NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஐநா அமைதிப் படை நிலைகள் மீதான இஸ்ரேல் தாக்குதல்; இந்தியா கவலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐநா அமைதிப் படை நிலைகள் மீதான இஸ்ரேல் தாக்குதல்; இந்தியா கவலை
    ஐநா அமைதிப் படை நிலைகள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

    ஐநா அமைதிப் படை நிலைகள் மீதான இஸ்ரேல் தாக்குதல்; இந்தியா கவலை

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 11, 2024
    07:23 pm

    செய்தி முன்னோட்டம்

    தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைத் தளத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, நீலக் கோடு பகுதியில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவத்தில் இரண்டு ஐநா ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். மத்திய அரசு வெளியுறவு அமைச்சகம் ஐநா வளாகத்தின் தடையற்ற தன்மையை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும், அமைதி காக்கும் படையினருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதையும் வலியுறுத்தியது.

    இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "நீலக் கோடு பகுதியில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதைக் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். நாங்கள் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்." எனத் தெரிவித்துள்ளது.

    இந்திய வீரர்கள்

    லெபனானில் 600 இந்திய வீரர்கள்

    இஸ்ரேல் - லெபனான் எல்லையில் ப்ளூ லைன் எனப்படும் 120 கிமீ நீளத்தில் லெபனானில் ஐநா அமைதி காக்கும் பணியின் ஒரு பகுதியாக 600 இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் (UNIFIL) முக்கிய தளமான ராஸ் நகுரா மற்றும் இலங்கை படையணியின் தளத்தை இலக்கு என குறிப்பிட்டதற்கு இஸ்ரேலுக்கு லெபனானின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலிய பீரங்கிகள் UNIFIL கண்காணிப்பு கோபுரம் மற்றும் ராஸ் நகுராவில் உள்ள கட்டளை மையத்தின் பிரதான நுழைவாயிலை தாக்கி சேதப்படுத்தியதாக லெபனான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    டயர் மற்றும் நகுரா இடையேயான பிரதான சாலையில் உள்ள மற்றொரு ஐநா கோபுரத்தை இஸ்ரேலிய மெர்காவா பீரங்கி ஒன்று குறிவைத்ததாக கூறப்படுகிறது.

    சர்வதேச பதில்

    இஸ்ரேல் தாக்குதலுக்கு வலுக்கும் கண்டனங்கள்

    இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த சீனா, அமைதி காக்கும் படையினர் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாகும் என்று கூறியது.

    இத்தகைய நடவடிக்கைகளை போர்க் குற்றங்களாக கருதலாம் என்று இத்தாலி பரிந்துரைத்தது. அதே நேரத்தில் அமெரிக்கா ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.

    ஹிஸ்புல்லாவின் முன்னாள் தலைவர் ஹசன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ள நிலையிலும், இந்த பிராந்தியத்தில் இஸ்ரேல் நிலம் சார்ந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவும், அங்கு நிலைகொண்டுள்ள துருப்புக்களுக்கு அபாயங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    லெபனான்
    ஐநா சபை
    இந்தியா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    இஸ்ரேல்

    பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட மரணங்கள் 'தேவையான தியாகங்கள்' என்று ஹமாஸ் தலைவர் கூறியதாக தகவல்  பாலஸ்தீனம்
    எத்தனை இஸ்ரேலிய பணயக்கைதிகள் உயிருடன் இருக்கிறார்கள் என்று 'தெரியவில்லை': ஹமாஸ் அதிகாரி  ஹமாஸ்
    ப்ராஜெக்ட் நிம்பஸ் சர்ச்சை: 1,100 மாணவர்கள் கூகுள், அமேசானை புறக்கணிப்பதாக அறிவிப்பு கூகுள்
    இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் 42 பாலத்தீனர்கள் பலி: போரை நிறுத்த வலியுறுத்தி இஸ்ரேல் மக்கள் போராட்டம்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    லெபனான்

    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    லெபனான்: இஸ்ரேலில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர் இஸ்ரேல்
    இஸ்ரேலுக்கு எதிராக போரிட ஹமாஸுடன் இணைவதற்கு தயாராகும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஐநா சபை

    காசாவில் ஐநா உதவி கிடங்குகளுக்குள் புகுந்து நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல்
    ஐநா மனித உரிமைகள் அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தின் இயக்குநர் ராஜினாமா இஸ்ரேல்
    அகதிகள் முகாம் மீதான இஸ்ரேல் தாக்குதல் போர் குற்றத்திற்கு சமமானது இஸ்ரேல்
    காசா, மேற்குகரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும் ஹமாஸ்

    இந்தியா

    2024-25 இரண்டாம் காலாண்டில் இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனை 15% அதிகரிக்கும் என கணிப்பு இரு சக்கர வாகனம்
    இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட மாட்டோம்; மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உறுதி மாலத்தீவு
    நாசாவின் புதிய விண்வெளி நிலைய கட்டுமானத்தில் பங்கேற்க இந்தியாவின் எல்&டி நிறுவனம் ஆர்வம் நாசா
    மாலத்தீவுக்கு மீண்டும் விமான முன்பதிவுகளை தொடங்கியது ஈஸ்மைடிரிப் பயண நிறுவனம் மாலத்தீவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025