NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல்: ஒரே நாளில் 266 பாலஸ்தீனியர்கள் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல்: ஒரே நாளில் 266 பாலஸ்தீனியர்கள் பலி 
    இதுவரை 4,600 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல்: ஒரே நாளில் 266 பாலஸ்தீனியர்கள் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 23, 2023
    10:55 am

    செய்தி முன்னோட்டம்

    காசாவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

    ஜபாலியா அகதிகள் முகாமின் அல்-ஷுஹாடா பகுதியில் அமைந்திருந்த இந்தக் கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அது தரைமட்டமாக்கியது. மேலும், அந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த வீடுகளும் இடிந்து விழுந்தது என்று செய்திகள் கூறுகின்றன.

    இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் 117 குழந்தைகள் உட்பட 266 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி , பாலஸ்தீன ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1,400 இஸ்ரேலியர்களி கொன்றனர்.

    அதை தொடர்ந்து, பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.

    ஜட்வ்க்க்

    ஹெஸ்புல்லா அமைப்புக்கு எச்சரிக்கைவிடுத்தார் இஸ்ரேலிய பிரதமர் 

    இரண்டு வாரமாக தொடர்ந்து வரும் இந்த போரில் இதுவரை 4,600 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவி, விரிவடையும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    இதற்கிடையில், இஸ்ரேலை நோக்கி டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவ லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பு திட்டமிட்டிருந்ததாகவும், அதனால் திங்கள்கிழமை அதிகாலை இரண்டு ஹெஸ்புல்லா செல்களைத் தாக்கியதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

    இந்த தாக்குதலில் லெபனான் நாட்டின் ஹெஸ்புல்லாஹ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

    இதனையடுத்து, ஹெஸ்பொல்லா இந்த போரில் நுழைந்தால், அது "இரண்டாம் லெபனான் போருக்கு" வழிவகுக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    பாலஸ்தீனம்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    உலகம்

    சமீபத்திய

    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா
    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு

    இஸ்ரேல்

    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டார் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'காசா நோயாளிகளை வெளியேறும்படி கட்டாயப்படுத்துதல் மரண தண்டனைக்கு சமம்': உலக சுகாதார அமைப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் பாலஸ்தீனப் போர்- அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஆபரேஷன் அஜய்: 274 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது நான்காவது விமானம் டெல்லி

    பாலஸ்தீனம்

    இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்கள் - தமிழக அரசு அறிவிப்பு  இஸ்ரேல்
    காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முடக்க இருக்கிறது இஸ்ரேல்  இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஹமாஸ் தளபதி இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார் இஸ்ரேல்
    'இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் தற்காப்பு என்ற எல்லையை தாண்டிவிட்டது': சீனா கண்டனம்  சீனா
    காசா மக்கள் வெளியேற 3 மணி நேர காலக்கெடு விதித்தது  இஸ்ரேல்  இஸ்ரேல்
    'இஸ்ரேல் காசாவை கைப்பற்ற நினைப்பது பெரும் தவறு': அமெரிக்க அதிபர்  அமெரிக்கா

    உலகம்

    பணயக்கைதிகளைக் கொல்லப் போவதாக இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்தது ஹமாஸ் இஸ்ரேல்
    இந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    இஸ்ரேல் மீதான தாக்குதல் ஈரானின் திட்டமிட்ட சதியா? ஈரான்
    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தார் ஈரானின் உச்ச தலைவர் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025