
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு POCSO சட்ட விழிப்புணர்வு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டப்பேரவையில் நிகழ்த்திய உரையில், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் 90,000 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு POCSO (Protection of Children from Sexual Offences) சட்டம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த பயிற்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், சமூகநலத்துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து, ரூ.4.94 இலட்சம் மதிப்பீட்டில் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறையின் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
மேலும், கல்வித் துறையில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கல், புதிய பள்ளிகள் தொடக்கம், பாடத்திட்டங்களில் மேம்பாடு உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவை பின்வருமாறு:
அறிவிப்புகள்
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
13 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு (6-8 வகுப்பு) தமிழ், ஆங்கிலம், கணிதத்தில் திறன்களை மேம்படுத்தும் திட்டம் -ரூ.19 கோடி.
1.25 லட்சம் அரசு ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி -ரூ.28 கோடி.
திறன்மிகு வகுப்பறைகளுக்கு ரூ.25 கோடியில் மேசைகள், நாற்காலிகள் உள்ளிட்ட தளவாடங்கள் வழங்கல்.
மாநில அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு"கலைச்சிற்பி" கோடைக்கால முகாம் -ரூ.70 லட்சம்.
அரசுப் பள்ளி மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டு சாதனங்கள் -ரூ.4 கோடி.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 300 இருக்கைகளுடன் கூடிய கருத்தரங்கக் கூடம் அமைப்பு -ரூ.3 கோடி.
இசைப்பள்ளி மாணவர்களுக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு சான்றிதழுக்கு இணையான சான்றிதழ் வழங்கல்.
தொழிற்பயிற்சி வாயிலாக 12,000 மாணவர்களுக்கு தொழில் திறன் பயிற்சி - ரூ.13 கோடி.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புகள்
— Sun News (@sunnewstamil) April 25, 2025
📚 அரசுப் பள்ளிகளில் 6 - 8ம் வகுப்பு பயிலும் 13 லட்ச மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் 'திறன் எண்ணும் முனைப்பு இயக்கம்' ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
📚…