NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / லெபனானில் இஸ்ரேலின் அடுத்த அட்டாக்; மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    லெபனானில் இஸ்ரேலின் அடுத்த அட்டாக்; மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம்
    மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம்

    லெபனானில் இஸ்ரேலின் அடுத்த அட்டாக்; மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 20, 2024
    11:07 am

    செய்தி முன்னோட்டம்

    லெபனான் முழுவதும் தொடர்ச்சியான கொடிய தாக்குதல்களில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 3,000 பேர் காயமடைந்ததை அடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

    கடந்த இரண்டு நாட்களாக நடந்த இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் வெடித்தன.

    கொல்லப்பட்டவர்களில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த 25 பேர் அடங்குவர்.

    பாலஸ்தீனியக் குழுவான ஹமாஸின் முக்கிய கூட்டாளியான ஹிஸ்புல்லா அக்டோபர் 7 முதல் காஸாவின் மோதலில் ஈடுபட்டு வருகிறது.

    இது பிராந்தியத்தில் ஒரு முழுமையான போரை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை அதிகரித்த நிலையில், வியாழனன்று (செப்டம்பர் 19) இஸ்ரேலிய இராணுவம் லெபனானில் நூற்றுக்கணக்கான இலக்குகளை தாக்கியதாக அறிவித்தது.

    பழிவாங்கும் உறுதிமொழி

    இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்பதாக ஹிஸ்புல்லா தலைவர் சபதம்

    இஸ்ரேல் நடத்திய இந்த இந்தத் தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான ராக்கெட் லாஞ்சர் பீப்பாய்களை அழித்ததாகக் கூறப்படுகிறது.

    அத்துடன் சுமார் 100 ஏவுகணைகள் மற்றும் கூடுதல் பயங்கரவாத உள்கட்டமைப்பு தளங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் முன்னோடியில்லாத பின்னடைவைச் சந்தித்ததாக ஹிஸ்புல்லா தலைவர் ஒப்புக்கொண்டார்.

    தாக்குதல்களுக்குப் பின்னர் தனது முதல் பொது உரையில், லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள அதன் உறுப்பினர்களுக்கு எதிரான பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி தாக்குதல்கள் எல்லா சிவப்புக் கோடுகளையும் கடந்துவிட்டதாக ஹிஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா அறிவித்தார்.

    தனது குழு பதிலடி கொடுக்கும் என்றும், இஸ்ரேலுக்கு எதிரான போரில் தயங்காமல் இருக்கும் என்றும் அவர் சபதம் செய்தார்.

    தொடர்ந்து மோதல்

    இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அறிக்கை

    லெபனான் பயங்கரவாதக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தனது நாட்டின் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட் தெரிவித்துள்ளார். "போரின் புதிய கட்டத்தில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன.

    ஆனால் குறிப்பிடத்தக்க அபாயங்களும் உள்ளன. ஹிஸ்புல்லா துன்புறுத்தப்படுவதாக உணர்கிறது. எங்கள் இராணுவ நடவடிக்கை தொடரும்." என்று காலண்ட் ஒரு அறிக்கையில் கூறினார்.

    லெபனானில் பேஜர்கள் வெடிப்பதற்கு முன்னர், இஸ்ரேல் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டினிடம் ஒரு திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கையைப் பற்றித் தெரிவித்ததாக அமெரிக்கா கூறியது. ஆனால், குறிப்பிட்ட விவரங்களை வழங்கவில்லை எனத் தெரிகிறது.

    புதனன்று வாக்கி-டாக்கி ரேடியோக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டாவது அலை தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவிடம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    லெபனான்
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் 3 மகன்கள் பலி  இஸ்ரேல்
    ஈரானின் குண்டு வீச்சிற்கு பின்னர் கடற்கரையில் விடுமுறையை கொண்டாட கிளம்பிய இஸ்ரேலிய மக்கள் ஈரான்
    ரஃபா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் அறிவிப்பு: எகிப்து கடும் எதிர்ப்பு  இஸ்ரேல்
    தீவிரமடைந்தது பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: அமெரிக்க பல்கலைக்கழகங்கள் முழுவதும் ஏராளமானோர் கைது அமெரிக்கா

    இஸ்ரேல்

    2 ரஃபா பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் காசா
    ஈரான் கைப்பற்றிய இஸ்ரேல் கப்பலில் இருந்து 5 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர் ஈரான்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு  அமெரிக்கா
    ரஃபாவில் கொல்லப்பட்டார் இந்தியாவை சேர்ந்த ஐநா ஊழியர்: இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை இல்லை என்கிறது அமெரிக்கா  இந்தியா

    லெபனான்

    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    லெபனான்: இஸ்ரேலில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர் பிரதமர்
    இஸ்ரேலுக்கு எதிராக போரிட ஹமாஸுடன் இணைவதற்கு தயாராகும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    உலகம்

    ஓமன் கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்து: 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயம்  உலக செய்திகள்
    வரலாற்று வாக்கெடுப்புக்குப் பிறகு 200 'இனவெறி' தாவரங்களின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன உலக செய்திகள்
    ஏமன் கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் தாக்குதல்: 3 பேர் பலி  ஏமன்
    அமைதியின்மையைத் தூண்டிய பெரும்பாலான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது பங்களாதேஷ் நீதிமன்றம்  பங்களாதேஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025