LOADING...
'பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் தான்': ஈரானை மிரட்டும் டிரம்ப்
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மிரட்டலான தொனியை மாற்றிக்கொள்ளவில்லை

'பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் தான்': ஈரானை மிரட்டும் டிரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 09, 2026
10:37 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மிரட்டலான தொனியை மாற்றிக்கொள்ளவில்லை. "அமெரிக்கா மீண்டும் வந்துவிட்டது" என்று முழங்கியுள்ள அவர், இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை அமெரிக்க ராணுவம் ஈரானை சுற்றியே நிலைகொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார். 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், அமெரிக்காவின் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் அனைவரும் தற்போதைய இடங்களிலேயே தொடர்வார்கள் என்று கூறியுள்ளார். "உண்மையான ஒப்பந்தம் எட்டப்பட்டு, அது முழுமையாகப் பின்பற்றப்படும் வரை கூடுதல் தளவாடங்களுடன் எங்கள் படைகள் அங்கேதான் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை ஈரான் ஒப்பந்தத்தை மீறினால், இதுவரை உலகம் கண்டிராத அளவிற்கு மிகப்பெரிய அளவில் "துப்பாக்கிச் சூடு" தொடங்கும் என்று எச்சரித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ஹார்முஸ் நீரிணை

ஹார்முஸ் நீரிணையும் "அடுத்த வெற்றியும்"

ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்பதிலும், ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பாகத் திறந்திருக்க வேண்டும் என்பதிலும் அமெரிக்கா உறுதியாக உள்ளது. தற்போதைய இரண்டு வார கால இடைவெளியில் அமெரிக்க ராணுவம் ஓய்வெடுத்துக் கொண்டும், தங்களை ஆயுதங்களால் நிரப்பிக் கொண்டும் இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், "எங்கள் ராணுவம் தனது அடுத்த வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது" என்று அவர் கூறியிருப்பது, மத்திய கிழக்கைத் தாண்டி வேறு ஏதேனும் ராணுவ நடவடிக்கைத் திட்டங்கள் இருக்கிறதா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Advertisement

முரண்பாடு

அணுசக்தி விவகாரத்தில் முரண்பாடு

ஈரான் வழங்கிய 10 அம்சத் திட்டத்தை முதலில் "செயல்படுத்தக்கூடியது" என்று வர்ணித்த ட்ரம்ப், பின்னர் அதில் முரண்பாடுகள் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, ஈரானின் பாரசீக மொழி (Farsi) பதிப்பில் யுரேனியம் செறிவூட்டலைத் தொடர அனுமதி இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அந்தத் திட்டம் "மோசடியானது" என அவர் சாடினார். அணு ஆயுதத் தயாரிப்பிற்கு தேவையான யுரேனியம் செறிவூட்டலை ஈரான் முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்பதில் அமெரிக்கா பிடிவாதமாக உள்ளது.

Advertisement

லெபனான்

லெபனான் தாக்குதல்களும் நிலைகுலையும் போர் நிறுத்தமும்

தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடியது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், அந்த வழித்தடத்தை மீண்டும் திறக்க வேண்டும் என வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்தாலும், மறுபுறம் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்வது இந்தப் போர் நிறுத்தத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

Advertisement