
துணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மார்ச்-ஏப்ரல் பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்த அல்லது வராத மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கலாம்.
துணைத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், மாணவர்கள் மே 22 முதல் ஜூன் 4 வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்தப் பள்ளிகளில் நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை நியமிக்கப்பட்ட ஆன்லைன் மையங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம்.
ஆன்லைன் மையங்கள்
தனித் தேர்வர்களுக்கான ஆன்லைன் மையங்கள்
11 மற்றும் 12 ஆம் வகுப்பு தனித் தேர்வர்கள் மாணவர்கள், முத்தரையர்பாளையத்தில் உள்ள முத்தரையர் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், செல்லபெருமாள்பேட்டையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
10 ஆம் வகுப்பு தனித் தேர்வர்கள் ரெட்டியார்பாளையத்தில் உள்ள பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் இம்மாக்குலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணங்களை அந்தந்த மையங்களில் செலுத்த வேண்டும்.
கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்ப வழிகாட்டுதல்களை பின்பற்றி விண்ணப்பங்களை சரம்பிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.