லெபனான்: செய்தி
பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் ஈரான், லெபனான், ஈராக் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்ய UAE தடை விதித்துள்ளது
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது குடிமக்கள் ஈரான், லெபனான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்வதற்குத் தடை விதித்துள்ளது.
புற்றுநோய் பாதிப்பை முதன்முதலில் ஒப்புக்கொண்ட நெதன்யாகு! இப்போது உடல்நிலை எப்படி?
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(76), தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer) பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து அவர் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகவும் முதல்முறையாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
3 வாரங்களுக்கு இஸ்ரேல் - லெபனான் போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப் அறிவித்தார்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் ஒரு முக்கிய முயற்சியாக, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி! ஹார்முஸ் நீர்ச்சந்தியை திறந்தது ஈரான்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த போர் பதற்றத்திற்கு ஒரு முக்கியத் தீர்வாக, ஈரான் இன்று ஹார்முஸ் ஜலசந்தியை அனைத்து வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்காகவும் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவிட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் லெபனான் செல்கிறாரா டிரம்ப்? அமெரிக்கா-ஈரான் போர் ஒப்பந்தம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டால், தான் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள் போர்நிறுத்தம்: டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில வாரங்களாகத் தீவிரமடைந்து வந்த இஸ்ரேல் - லெபனான் மோதலில் ஒரு முக்கிய திருப்பமாக, இரு நாடுகளும் 10 நாள் தற்காலிகப் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இன்று நடக்கிறது வரலாற்று சந்திப்பு! இஸ்ரேல் -லெபனான் இடையே 34 வருடப் பகைக்கு முற்றுப்புள்ளி வைக்க டிரம்ப் முயற்சி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல தசாப்தங்களாக நிலவி வரும் மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டுத் தலைவர்கள் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பை நிகழ்த்த உள்ளனர்.
இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறுத்துவைத்தது இத்தாலி
ராணுவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி பரிமாற்றங்களை உள்ளடக்கிய, இஸ்ரேலுடனான தனது பாதுகாப்பு ஒப்பந்தத்தை இத்தாலி இடைநிறுத்தியுள்ளது.
'இனி வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு கவலையில்லை': ஈரான் அமைதி பேச்சுவார்த்தை முறிவு குறித்து டிரம்ப்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்துள்ள நிலையில், இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அதிரடியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா ரெடி..ஆனால் ஈரான் வருமா? இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தையில் நீடிக்கும் மர்மம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்க, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்கா -ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு இக்கட்டான சூழலை எட்டியுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன் வெடிக்கும் வார்த்தை மோதல்; இஸ்ரேலை சாடிய பாகிஸ்தான் அமைச்சர்
வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான ராஜதந்திர மோதல் வெடித்துள்ளது.
உலக நாடுகளின் நெருக்கடியை அடுத்து லெபனானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறது இஸ்ரேல்
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையானத் தாக்குதல்களில் ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
'போர் நிறுத்தத்தின் பிரிக்க முடியாத அங்கம் லெபனான்': போர் நிறுத்தத்தை மீறுபவர்களுக்கு ஈரான் எச்சரிக்கை
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதோடு பேச்சுவார்த்தைகளையும் பயனற்றதாக்குகிறது என்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கூறியுள்ளார்.
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக பாகிஸ்தானின் நம்பகத்தன்மையை கேள்விகேட்கும் இஸ்ரேல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக பாகிஸ்தானின் பங்கு குறித்து, இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
'பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் தான்': ஈரானை மிரட்டும் டிரம்ப்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மிரட்டலான தொனியை மாற்றிக்கொள்ளவில்லை.
போர் நிறுத்தத்தில் விரிசல் காரணமாக பங்குச் சந்தையில் சரிவு! கச்சா எண்ணெய் விலையால் முதலீட்டாளர்கள் கலக்கம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளதைத் தொடர்ந்து, உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.
'பேச்சுவார்த்தையில் லெபனான் இல்லை': பாகிஸ்தான் கிளம்பும் முன் ஜே.டி. வேன்ஸ்
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் விவகாரம் சேர்க்கப்படவில்லை என்பதை அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி அபாயம்! கப்பல்களுக்கு மாற்றுப் பாதையை அறிவித்த ஈரான்
ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கடல் கண்ணிவெடிகள் (Sea Mines) இருக்கும் அபாயம் உள்ளதாகக் கூறி, அங்கு பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரான் புதிய மாற்றுப் பாதைகளை அறிவித்துள்ளது.
காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் புதிய தாக்குதல்: 25 பேர் கொல்லப்பட்டதாக தகவல்
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) வியாழக்கிழமை (நவம்பர் 20) காசா நகரம் மற்றும் கான் யூனிஸ் பகுதிகளில் ஒரு புதிய தாக்குதலை நடத்தியுள்ளன.
இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி பலி
டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தித்தாளின் அறிக்கையின்படி, தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட ரத்வான் படையின் மூத்த தளபதி அகமது அட்னான் பாஜிஜாவுடன் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டார்.
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர்நிறுத்தத்திற்கு மத்தியில் லெபனான் ஜனாதிபதியாக ராணுவத் தலைவர் ஜோசப் அவுன் தேர்வு
லெபனானின் ராணுவத் தலைவர் ஜெனரல் ஜோசப் அவுன், வியாழன் (ஜனவரி 9) அன்று லெபனானின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், இரண்டு வருட அரசியல் முட்டுக்கட்டை முடிவுக்கு வந்தது.
கிளர்ச்சியாளர்கள் நாட்டை கைப்பற்றியதையடுத்து சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
சிரியா கிளர்ச்சிப் படைகள், எதேச்சதிகார ஜனாதிபதி பஷர் அல்-ஆசாத்தை தூக்கியெறிந்து, அவரது 14 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, சிரியாவில் இருந்து 75 இந்திய பிரஜைகளை இந்தியா செவ்வாய்கிழமை பத்திரமாக மீட்டது.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா லெபனானிடம் சமர்ப்பித்தது
இஸ்ரேலுக்கும், ஹெஸ்புல்லாவுக்கும் இடையே நடந்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, லெபனானிடம் போர் நிறுத்த வரைவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பேஜர் தாக்குதல்களை செய்தது நாங்கள் தான்: ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
செப்டம்பர் மாதம் லெபனானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஹெஸ்பொல்லாவின் மறைவிடங்கள் மீதான பேஜர் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை ஒப்புக்கொண்டார்.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி; 80 ஏவுகணைகளை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல்
சனிக்கிழமை (அக்டோபர் 26) ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, லெபனானில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்
சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ட்ரோன் மூலம் ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்று சனிக்கிழமை (அக்டோபர் 19) நடத்தப்பட்டது.
ஐநா அமைதிப் படை நிலைகள் மீதான இஸ்ரேல் தாக்குதல்; இந்தியா கவலை
தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைத் தளத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, நீலக் கோடு பகுதியில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
லெபனானை அடுத்து ஏமன் பக்கம் திரும்பிய இஸ்ரேல்; ஹவுதி நிலைகள் மீது சரமாரி தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) இஸ்ரேல் ராணுவம் ஏமனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பிற ஹவுதி இலக்குகள் மீது குண்டுவீச்சு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சையத் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்; தலைவரின் மரணத்தை உறுதி செய்தது ஹிஸ்புல்லா
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளை தொடர்ந்து இஸ்ரேல் குறிவைத்து தாக்கி வரும் நிலையில், ஹிஸ்புல்லாவின் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா மற்றும் அவரது மகள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) இரவு பெய்ரூட்டில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மற்றும் அவரது மகள் பலி
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) இரவு பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா மீதான போரை 21 நாட்கள் நிறுத்துவதற்கான முன்மொழிவை நிராகரித்தது இஸ்ரேல்
இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வியாழனன்று (செப்டம்பர் 26) ஹிஸ்புல்லாவுடன் போர்நிறுத்தம் செய்வதற்கான முன்மொழிவுகளை நிராகரித்தார்.
லெபனானில் குண்டு மழை பொழியும் இஸ்ரேல்: 200 ராக்கெட்டுகள் மூலம் ஹிஸ்புல்லா பதிலடி தாக்குதல்
லெபனான் பயங்கரவாதக் குழுவான ஹிஸ்புல்லா திங்களன்று (உள்ளூர் நேரம்) தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக கிட்டத்தட்ட 200 ராக்கெட்டுகளை வடக்கு இஸ்ரேல் மீது வீசியது.
180 பேர் பலி; ஹிஸ்புல்லாவின் 300 இலக்குகளை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
திங்களன்று (செப்டம்பர் 23) நூற்றுக்கணக்கான ஹிஸ்பூல்லா இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் அதன் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, இதில் 180 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அறிவித்துள்ளது.
