NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்புப்பணி உபகரண கோளாறால் சற்று தோய்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்புப்பணி உபகரண கோளாறால் சற்று தோய்வு
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்புப்பணி உபகரண கோளாறால் சற்று தோய்வு

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்புப்பணி உபகரண கோளாறால் சற்று தோய்வு

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 24, 2023
    10:41 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் சுரங்கபாதையில் 12 நாட்களுக்கும் மேலாக சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி நேற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று காலையே அவர்கள் மீட்கப்படுவார்கள் என நாடே எதிர்பார்த்திருந்த நேரத்தில், இடிபாடுகளில் இருந்த இரும்பு கம்பி ஒன்று, மாற்று பாதை அமைக்கும் போது குறுக்கே இருந்ததால், அதனை வெட்டி எடுக்க தாமதமானது.

    அதனை தொடர்ந்து, மீண்டும் வேகமெடுத்து மீட்பு பணி, நேற்று இரவு நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

    எனினும், மாற்றுப்பாதை தோண்டும் உபகரணம் பழுதடைந்ததால், மீண்டும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த உபகரண கோளாறை சரி செய்தபின்னர், இன்று காலை 11 மணி அளவில் மீட்பு பணிகள் மீண்டும் துவங்கும் என சம்பவ இடத்திலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    card 2

    ஸ்ட்ரெட்சர்கள் மூலம் தொழிலாளர்களை வெளியே கொண்டுவர திட்டம்

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சையத் அட்டா ஹஸ்னைன் கருத்துப்படி, சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்கான கிடைமட்ட துளையிடும் நடவடிக்கை, கூடுதல் தடைகளை சந்திக்கக்கூடும்.

    அதனால், மீட்பு நடவடிக்கைக்கான காலக்கெடுவை கணிக்கமுடியாது என வலியுறுத்தினார்.

    சிக்கிய ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒன்று வீதம், 41 ஆம்புலன்ஸ்கள் சுரங்கப்பாதை தளத்தில் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கடுமையாக காயமடைந்த தொழிலாளர்களை விமானத்தில் ஏற்றிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் திரு ஹஸ்னைன் மேலும் கூறினார்.

    தொழிலாளர்களை, மாற்றுப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள குழாய் வழியாக, ஸ்ட்ரெச்சரில் வெளியே கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் மீட்பு குழுவினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்

    சமீபத்திய

    வாரத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை; ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்வு தங்கம் வெள்ளி விலை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ
    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025