்கப்பட்டுள்ளது.

    இப்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சோழிங்கநல்லூரிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் இந்திரா நகர் U-வடிவ மேம்பாலம் மீது ஏறி திரும்பி, இந்திரா நகர் வழியே அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்லலாம் என்று தெரிகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    நெடுஞ்சாலைத்துறை
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்
    'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி சூரி
    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா
    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்

    தமிழ்நாடு

    வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை! காற்றழுத்த தாழ்வு நிலை
    தமிழகத்தில் கனமழை காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு தேர்வு
    வானிலை அறிக்கை: 14 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    சாதிக்குள் திருமணம் முடிப்போம் என்று சிறுமிகளை உறுதிமொழி எடுக்க வைத்த திமுக கூட்டணி கட்சி நிர்வாகியால் சர்ச்சை திமுக

    நெடுஞ்சாலைத்துறை

    அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக தொடரும் ரெய்டு தமிழ்நாடு

    மு.க ஸ்டாலின்

    காவிரி விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானம்  காவிரி
    ரூ.50,000க்கும் கீழ் வரி நிலுவை வைத்துள்ள வணிகர்களுக்கு வரி விலக்கு - மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    இனிதே நிறைவுற்ற தமிழக சட்டசபை கூட்டம் - 13 மசோதாக்கள் நிறைவேற்றம்  தமிழ்நாடு
    தமிழக அரசு சார்பில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025