NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஈரானிய ஜெனரல் சுலைமானியின் நினைவிடத்தில் இரட்டை குண்டுவெடிப்பு: 95 பேர் கொல்லப்பட்டதாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரானிய ஜெனரல் சுலைமானியின் நினைவிடத்தில் இரட்டை குண்டுவெடிப்பு: 95 பேர் கொல்லப்பட்டதாக தகவல்
    ஈரானிய ஜெனரல் சுலைமானியின் நினைவிடத்தில் இரட்டை குண்டுவெடிப்பு: 95 பேர் கொல்லப்பட்டதாக தகவல் pc: Reuters

    ஈரானிய ஜெனரல் சுலைமானியின் நினைவிடத்தில் இரட்டை குண்டுவெடிப்பு: 95 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 04, 2024
    08:21 am

    செய்தி முன்னோட்டம்

    ஈரானின் தென்கிழக்கு நகரமான கெர்மனில் நேற்று (3 ஜனவரி 2024 ) நடைபெற்ற ஜெனரல் சுலைமானியின் நான்காவது ஆண்டு நினைவேந்தல் விழாவில் இரட்டை வெடிகுண்டு வெடித்ததில், குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டனர், 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஆளில்லா விமானத்தால் கொல்லப்பட்ட ஈரானிய படைத்தளபதி காசிம் சுலைமானியின் நினைவு தினமான நேற்று, அவருக்கு அஞ்சலி செலுத்த, அவரின் நினைவிடத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தபோது இரட்டை குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

    ஈரானிய அரசு தொலைக்காட்சியின்படி, இரண்டு குண்டு வெடிப்புகளும் 20 நிமிட இடைவேளையில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

    சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்ததாக மாநில ஒளிபரப்பு நிறுவனமான இரிப் தெரிவித்துள்ளது.

    card 2

    IS போராளிகளால் நடத்தப்பட்டதா?

    குண்டுவெடிப்புகளுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இந்த இரட்டை குண்டு வெடிப்புக்கு குறிப்பிடப்படாத "பயங்கரவாதிகள்" தான் காரணம் என்று ஈரானிய அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

    இதற்கிடையில், அமெரிக்காவின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர், இந்த குண்டுவெடிப்புகளை பார்க்கும் போது, முற்காலத்தில் IS போராளிகளால் நடத்தப்பட்ட "பயங்கரவாத தாக்குதலை" ஒத்து இருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த தாக்குதலை ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி வன்மையாக கண்டித்துள்ளார். "இது "கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற குற்றம்" என்று அவர் கூறினார்."இந்த கோழைத்தனமான செயலை செய்த குற்றவாளிகள் மற்றும் தலைவர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கப் படைகளால் தண்டிக்கப்படுவார்கள்" என்றும் ஈரான் அதிபர் கூறினார்.

    card 3

    இஸ்ரேல் மீது குற்றம் சாடுகிறதா ஈரான்?

    கடந்த காலங்களில், ஈரான் எல்லைகளுக்குள் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, ஈரான், இஸ்ரேலைக் குற்றம் சாட்டி வந்தது.

    ஆனால் அக்குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேல் அரசு உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஆனால், தற்போது நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்புகளில் வெளிநாட்டு அரசின் தொடர்பு எதுவும் இல்லை என ஈரான் அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கன்றன.

    இந்த குண்டு வெடிப்புகளை ரஷ்யா, துருக்கி உட்பட பல உலக நாடுகள் கண்டித்துள்ளன.

    இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் என்று ஐ.நா. சபை தலைவரும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    குண்டுவெடிப்பு

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    ஈரான்

    கடற்படை ஏவுகணையை உருவாக்கியுள்ள ஈரான் அமெரிக்கா
    பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க பள்ளிகளில் விஷவாயுவை பரப்பியதா ஈரான் உலகம்
    ஈரான் விஷவாயு பிரச்சனை: மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் ஈரான் தலைவர் உலகம்
    ஈரான் ஹிஜாப் போராட்டத்தில் கலந்துகொண்ட 22 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு உலகம்

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025