உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

லட்சத்தீவு விவகாரத்தில் மாலத்தீவுவாசிகள் அதன் அரசாங்கத்தை விமர்சிப்பது ஏன்? ஒரு அலசல்

கடந்த ஒரு வாரமாக, இந்தியா-மாலத்தீவிற்கு இடையேயான ராஜதந்திர விவகாரங்கள் பிளவுபட்டுள்ளது.

12 Jan 2024

ஏமன்

ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தாக்குதல்

ஏமன் நாட்டை சேர்ந்த ஹூதி இயக்கத்துடன் தொடர்புடைய இடங்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன.

லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக UNSC உறுதி

ஹபீஸ் சயீத்துக்கு அடுத்த தலைவராக இருந்த லஷ்கர்-இ-தொய்பா(LeT) நிறுவன உறுப்பினர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டது உறுதி என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில்(UNSC) தெரிவித்துள்ளது.

சாமானிய பெண்ணை திருமணம் செய்யவுள்ள புருனே இளவரசர் அப்துல் மாதின்

"ஹாட் ராயல்" என்று அழைக்கப்படும் புருனேயின் இளவரசர் அப்துல் மதீன் இப்னி ஹசனல் போல்கியா, தனது வருங்கால மனைவி அனிஷா ரோஸ்னாவை ஞாயிற்று கிழமை திருமணம் செய்யவுள்ளார்.

11 Jan 2024

உலகம்

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள்: முதல் இடத்தில் 6 நாடுகள்

சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களை கொண்டுள்ளன.

பயங்கரவாதி பன்னூன் கொலை சதி திட்ட வழக்கு: நிகில் குப்தாவின் வழக்கறிஞர்களுக்கு ஆதாரத்தை வழங்க அமெரிக்கா எதிர்ப்பு

பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் நிகில் குப்தாவின் வழக்கறிஞரிடம் ஆதாரங்களை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

வீடியோ: யாருக்கும் தெரியாமல் புரூக்ளின் ஜெப ஆலயத்திற்கு கீழ் இரகசிய சுரங்கப்பாதை தோண்டிய கூட்டம் 

அமெரிக்காவின் வரலாற்று சிறப்புமிக்க புரூக்ளின் ஜெப ஆலயத்திற்கு அடியில் இரகசியமாக சுரங்கப்பாதை தோண்டிய கூட்டத்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வீடியோ: சிறையில் இருந்து தப்பித்த கைதிகள் துப்பாக்கிகளுடன் ஈக்வடார் டிவி ஸ்டூடியோவுக்குள் நுழைந்ததால் பரபரப்பு

முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் சிலர் ஒரு தொலைக்காட்சி ஸ்டுடியோவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதோடு, பாதுகாப்புப் படையினரையும் பொதுமக்களையும் தூக்கிலிட அச்சுறுத்தியதால் ஈக்வடார் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

10 Jan 2024

சீனா

இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, பெரும்பாலான இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கான தங்களது முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர்.

09 Jan 2024

ஜப்பான்

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவு 

கடந்த வாரம் பல பயங்கரமான நிலநடுக்கங்கள் ஜப்பானில் ஏற்பட்டு மக்களை பீதியடைய செய்திருந்த நிலையில், இன்று மத்திய ஜப்பானில் 6.0 ரிக்டர் அளவுள்ள மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நாய் இறைச்சிக்கு நிரந்தர தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது தென் கொரியா

தென் கொரியாவின் நாடாளுமன்றம் செவ்வாயன்று நாய் இறைச்சித் தொழிலை சட்டவிரோதமாக்குவதற்கான முக்கிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

'போயிங் 737 MAX 9' விமானங்களில் உள்ள கதவுகளின் போல்ட்கள் லூசாக இருந்ததாக சோதனையில் தகவல் 

அமெரிக்கா: கடந்த சனிக்கிழமை, 174 பயணிகளை ஏற்றி சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசர வெளியேறும் கதவு நடுவானில் பிய்ந்து காற்றோடு பறந்தது.

