NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஜனவரிக்குள் முடிவடையும் என கருதும் அமெரிக்க அதிகாரிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஜனவரிக்குள் முடிவடையும் என கருதும் அமெரிக்க அதிகாரிகள்
    இஸ்ரேல் தாக்குதலில் இடிபாடுகளான காசாவின் கட்டடங்கள்.

    இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஜனவரிக்குள் முடிவடையும் என கருதும் அமெரிக்க அதிகாரிகள்

    எழுதியவர் Srinath r
    Dec 06, 2023
    12:18 pm

    செய்தி முன்னோட்டம்

    காசாவின் தெற்கு பகுதியை குறிவைத்து தற்போது நடந்து வரும் இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஜனவரிக்குள் முடிவடையும் எனவும்,

    பின்னர், இஸ்ரேல் குறிப்பிட்ட ஹமாஸ் போராளிகளை குறிவைக்கும் குறைந்த தீவிரத் தன்மை கொண்ட தாக்குதல்களை கையில் எடுக்கலாமென, அமெரிக்க அதிகாரிகள் சிஎன்என் இடம் தெரிவித்துள்ளனர்.

    கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலுக்குப் பின், இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் மூண்டது.

    கடந்த நவம்பர் 26 ஆம் தேதி, 7 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. பின்னர்,போர் நிறுத்த நீட்டிப்பு ஒப்பந்தம் தோல்வியடைந்ததால், போர் மீண்டும் தொடங்கியது.

    முன்னர் வடக்கு காசா பகுதியில் தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், தற்போது கான் யூனீஸ் உள்ளிட்ட, காசாவின் தெற்கு பகுதிகளிலும் தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது.

    2nd card

    பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து, இஸ்ரேல எச்சரித்த அமெரிக்கா

    தெற்கு காசாவில் தரைவழித் தாக்குதல் புதிய அத்தியாயத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்து வரக்கூடிய வாரங்களில் இஸ்ரேலின் தாக்குதல் வெள்ளை மாளிகைக்கு கவலைகளை ஏற்படுத்தியதாக மூத்த அதிகாரி அமெரிக்க தெரிவித்தார்.

    மேலும் அந்த அதிகாரி, வெள்ளை மாளிகை இஸ்ரேலிடம் "கடுமையான" மற்றும் "நேரடி" உரையாடல்களை நிகழ்த்தியதாகவும்,

    வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் செய்ததை தெற்கு பகுதியில் செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

    காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தற்போது வரை 16,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, ஹமாஸ் நிர்வகிக்கும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல், சில ஆயிரம் ஹமாஸ் போராளிகளை கொன்றுள்ளதாக கூறுகிறது.

    3rd card

    இஸ்ரேலால் அதிக தீவிரம் கொண்ட ராணுவ நடவடிக்கைகளை காலவரையற்ற மேற்கொள்ள முடியாது

    இஸ்ரேல் காசா பகுதியில் அதிக தீவிரம் கொண்ட ராணுவ நடவடிக்கைகளை காலவரையற்ற மேற்கொள்ள முடியாது என அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.

    இதற்கு காரணமாக, இஸ்ரேலால் அணிதிரட்டப்பட்ட ராணுவத்தை பராமரிக்க முடியாது என்றும், இஸ்ரேல் தனது வடக்கு எல்லையில் லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்பொல்லாவின் தினசரி தாக்குதல்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

    மேலும் அமெரிக்கா அதிகாரிகள், தாங்கள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் செய்தது போல, அதிக தீவிரம் கொண்ட தாக்குதல்களை குறைத்துக் கொண்டு, பயங்கரவாத தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் என நம்புவதாக தெரிவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    அமெரிக்கா
    காசா

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு காசா
    சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல் அமெரிக்கா
    அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம் அமெரிக்கா
    16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு காசா

    இஸ்ரேல்

    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன் காசா
    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்  காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்
    காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரூடோ, பதிலளித்த நெதன்யாகு காசா

    அமெரிக்கா

    காசா போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்தார் அமெரிக்க அதிபர்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இந்திய தூதரை வழி மறித்து தகராறு செய்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்: நியூயார்க்கில் பரபரப்பு  நியூயார்க்
    அமெரிக்காவில் பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு துப்பாக்கி சூடு
    பென்டகன், வெள்ளை மாளிகையை உளவு செயற்கைக்கோள் படம் பிடித்ததாக கூறும் வட கொரியா  வட கொரியா

    காசா

    காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி இஸ்ரேல்
    காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா இஸ்ரேல்
    காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்-ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி வெளியேறினர் இஸ்ரேல்
     காசாவில் கடும் போருக்கு மத்தியில் திறக்கப்பட்ட புதிய பள்ளி இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025