
ஜூலை 15 முதல் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசு, முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி முதல், அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது மாநிலத்தின் அரசுப் பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்', 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. ரூ.600.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டம், கடந்த ஆண்டு கிராமப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட்ட நிலையில், இப்போது நகர்ப்புற பகுதிகளுக்கும் வட்டார அளவில் கடைசி கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான தயாரிப்புகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், ஜூலை 15 முதல், நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | காலை உணவு திட்டத்தை மேலும் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு#SunNews | #TNBreakfastScheme | #CMMKStalin pic.twitter.com/NiO9FS79HW
— Sun News (@sunnewstamil) June 27, 2025