NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / லெபனானில் உள்ள பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல்: போர் விரிவடைய வாய்ப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    லெபனானில் உள்ள பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல்: போர் விரிவடைய வாய்ப்பு 
    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்லவுள்ளார்.

    லெபனானில் உள்ள பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல்: போர் விரிவடைய வாய்ப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 17, 2023
    09:45 am

    செய்தி முன்னோட்டம்

    லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மீது இஸ்ரேல் நேற்று ஒரே இரவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

    "லெபனான் பிரதேசத்தில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் இராணுவ இலக்குகளை இஸ்ரேலிய இராணுவம் தாக்கியது" என்று இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் ஹமாஸ் குழுவும் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் கூட்டாளிகளாகும்.

    எனவே, இஸ்ரேல் ஹெஸ்புல்லா மீது தற்போது தாக்குதல் நடத்தி இருப்பதால், இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் மேலும் விரிவடையும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    பிஜியூக்

    இஸ்ரேல் போரில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் 

    நேற்றைய இஸ்ரேல் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல்-லெபனான் எல்லையில் இருந்த ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை இஸ்ரேல் அதிகாரிகள் வெளியேற்றத் தொடங்கினர்.

    இதற்கிடையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்லவுள்ளார்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இஸ்ரேல் பயணம் குறித்து பதிவிட்டிருக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன், "இஸ்ரேல்-அமெரிக்காவின் ஒற்றுமையை பறைசாற்றுவதற்காகவும், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான எங்களின் இரும்புக் கவச உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்க்காகவும்" அமெரிக்க அதிபர் நாளை இஸ்ரேல் செல்வார் என்று கூறியுள்ளார்.

    இந்நிலையில், காசா பகுதியில் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் இராணுவம் முடிவு செய்துள்ளது.

    அந்த பகுதியில் வசித்து வந்த 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாலஸ்தீனம்
    லெபனான்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    இஸ்ரேல்

    இஸ்ரேல் போர் எதிரொலி- நாடு திரும்பும் விடாமுயற்சி படக்குழு தமிழ் திரைப்படம்
    பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து இஸ்ரேலுக்கு கணடனம் தெரிவித்தது பாகிஸ்தான்  பாகிஸ்தான்
    அதிகரிக்கும் எதிர்ப்புகள்: இஸ்ரேல் போர் குறித்து காங்கிரஸ் கட்சி என்ன கூறியது? காங்கிரஸ்
    இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்ட ரகசிய ஹமாஸ் தளபதி இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை? இஸ்ரேல்
    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்
    இன்று இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் அமெரிக்கா
    கோடி கணக்கில் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை டெல்லியில் இருந்து திருடிய பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் டெல்லி

    பாலஸ்தீனம்

    இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்கள் - தமிழக அரசு அறிவிப்பு  இஸ்ரேல்
    காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முடக்க இருக்கிறது இஸ்ரேல்  இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    லெபனான்

    போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    லெபனான்: இஸ்ரேலில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர் பிரதமர்
    இஸ்ரேலுக்கு எதிராக போரிட ஹமாஸுடன் இணைவதற்கு தயாராகும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025