Page Loader
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை; தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிப்பு

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை; தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 30, 2025
02:04 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்களுடைய கோரிக்கையை ஏற்று முன்னர் ஏப்ரல் 9 முதல் 21 வரை திட்டமிட்டிருந்த தேர்வுகள் முன்கூட்டியே ஏப்ரல் 7 முதல் 17 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. இதன்படி 1 முதல் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 7 அன்று தமிழ், 8 அன்று விருப்ப மொழி, 9 அன்று ஆங்கிலம், 11 அன்று கணித பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. மேலும், 4 மற்றும் 5ஆம் வகுப்பினருக்கு 15 அன்று அறிவியல் மற்றும் 17 அன்று சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 18 முதல் தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post