அமெரிக்காவின் ஹூதி எதிர்ப்புப் போரில் இணைந்தது இலங்கை 

ஹூதி போராளிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கடல்சார் பிரிவில் இணைவதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்

மாலத்தீவுடனான இராஜதந்திர மோதல்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான தரக்குறைவான கருத்துக்கள் மாலத்தீவு அரசாங்கத்தின் "குறுகிய பார்வையை" காட்டுகிறது என்றும், இந்தியா நம்பகமான நட்பு நாடாக இருந்து வருகிறது என்றும் அந்த நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமது திதி கூறியுள்ளார்.

அலாஸ்கா ஏர்லைன்ஸின் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து 

171 போயிங் 737 MAX 9 விமானங்களை தரையிறக்க அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன்(FAA) உத்தரவிட்டதை அடுத்து, அலாஸ்கா ஏர்லைன்ஸ் ஞாயிற்றுக்கிழமை 170 விமானங்களையும், திங்களன்று கூடுதலாக 60 விமானங்களையும் ரத்து செய்தது.

5வது முறையாக ஆட்சியை கைப்பற்றினார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 

எதிர்க்கட்சியின் புறக்கணிப்பைத் தொடர்ந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று ஐந்தாவது முறையாக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றார்.

இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக 3 அமைச்சர்களை இடைநீக்கம் செய்தது மாலத்தீவு அரசு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக மாலத்தீவு அரசு, தனது அமைச்சர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்துள்ளது.

07 Jan 2024

இஸ்ரேல்

வடக்கு காசாவில் இருந்த ஹமாஸ் இராணுவக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக அறிவித்தது இஸ்ரேல் 

வடக்கு காசா பகுதியில் உள்ள ஹமாஸின் இராணுவ கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமையன்று அறிவித்துள்ளது.

வங்கதேச தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஷேக் ஹசீனா மீண்டும் பதவியேற்க வாய்ப்பு 

வங்காளதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது தேர்தல் வாக்களிப்பு தொடங்கியது.

வீடியோ: நடுவானில் காற்றோடு பறந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு; பரபரப்பான சூழலில் அவசர தரையிறக்கம் 

174 பயணிகளை ஏற்றி சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசர வெளியேறும் கதவு நடுவானில் பிய்ந்து விழுந்ததால் அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது,

அமெரிக்கா: கலிபோனியாவில் இந்திய எதிர்ப்பு வாசகங்களால் சிதைக்கப்பட்ட மற்றொரு இந்து கோவில்

அமெரிக்காவின் கலிபோனியா மாகாணத்தின் ஹேவர்டில் உள்ள ஒரு இந்து கோவில், காலிஸ்தான் ஆதரவு மற்றும் இந்திய எதிர்ப்பு வாசகங்களால் சிதைக்கப்பட்டுள்ளது.

சோமாலியாவில் 15 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட சரக்குக் கப்பல்: காப்பாற்ற விரையும் ஐஎன்எஸ் சென்னை

சோமாலியா கடற்கரை அருகே நேற்று மாலை 'எம்வி லிலா நார்ஃபோல்க்' என்ற சரக்குக் கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட கப்பலில் 15 இந்தியர்கள் இருந்தனர்.

அமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள்

ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஆயுதமேந்திய ஆளில்லா படகு வியாழன் அன்று, அமெரிக்க கடற்படை மற்றும் வணிகக் கப்பல்களின் இரண்டு மைல் தூரத்திற்கு நெருங்கி சென்று வெடித்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளின் இரண்டாவது தொகுப்பு வெளியீடு

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அமெரிக்க செனட்டர் ஜார்ஜ் மிட்செல் மற்றும் முன்னாள் அமெரிக்க தூதரும் நியூ மெக்சிகோ கவர்னருமான பில் ரிச்சர்ட்சன் உட்பட, ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான 19 புதிய ஆவணங்களில் பல பணக்காரர்கள் மற்றும் பிரபலமானவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அயோவா மாகாண பள்ளியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் பெர்ரி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஆறாம் வகுப்பு மாணவன் கொல்லப்பட்ட நிலையில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

04 Jan 2024

ஜப்பான்

ஜப்பான் நிலநடுக்கம்: 84 ஆக உயர்ந்த உயிரிழப்பு

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் 7.5 ரிக்டராகப் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

04 Jan 2024

வெனிஸ்

இந்த ஆண்டு முதல் வெனிஸ் நகரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கால்வாய் நகரமான வெனிஸ், சுற்றுலாவாசிகள் அனைவரிடத்திலும் மிகப்பிரபலம்.

