LOADING...

பள்ளிக்கல்வித்துறை: செய்தி

நவம்பர் 4ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வரும் நவம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கனமழையால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு: எந்தெந்த ஊர் தெரியுமா?

தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (அக். 22) மாநிலத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

14 Oct 2025
மலேசியா

மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிப்பு; பள்ளிகள் தற்காலிகமாக மூடல்

மலேசியாவில் சுமார் 6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸா (Influenza) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக் கருதி சில பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கான அரசாணை வெளியிட்டது தமிழக பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, நடப்பு கல்வியாண்டு (2025-26) முதல் 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை ரத்து செய்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

RTE சேர்க்கை குழப்பம்: தமிழக அரசு அறிவிப்பால் பெற்றோர்கள், தனியார் பள்ளிகள் அதிர்ச்சி!

கல்வி உரிமை சட்டம் (RTE) 2025-26ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு, தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பினர் மற்றும் சேர்க்கைக்காக காத்திருந்த பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

05 Oct 2025
பள்ளிகள்

காலாண்டு விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு; தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு

காலாண்டு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை (அக்டோபர் 6) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்துப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும் விரிவான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால்... தனியார் பள்ளிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

22 Sep 2025
கல்வி

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் திறன் சார்ந்த கற்றல்: மத்திய அரசு திட்டம்

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் திறன் சார்ந்த கற்றலை அறிமுகப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்? கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது மற்றும் ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துவது தொடர்பாக, தமிழக கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

01 Sep 2025
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை இனி மாதாந்திர தேர்வுகள் நடத்தப்படும்

கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் புதிய முயற்சியாக, தமிழக அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பீடுகள் (Monthly Assessments) நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கேரளாவைப் போல் இனி தமிழக பள்ளிகளிலும் கடைசி பெஞ்ச் கிடையாது; பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

வகுப்பறை சூழலை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வகுப்பறை இருக்கை அமைப்பை யு வடிவத்தில் மறுகட்டமைக்க ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

பள்ளி மாணவர்களிடையே கல்வித் திறன் குறைந்துள்ளதைக் காட்டும் மத்திய அரசின் ஆய்வு

நடப்பு கல்வியாண்டில் மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில், நாட்டின் மத்திய, மாநில மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் வெறும் 53% மாணவர்களுக்கே 10ம் வாய்ப்பாடு வரை சரியாக சொல்லும் திறன் உள்ளது என்பது வெளியாகியுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் வாட்டர் பெல் இடைவேளை முறை அறிமுகம்; இதன் முக்கியத்துவம் என்ன?

மாணவர்களின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய முயற்சியாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வாட்டர் பெல் முறையைத் தொடங்கியுள்ளது.

27 Jun 2025
பள்ளிகள்

ஜூலை 15 முதல் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

தமிழ்நாடு அரசு, முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி முதல், அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

19 Jun 2025
பள்ளிகள்

பள்ளிக் கல்வியில் எந்த மாநிலம் சிறப்பாகச் செயல்பட்டது? தமிழ்நாட்டின் நிலை என்ன?

2023-24 ஆம் ஆண்டுக்கான மாவட்டங்களுக்கான செயல்திறன் தரக் குறியீட்டில் (PGI-D) சண்டிகர், பஞ்சாப், டெல்லி, குஜராத் மற்றும் ஒடிசா ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாக உருவெடுத்துள்ளதாக கல்வி அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

14 Jun 2025
பள்ளிகள்

நடப்பு கல்வியாண்டில் எத்தனை நாட்கள் விடுமுறை? கல்வி நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை

2025-26 ஆம் ஆண்டுக்கான கல்வி நாட்காட்டியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவைக்கு பெற்றோர் வரவேற்பு

சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையின் புதிய முயற்சியாக, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளைப் போன்று இலவச பிரத்யேக பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

05 Jun 2025
தமிழ்நாடு

FACT CHECK: வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லை, அது வதந்தி என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

"பிரதமர் மோடி அறிவித்ததால் ஜூன் 6 அன்று பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்டவை செயல்படாது" எனும் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.

துணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு

புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

30 May 2025
பள்ளிகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 9க்கு ஒத்திவைக்கப்பட்டதா? அரசின் உண்மை சரிபார்ப்புப் பிரிவு விளக்கம்

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்பு பிரிவு, மாநிலம் முழுவதும் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று மீண்டும் திறக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

16 May 2025
பள்ளிகள்

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல்

தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், பள்ளிகள் மீண்டும் திறப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.

மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.

12 May 2025
பள்ளிகள்

ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து குற்றவியல் வழக்குகளும், ஒழுங்கு நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மே 12 மூலம் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பெறலாம்; டிஜிலாக்கரில் பதிவிறக்குவது எப்படி?

தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் மே 12 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகள் மூலம் மதிப்பெண் பட்டியலைப் பெறலாம் என்று அறிவித்துள்ளது.

ஸ்டேட் போர்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது: 91.94% தேர்ச்சியுடன் அரசு பள்ளிகள் அசத்தல்

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று, மே 8 காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

08 May 2025
தமிழகம்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகின்றன.

மாணவர்கள் கவனத்திற்கு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகிறது

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தேர்வு முடிவுகள் குறித்து எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

02 May 2025
பள்ளிகள்

இன்று முதல் CBSE பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி ரத்து: 3, 5 மற்றும் 8ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் 'பெயில்'

இந்த ஆண்டுமுதல், 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்களை பெறவில்லை என்றால், அவர்களை 'பெயில்' ஆக்கும் நடைமுறை CBSE பள்ளிகளில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

வெயில் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை பொருத்து, பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்படும் என தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு POCSO சட்ட விழிப்புணர்வு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டப்பேரவையில் நிகழ்த்திய உரையில், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் 90,000 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு POCSO (Protection of Children from Sexual Offences) சட்டம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி வழங்கப்படும் என அறிவித்தார்.

தமிழகத்தில் 6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு 

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை, ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்களில் ஜாதி பெயர்களை நீக்க 4 வாரம் காலக்கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சில கல்வி நிறுவனங்களில் ஜாதி அடையாளம் கொண்ட பெயர்கள் இடம் பெற்றிருப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

அரிவாளால் சகமாணவனை வெட்டிய 8ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது சக மாணவனை அரிவாளால் வெட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.

மாதவிடாயை காரணமாக சொல்லி மாணவியை வாசலில் தேர்வு எழுத வைத்த கோவை தனியார் பள்ளி

கோயம்புத்தூர் செங்குட்டைப்பாளையத்தில் செயல்படும் சுவாமி சித்பவானந்தா என்ற தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5 ஆம் தேதி பூப்படைந்துள்ளார்.

04 Apr 2025
பள்ளிகள்

தமிழக பள்ளி ஆண்டு விழாக்களில் இவற்றிற்கு தடை: பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு

அரசு பள்ளிகளின் ஆண்டு விழாக்களில் திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடுவதற்கு தடை விதித்துள்ளது தமிழக பள்ளிக்கல்வித்துறை.

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: எப்போது, எங்கே பார்க்கலாம்

தமிழ்நாட்டில், 2024-25 கல்வி ஆண்டிற்கான 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் நடைபெற்றன.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை; தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்களுடைய கோரிக்கையை ஏற்று முன்னர் ஏப்ரல் 9 முதல் 21 வரை திட்டமிட்டிருந்த தேர்வுகள் முன்கூட்டியே ஏப்ரல் 7 முதல் 17 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.

இனி, ஆண்டுக்கு இரு முறை  CBSE 10ம் வகுப்பு பொதுத் தேர்வா? பங்குதாரர்களிடமிருந்து பதிலை கோரும் வாரியம்

நடப்பு கல்வியாண்டு முதல், அதாவது 2025 -2026 முதல், ஆண்டுக்கு இரண்டு முறை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த CBSE முடிவு செய்துள்ளது.

"அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உயர வேண்டும்": முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று எழுதிய கடிதத்தில், மாணவர்களின் நலனுக்காக தமிழகம் "அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உயர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020க்கு மாநில அரசு தனது எதிர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பிரதான் கேட்டுக்கொண்டார்.

17 Feb 2025
அதானி

இந்தியா முழுவதும் பள்ளிகளை அமைக்க ₹2,000 கோடி முதலீடு செய்கிறது அதானி குழுமம்

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 20 பள்ளிகளை அமைப்பதற்காக அதானி குழுமம் ₹2,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

13 Feb 2025
பள்ளிகள்

பாலியல் புகார்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை

பாலியல் புகார்களை சரியாக விசாரிக்க தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 3 ஆசிரியர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகாவிலுள்ள கிராமம் ஒன்றிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், அவரது பள்ளியைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறியதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்புவரை ஜீரோ இடை நிற்றல்: மத்திய அரசின் ஆய்வறிக்கை

மத்திய பள்ளிக்கல்வித்துறை 2023-2024ம் கல்வியாண்டுக்கான ஆய்வறிக்கையை இந்த மாத துவக்கத்தில் வெளியிட்டது. அதில் பள்ளி இடைநிற்றல் விகிதம் தொடர்பான சில முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தின் வெற்றிக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஒரு 12-ஆம் வகுப்பு மாணவர்; வெளியான அதிர்ச்சி காரணம்

டஜன் கணக்கான பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக டெல்லி காவல்துறையால் 12ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முந்தைய அடுத்தது