NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அடுத்தடுத்து 140 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்; இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தது ஹிஸ்புல்லா
    அடுத்த செய்திக் கட்டுரை
    அடுத்தடுத்து 140 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்; இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தது ஹிஸ்புல்லா
    140 ராக்கெட்டுகளை அடுத்தடுத்து ஏவி இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தது ஹிஸ்புல்லா

    அடுத்தடுத்து 140 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்; இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தது ஹிஸ்புல்லா

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 20, 2024
    07:45 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏறக்குறைய ஒரு வருட போரில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் மிகத் தீவிரமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்ட ஒரு நாளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) லெபனான்-இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் மீண்டும் மாறிமாறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    ஐநா சபை இருதரப்பும் அமைதியை கடைபிடிக்க வலியுறுத்திய நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

    முன்னதாக, பேஜர் மற்றும் வாக்கி டாக்கி போன்ற அடுத்தடுத்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா சபதம் செய்த ஒரு நாளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை வடக்கு இஸ்ரேலை ஹிஸ்புல்லா 140 ராக்கெட்டுகளால் தாக்கியது.

    இதற்கிடையே, லெபனானுடனான எல்லையில் உள்ள தளங்களை குறிவைத்து மூன்று அலைகளில் ராக்கெட்டுகள் வந்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

    தாக்குதல்

    இஸ்ரேல் தாக்குதல்

    இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான ஹிஸ்புல்லா ராக்கெட் லாஞ்சர்களை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் வியாழனன்று கூறியது.

    கடந்த அக்டோபரில் போர் தொடங்கியதில் இருந்து இதுபோன்ற மிகப்பெரிய தாக்குதல் இது என்று லெபனானில் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஹிஸ்புல்லாவின் தாக்குதல்களுக்கு இடையில், வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய விமானங்கள் தெற்கு லெபனானில் குறைந்தது மூன்று கிராமங்களைத் தாக்கியதாக லெபனானின் பாதுகாப்பு ஆதாரங்கள் மற்றும் ஹிஸ்புல்லாவின் அல்-மனார் தொலைக்காட்சி தெரிவித்தது.

    இந்த தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் மிகப்பெரிய அளவில் போர்ப்பதற்றம் உருவாகியுள்ளது. விரைவில் இது முழுநீள போராக வெடிக்கும் என பாதுகாப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    லெபனான்
    மத்திய கிழக்கு
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    இஸ்ரேல்

    ஈரான் கைப்பற்றிய இஸ்ரேல் கப்பலில் இருந்து 5 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர் ஈரான்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு  அமெரிக்கா
    ரஃபாவில் கொல்லப்பட்டார் இந்தியாவை சேர்ந்த ஐநா ஊழியர்: இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை இல்லை என்கிறது அமெரிக்கா  இந்தியா
    இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்பும் மசோதாவை நிறைவேற்றியது அமெரிக்கா பிரதிநிதிகள் சபை அமெரிக்கா

    லெபனான்

    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    லெபனான்: இஸ்ரேலில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர் இஸ்ரேல்
    இஸ்ரேலுக்கு எதிராக போரிட ஹமாஸுடன் இணைவதற்கு தயாராகும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    மத்திய கிழக்கு

    டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர் அமெரிக்கா
    குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் அகமது அல் சபா காலமானார்  உள்துறை
    ஈரானில் இரட்டை குண்டுவெடிப்புகளால் தாக்கப்பட்ட காசிம் சுலைமானி கல்லறை- யார் அவர்? ஈரான்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஈரானின் குண்டு வீச்சிற்கு பின்னர் கடற்கரையில் விடுமுறையை கொண்டாட கிளம்பிய இஸ்ரேலிய மக்கள் ஈரான்
    ரஃபா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் அறிவிப்பு: எகிப்து கடும் எதிர்ப்பு  இஸ்ரேல்
    தீவிரமடைந்தது பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: அமெரிக்க பல்கலைக்கழகங்கள் முழுவதும் ஏராளமானோர் கைது அமெரிக்கா
    இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்: அமெரிக்கா முழுவதும் 550 பேர் கைது  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025