NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்

    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 09, 2024
    09:50 am

    செய்தி முன்னோட்டம்

    மாலத்தீவுடனான இராஜதந்திர மோதல்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான தரக்குறைவான கருத்துக்கள் மாலத்தீவு அரசாங்கத்தின் "குறுகிய பார்வையை" காட்டுகிறது என்றும், இந்தியா நம்பகமான நட்பு நாடாக இருந்து வருகிறது என்றும் அந்த நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமது திதி கூறியுள்ளார்.

    இதற்கிடையில், மாலத்தீவு தற்போது சீனாவின் பேச்சை கேட்டு நடக்கிறது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

    பிரதமர் மோடி தனது லட்சத்தீவு பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை சமீபத்தில் வெளியிட்டு, அந்த தீவை இந்தியர்களுக்கான சுற்றுலா தலமாக அறிவித்தார்.

    இதையடுத்து, மாலத்தீவுக்கு மாற்றான ஒரு சுற்றுலா தலமாக லட்சத்தீவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்று கருதி பிரதமர் மோடியையும் லட்சத்தீவையும் 3 மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்து தரக்குறைவாக பேசியிருந்தனர்.

    ஜஃன்க் டிஸ்,

    "இந்தியா எல்லா நேரங்களிலும் நமக்கு உதவி இருக்கிறது": மாலத்தீவின் முன்னாள் அமைச்சர்

    இதனால், மாலத்தீவு மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள் சேதமடைந்துள்ளன.

    மாலத்தீவு அரசாங்கம், இந்தியப் பிரதமருக்கு எதிராக அந்நாட்டு அமைச்சர்கள் கூறிய இழிவான கருத்துக்களை நிராகரித்ததுடன், அவர் கூறியது மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்கள் இல்லை என்று மறுத்துள்ளது.

    மேலும், அப்படிப்பட்ட கருத்துக்களை கூறிய 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர், "இது தற்போதைய அரசாங்கத்தின் குறுகிய பார்வையாகும். நாங்கள் அனைவருடனும் நட்புடன் இருக்கும் ஒரு சிறிய நாடுதான். ஆனால் இந்தியாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை மறுக்க முடியாது. அதேபோல பாதுகாப்பு கவலைகளையும் நமது இரு நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன. இந்தியா எல்லா நேரங்களிலும் நமக்கு உதவி இருக்கிறது." என்று கூறியுள்ளார்.

    பிஜிக்கெவ்

    மாலத்தீவு அதிபரை பதவி நீக்க அழைப்பு விடுக்கும்  நாடாளுமன்ற தலைவர் 

    "திறன் மேம்பாடு, ஆயுதம் வழங்குதல், மேலும் நம்மைத் தன்னிறைவு உள்ள நாடாக மாற்றவும் பாதுகாப்புத் துறையில் இந்தியா நமக்கு உதவ முயற்சித்து வருகிறது" என்றும் மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், பிரதமர் மோடி குறித்த பிரச்சனைக்கு மத்தியில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் அதிபர் முகமது முய்ஸுவை பதவி நீக்குவதற்கு மாலத்தீவின் நாடாளுமன்ற சிறுபான்மைத் தலைவர் அலி அசிம் அழைப்பு விடுத்துள்ளார்.

    "ஜனநாயகவாதிகளாகிய நாங்கள், நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கும், அண்டை நாடுகளுடன் உறவை பேணுவதற்கும் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அதிபர் முய்ஸுவை ஆட்சியில் இருந்து அகற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க விரும்புகிறீர்களா? MDP செயலகம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் தொடங்கத் தயாராக உள்ளதா?" என்று அவர் கூறியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    நாடாளுமன்ற சிறுபான்மைத் தலைவர் அலி அசிமின் ட்விட்டர் பதிவு 

    We, d Democrats, r dedicated to upholding d stability of the nation's foreign policy n preventing d isolation of any neighboring country.
    R u willing to take all necessary steps to remove prez @MMuizzu from power? Is @MDPSecretariat prepared to initiate a vote of no confidence?

    — 𝐀𝐥𝐢 𝐀𝐳𝐢𝐦 (@aliaazim) January 8, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாலத்தீவு
    லட்சத்தீவு
    இந்தியா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    மாலத்தீவு

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா

    லட்சத்தீவு

     ஜனவரி 2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; ₹19,850 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    2023-ல் இந்தியாவில் வெளியான சிறந்த ஹைபிரிட் கார்கள் கார்
    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: QR குறியீடு நன்கொடை மோசடி குறித்த எச்சரிக்கை உத்தரப்பிரதேசம்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்

    பிரதமர் மோடி

    ஜம்மு காஷ்மீர் சிறப்பு தகுதி ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து காஷ்மீர் தலைவர்கள் கூறியது என்ன? ஜம்மு காஷ்மீர்
    மக்களவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து, மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நாடாளுமன்றம்
    சீன ஆய்வு கப்பலுக்கு இலங்கை, மாலத்தீவுகள் அனுமதி வழங்க இந்தியா எதிர்ப்பு சீனா
    உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  குஜராத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025