முழுமையான போருக்குத் தயாராகும் இஸ்ரேல்; லெபனான் பொதுமக்களை உடனடியாக வெளியேறும்படி எச்சரிக்கை
ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை சேமித்து வைத்திருக்கும் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களையொட்டி வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து காலி செய்யுமாறு லெபனான் மக்களை இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்துள்ளது.
அடுத்தடுத்து 140 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்; இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தது ஹிஸ்புல்லா
ஏறக்குறைய ஒரு வருட போரில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் மிகத் தீவிரமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்ட ஒரு நாளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) லெபனான்-இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் மீண்டும் மாறிமாறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து லெபனான் விமானங்களில் வாக்கி-டாக்கிகளை தடை செய்த கத்தார் ஏர்வேஸ்
லெபனானின் பெய்ரூட்டில் இருந்து புறப்படும் விமானங்களில் பயணிகள் பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளை எடுத்துச் செல்வதற்கு தடை விதிப்பதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
லெபனானில் இஸ்ரேலின் அடுத்த அட்டாக்; மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம்
லெபனான் முழுவதும் தொடர்ச்சியான கொடிய தாக்குதல்களில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 3,000 பேர் காயமடைந்ததை அடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
பேஜர் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, ஹிஸ்புல்லா பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் வெடித்தன; 14 பேர் கொல்லப்பட்டனர்
லெபனானின் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் கோட்டையில் புதன்கிழமை தொடர் வாக்கி-டாக்கி வெடிப்புகள் நிகழ்ந்தன.
லெபனானில் வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்திய இஸ்ரேல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டணம்
மோதலில் பாதிக்கப்பட்ட தெற்கு லெபனானில் உள்ள குறைந்தபட்சம் ஐந்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸ் எரியூட்டும் குண்டுகளை பயன்படுத்தியுள்ளதாக உலகளாவிய மனித உரிமைகள் குழு கூறியுள்ளது.
லெபனானில் இருந்து ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் பலி, 2 பேர் காயம்
லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லை சமூகமான மார்கலியோட் அருகே உள்ள பழத்தோட்டத்தை தாக்கியதால் ஒரு இந்தியர் கொல்லப்பட்டார்.
செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: அமெரிக்க ராணுவம்
செங்கடலில் பாப் எல்-மண்டேப் ஜலசந்திக்கு அருகில், லெபனானின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் வர்த்தக கப்பல்கள் மீது இரண்டு ஏவுகணைகள் மூலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டார்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் செவ்வாய்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பும், லெபனான் பாதுகாப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஜனவரிக்குள் முடிவடையும் என கருதும் அமெரிக்க அதிகாரிகள்
காசாவின் தெற்கு பகுதியை குறிவைத்து தற்போது நடந்து வரும் இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஜனவரிக்குள் முடிவடையும் எனவும்,
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்
லெபனானில் ஈரான் ஆதரவு பெற்று இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர், இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஷியா இஸ்லாமிய குழு தெரிவித்துள்ளது.
அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கைது; தீவிரமடையும் இஸ்ரேல் போர்
திட்டமிட்டபடி இன்று காலை உள்ளூர் நேரப்படி 10:00 மணி அளவில் போர் நிறுத்தம் நடைபெறாததால், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் தீவிரம் அடைந்து வருகிறது.
ரஷ்யாவின் வாக்னர் குழு ஹெஸ்புல்லாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை அனுப்புகிறது- அமெரிக்கா
அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் படி, ரஷ்யாவின் வாக்னர் குழு ஹெஸ்புல்லாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை அனுப்ப இருப்பதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல்: ஒரே நாளில் 266 பாலஸ்தீனியர்கள் பலி
காசாவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
லெபனானில் உள்ள பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல்: போர் விரிவடைய வாய்ப்பு
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மீது இஸ்ரேல் நேற்று ஒரே இரவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இஸ்ரேலுக்கு எதிராக போரிட ஹமாஸுடன் இணைவதற்கு தயாராகும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழு
பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ் உடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போரிட தயாராக இருக்கிறோம் என்று லெபனானை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.
லெபனான்: இஸ்ரேலில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர்
லெபனான் நாட்டில் பணியாற்றி வந்த ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் பத்திரிக்கையாளர், இஸ்ரேலின் திசையில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்டார் என அந்த முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை
ஏழாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனிய போரில் புதிய அணி உருவாவதை, காஸா பகுதியில் இஸ்ரேலின் செயல்பாடுகள் தான் தீர்மானிக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு
சிரியாவிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் பல ராக்கெட்டுகள் ஏவப்பட்டது அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.