NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரிவாளால் சகமாணவனை வெட்டிய 8ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரிவாளால் சகமாணவனை வெட்டிய 8ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
    அந்த மாணவன் தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளான்

    அரிவாளால் சகமாணவனை வெட்டிய 8ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 16, 2025
    03:36 pm

    செய்தி முன்னோட்டம்

    திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது சக மாணவனை அரிவாளால் வெட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.

    தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அந்த மாணவன் தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

    ஒரு சிறிய பென்சிலுக்கான தொடங்கிய வாக்குவாதம், அரிவாள் வெட்டு வரை கொண்டு சென்ற சம்பவம் பெற்றோர்களிடத்தில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

    சம்பவம்

    பள்ளிவளாகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்

    நேற்று காலை 10.30 மணியளவில் ஆசிரியர்கள் தேர்வுக்கான தயார் வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் 8ஆம் வகுப்பின் ஒரு மாணவன், தன் புத்தகப்பையிலிருந்து அரிவாளை எடுத்துச் சரமாரியாக முன்பெஞ்சில் அமர்ந்திருந்த மாணவனை தலை, தோள்பட்டை மற்றும் இரண்டு கைகளில் வெட்டினார்.

    சம்பவத்தை பார்த்த ஆசிரியை ரேவதி மாணவனை பாதுகாக்க ஓடி வந்தார். மாணவனை தடுக்க முயன்ற போது, அவருக்கும் இரு கைகளிலும் வெட்டு காயம் ஏற்பட்டது.

    தாக்கிய மாணவன் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி, அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கே நடந்தே சென்று சரணடைந்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    விவகாரம்

    2 மாதங்களுக்கு முன்னர் பென்சில் சண்டையால் ஏற்பட்ட பகையுணர்வு

    இது தொடர்பான போலீஸ் விசாரணையில், முன்னதாக ஏற்பட்ட சிறிய தகராறை மனதில் வைத்துக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிந்துள்ளது.

    2 மாதங்களுக்கு முன்பு, பென்சில் யாருடையது என்பதைப் பற்றிய சிறிய சண்டை இந்த இரண்டு மாணவர்களுக்குள் ஏற்பட்டது.

    இது குறித்து இரு தரப்பு பெற்றோர்களையும் ஆசிரியர்கள் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொடர்ந்து, வகுப்பாசிரியர் அந்த இரு மாணவர்களையும் வெவ்வேறு இடங்களில் அமர வைத்து பிரித்திருந்தார்.

    இந்நிலையில், மாணவன் அந்த நிகழ்வை மனதில் வைத்துக்கொண்டு, நேற்று தனது பையில் அரிவாளை கொண்டு வந்து, வகுப்பின் போது முன் பெஞ்சில் இருந்த சக மாணவனை வெட்டியதாக போலீசாருக்கு விசாரணையில் தெரிவித்துள்ளான்.

    நீதிமன்ற காவல்

    14 நாட்கள் சிறுவர் சீர்திருத்தக் கூடத்தில் காவல் மற்றும் கவுன்சிலிங்

    அரிவாளால் தாக்கிய மாணவனை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரித்த போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி, அவரை 14 நாட்கள் சிறுவர் சீர்திருத்தக் கூடத்தில் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், மாணவனுக்கு தகுதியான நபர்க மூலமாக மனநல ஆலோசனை(கவுன்சிலிங்) வழங்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீதும் குற்றச்சாட்டு முன்வைத்து, பாதுகாப்பில் தவறுகள் ஏற்பட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருநெல்வேலி
    பள்ளி மாணவர்கள்
    பள்ளிகள்
    பள்ளிக்கல்வித்துறை

    சமீபத்திய

    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இனி சிக்கல் இல்லை; டிராகன் காப்ஸ்யூல் மிரட்டலை வாபஸ் பெற்றார் எலான் மஸ்க் எலான் மஸ்க்
    செமிகண்டக்டர் துறையில் தற்சார்பை அடைவதற்கான முக்கிய படி; டாடா எலக்ட்ரானிக்ஸ்-பிஇஎல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் டாடா
    பெங்களூர் கூட்ட நெரிசலுக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா கிரிக்கெட்
    ₹300 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள்; மாநிலங்களவை தேர்தலுக்கான பிரமாண பத்திரத்தில் கமல்ஹாசன் தகவல் கமல்ஹாசன்

    திருநெல்வேலி

    நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை - இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தகவல் தூத்துக்குடி
    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு - தலைமை செயலாளர் பேட்டி  கனமழை
    மீட்பு பணிகள் குறித்து விமர்சித்தவர்களுக்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் நெத்தியடி உதயநிதி ஸ்டாலின்
    நிவாரண பொருட்களை இலவசமாக அரசு விரைவு பேருந்துகளில் அனுப்பலாம் - தமிழக அரசு  தமிழக அரசு

    பள்ளி மாணவர்கள்

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி பாடம் பயிற்றுவிப்பு; பிரான்ஸ் தூதரகத்துடன் ஒப்பந்தம் பள்ளிகள்
    மாணவ மாணவிகளுக்கு ஓர் நற்செய்தி..காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு பள்ளிகள்
    6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு குட் நியூஸ்; அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித்துறை
    தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு: வெளியான அறிவிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை

    பள்ளிகள்

    10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அறிவிப்பு; முழு விவரம் இதோ! பள்ளிக்கல்வித்துறை
    வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையா? காற்றழுத்த தாழ்வு நிலை
    கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை; IT ஊழியர்களுக்கு WFH அறிவுறுத்தல் பள்ளிகளுக்கு விடுமுறை
    கனமழை எதிரொலி: மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ் கனமழை

    பள்ளிக்கல்வித்துறை

    தமிழகம் முழுவதும் போரட்டத்தில் குதித்த தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுவது என்ன? தமிழகம்
    பள்ளி கல்வியாண்டில் குறைக்கப்பட்ட வேலை நாட்கள்: புதிய நாட்காட்டி வெளியானது  பள்ளிகள்
    முறைகேடுகளை தவிர்ப்பதற்காக மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கிறது பள்ளிக் கல்வித்துறை தமிழக அரசு
    வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி  வேலைநிறுத்தம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025