NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டார்

    லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டார்

    எழுதியவர் Srinath r
    Jan 03, 2024
    10:13 am

    செய்தி முன்னோட்டம்

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் செவ்வாய்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பும், லெபனான் பாதுகாப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

    இஸ்ரேலின் தாக்குதலில் சலே அல்-அரூரி அவரது பாதுகாவலர்களுடன் கொல்லப்பட்டதாக, உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஏஎஃப்பி இடம் கூறினார்.

    தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்ட கட்டிடத்தின் இரண்டு தளங்கள் மற்றும் ஒரு கார் சேதமடைந்ததாக மற்றொரு உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    லெபனானின் ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா இயக்கத்தின் கோட்டையான பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில், தாக்குதல் நடைபெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

    அல்-அரூரி உயிரிழந்ததை ஹமாஸ் தொலைக்காட்சி உறுதி செய்துள்ள நிலையில், லெபனான் தேசிய ஊடகங்கள் இஸ்ரேல் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    2nd card

    காசாவில் தொடர்ந்து கொல்லப்படும் பாலஸ்தீனர்கள்

    அக்டோபர்7ம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பின் திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பின்னர், பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.

    இதன் விளைவாக, கிட்டத்தட்ட 90 நாட்களை நெருங்கும் இப்போரில், 22,185 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், காசாவில் உள்ள 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

    ஹமாஸ் நடத்தும் காசாவின் சுகாதார அமைச்சகம், இஸ்ரேலிய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 70 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.

    இஸ்ரேல் தரப்பில் அந்நாட்டின் புள்ளிவிவரங்களின்படி, ஹமாஸ் தாக்குதலில் 1,140 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 250 பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    அவர்களில் 129 பேர் இன்னமும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

    3rd card

    பணய கைதிகள் விடுதலை பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்?

    பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரேலிய ஆதாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்சியோஸ், கத்தார் மற்றும் எகிப்திய மத்தியஸ்தர்கள் மூலம் புதிய பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கான திட்டத்தை, ஹமாஸ் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிடம் முன் வைத்ததாக கூறியுள்ளது.

    இருப்பினும், அந்த திட்டம் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இல்லை என்பதால், இஸ்ரேலின் போர் அமைச்சரவை ஏற்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    இந்த பேச்சுவார்த்தை, எதிர்காலத்தில் மிகவும் இணக்கமான திட்டத்தை நோக்கி முன்னேறலாம் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹமாஸ்
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஹமாஸ்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் 11 பிணயக்கைதிகள் விடுவிப்பு இஸ்ரேல்
    இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரைக்கு இந்த வாரம் பயணிக்கிறார் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல்
    30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து 12 பிணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்
    இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்க, பேச்சுவார்த்தைகள் தீவிரம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்

    போரை தீவிரப்படுத்திய இஸ்ரேல்: 24 மணி நேரத்தில் 700 பாலஸ்தீனியர்கள் பலி இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா சுரங்கப்பாதைகளில் கடல்நீரால் வெள்ளத்தை ஏற்படுத்த இஸ்ரேல் திட்டம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஜனவரிக்குள் முடிவடையும் என கருதும் அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஹமாஸ் நிறுவனர் யாஹ்யா சின்வாரை நெருங்கும் இஸ்ரேல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்த கத்தார், போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக தகவல் இஸ்ரேல்
    'ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதால் தான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது': பிளிங்கன் இஸ்ரேல்
    போர் தொடங்கியதிலிருந்து கடுமையான தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்- கான் யூனிஸ் மக்கள் தகவல் இஸ்ரேல்
    இஸ்ரேலின் தாக்குதலை கட்டுப்படுத்த, 'வீரமான' பாகிஸ்தானிடம் உதவி கோரும் முக்கிய ஹமாஸ் தலைவர் ஹமாஸ்

    காசா

    இஸ்ரேல் ஹமாஸ் போர்- இறுதி நாள் போர் நிறுத்தத்தில் 16 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க முடிவு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க ஹமாஸ் முயற்சி இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    முடிவுக்கு வந்தது ஏழு நாள் போர் நிறுத்தம்- மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் ஹமாஸ் போர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025