04 Jan 2024

ஈரான்

ஈரானில் இரட்டை குண்டுவெடிப்புகளால் தாக்கப்பட்ட காசிம் சுலைமானி கல்லறை- யார் அவர்?

ஈரானின் புரட்சிகர காவல் படை தலைவர் காசிம் சுலைமானி அமெரிக்காவினால் கொல்லப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு நாளில், அவரது கல்லறை அருகே நிகழ்த்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 95 பேர் உயிரிழந்தனர்.

இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டையர்கள்- அமெரிக்காவில் சுவாரஸ்யம்

அமெரிக்காவில் 40 நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர்களுக்கு, வெவ்வேறு நாட்கள், வெவ்வேறு மாதங்கள், என் பிறந்த ஆண்டுகள் கூட வெவ்வேறாக அமைந்த சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இளவரசர் ஆண்ட்ரு முதல் பில் கிளின்டன் வரை: ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரபலங்கள் 

அமெரிக்காவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் கூட்டாளிகளை அடையாளம் காணும் ஏராளமான நீதிமன்ற ஆவணங்கள், புதன்கிழமை பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.

04 Jan 2024

ரஷ்யா

ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் அறிவிப்பு

ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் தலா 200 சிறைபிடிக்கப்பட்ட வீரர்களை பரிமாற்றம் செய்து கொண்டதாக புதன்கிழமை தெரிவித்துள்ள நிலையில், போர் தொடங்கியதற்கு பின்னர் மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றமாக இதை அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

04 Jan 2024

ஈரான்

ஈரானிய ஜெனரல் சுலைமானியின் நினைவிடத்தில் இரட்டை குண்டுவெடிப்பு: 95 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

ஈரானின் தென்கிழக்கு நகரமான கெர்மனில் நேற்று (3 ஜனவரி 2024 ) நடைபெற்ற ஜெனரல் சுலைமானியின் நான்காவது ஆண்டு நினைவேந்தல் விழாவில் இரட்டை வெடிகுண்டு வெடித்ததில், குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டனர், 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: அமெரிக்க ராணுவம்

செங்கடலில் பாப் எல்-மண்டேப் ஜலசந்திக்கு அருகில், லெபனானின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் வர்த்தக கப்பல்கள் மீது இரண்டு ஏவுகணைகள் மூலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

03 Jan 2024

ஹமாஸ்

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டார்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் செவ்வாய்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பும், லெபனான் பாதுகாப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

02 Jan 2024

ஜப்பான்

கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதி தீப்பிடித்த ஜப்பான் விமானம்: 5 பேர் பலி 

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் இன்று ஒரு ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்ததால் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

02 Jan 2024

ஜப்பான்

டோக்கியோவில் தீப்பிடித்து எரிந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம்: என்ன நடந்தது?

ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று இன்று டோக்கியோ-ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஓடி கொண்டிருக்கும் போது கடலோர காவல்படை விமானம் மீது மோதியதால் தீப்பிடித்து எரிந்தது.

தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங் கழுத்தில் கத்தி குத்து

தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவரான லீ ஜே-மியுங் செவ்வாயன்று தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு சென்றிருந்த போது அடையாளம் தெரியாத ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கத்தியால் குத்தினார்.

02 Jan 2024

ஜப்பான்

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் 155 நிலநடுக்கங்கள்: 48 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

2024 ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று ஜப்பானில் ஏற்பட்ட தொடர்ச்சியான பூகம்பங்களால் குறைந்தது 48 பேர் உயிரிழந்தனர்.

01 Jan 2024

ஜப்பான்

வீடியோ: ஜப்பான் நகரத்தை தாக்கியது இந்த ஆண்டின் முதல் சுனாமி 

ஜப்பானில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

01 Jan 2024

ஜப்பான்

ஜப்பான் நிலநடுக்கங்கள்: 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு; வடகொரியா, ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை 

மத்திய ஜப்பானில் தொடர்ச்சியான பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டதை அடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள சுமார் 33,500 குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றன.